Published : 07 Oct 2025 06:23 AM
Last Updated : 07 Oct 2025 06:23 AM

விவசாயிகள் தற்கொலை குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்க வேண்டும்: விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

சென்னை: தமிழ்​நாடு விவ​சா​யிகள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் பி.எஸ்​.​மாசிலாமணி வெளி​யிட்ட அறிக்​கை: மத்​திய அரசின் தேசிய குற்​றப்​ப​திவு ஆவண காப்​பகம், இந்​தியா முழு​வதும் விவ​சா​யிகள் மற்​றும் விவ​சாய தொழிலா​ளர்​களின் தற்​கொலை தொடர்பான புள்ளி விவரங்​களை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி 2022-ல் நாடு முழு​வதும் 1.71 லட்​சம் பேர் தற்​கொலை செய்​துள்​ளனர். அதில் 4,690 பேர் விவ​சா​யிகள். 6,096 பேர் விவ​சா​யத் தொழிலா​ளர்​கள். தொடர்ந்து 2023-ம் ஆண்​டில் தற்​கொலைகளின் எண்​ணிக்கை கொஞ்​சம் குறைந்​துள்​ளது.

உலகின் வளர்ந்த நாடு​களுக்கு இணை​யாக இந்​தியா வளர்ந்து வரு​வ​தாக​வும், வேளாண் உற்​பத்தி உயர்ந்​து, வேளாண் மகசூல் மும்​மடங்கு உயர்ந்​திருப்​ப​தகா​வும், இதனால் விவ​சா​யிகள் வரு​மானம் இரு​மடங்கு அதி​கரித்​திருப்​ப​தாக​வும் பிரதமர் அறி​வித்​தும் விவசா​யிகளின் தற்​கொலைகள் ஏன் தொடர்​கிறது. பல பரு​வங்​களில் மகசூலில் பாதிப்​பு​களே அதி​கம். அதே​போல் பேரிடர் கால பாதிப்​பு​களுக்கு நிவாரணம் கிடையாது.

வேளாண் கடன்​களுக்கு அபராத வட்​டி, வேளாண் பொருட்​களுக்கு ஆதார விலை நிர்​ண​யம் இல்லை போன்ற பல காரணங்​களால் விவ​சா​யிகளும், விவ​சா​யத் தொழிலா​ளர்​களும் தற்​கொலைக்கு ஆளாகின்​றனர். இந்த தற்​கொலை கணக்​கும் முழு​மை​யானதல்ல. தற்​கொலைகள் அரசுக்கு தெரி​யாமல் மறைக்​கப்​படு​கின்​றன.

பல நேரங்​களில் வேளாண் இழப்​பால் ஏற்​பட்ட தற்​கொலை​யாக காவல்​துறையோ, வரு​வாய்த் துறையோ ஏற்​றுக்​கொள்​வ​தில்​லை. இவற்றை ஆய்வு செய்ய விவ​சாய சங்க பிர​தி​நி​தி​களு​டன் இணைந்து மத்​திய, மாநில அரசுகள் மாநில அளவில் தனி குழு அமைத்து தீர்வு காண வேண்​டும். இவ்​வாறு அவர் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x