Published : 07 Oct 2025 05:59 AM
Last Updated : 07 Oct 2025 05:59 AM

தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுக்க வலியுறுத்தி அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆர்ப்பாட்டம்

அரசு கேபிள் டிவி நிறுவனத்தில், தனியார் நிறுவனத்தின் அத்துமீறலை தடுத்து நிறுத்தக்கோரி, அரசு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தினர் சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சட்டப்பேரவை குழுத் தலைவர் நாகை மாலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். | படம்: எல். சீனிவாசன் |

சென்னை: அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், தனி​யார் நிறு​வனத்​தின் அத்துமீறலை தடுத்து நிறுத்​தக்​கோரி அரசு கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் சங்​கத்​தினர் சென்​னை​யில் நேற்று ஆர்ப்​பாட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தில், மந்​திரா எனும் தனி​யார் நிறு​வனம் ஆதிக்​கம் செலுத்தி பல ஆண்​டு​களாக தேங்​கிக் கிடக்​கும் செட்​டாப் பாக்​ஸ்​களை வாங்​க​வும், நல்ல நிலை​யில் இருக்​கும் பாக்​ஸ்​களை மாற்​ற​வும் நிர்ப்​பந்​திப்​பதை தடுக்க வேண்​டும். ஏற்​கெனவே தொழில் நடத்​திவரும் இடங்​களில் புதி​ய​வர்​களுக்கு ஒளிபரப்பு (எல்​சிஓ) உரிமம் வழங்​கு​வதை நிறுத்த வேண்​டும்.

தமிழ்​நாடு நகர்ப்​புற வாழ்​விட மேம்​பாட்டு வாரிய குடி​யிருப்​பு​களில் அரசு கேபிள் டிவி செட்​டாப் பாக்​ஸ்​களைத்​தான் பொருத்த வேண்​டுமென்று நிர்ப்​பந்​திப்​ப​தைக் கைவிட வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி அரசு கேபிள் டிவி அலு​வல​கத்தை முற்​றுகை​யிடும் போராட்​டத்தை தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கம் அறி​வித்​தது.

இதையொட்டி சென்னை எழும்​பூர் ராஜரத்​தினம் மைதானத்​தில் நேற்று சங்​கத்​தினர் ஒன்று கூடி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கினர். சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி தலைமை தாங்​கி​னார். மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் சட்​டப்​பேரவை குழுத் தலை​வர் நாகை மாலி ஆர்ப்​பாட்​டத்தை தொடங்​கி​வைத்து பேசுகை​யில், ``ஆட்சி மாறி​யும் காட்சி மாறாத நிலை உள்​ளது.

அரசு கேபிள் டிவி நிறு​வனத்​தின் போர்​வை​யில் தனி​யார் நிறு​வனம் அத்துமீறுவதை​யும், அதற்கு அதி​காரி​கள் துணை​யாக இருப்​ப​தை​யும் அனு​ம​திக்க முடி​யாது. ஆபரேட்​டர்​களின் கோரிக்​கைகள் தொடர்​பாக முதல்​வரை நேரடி​யாக சந்​தித்​துப் பேச மார்க்​சிஸ்ட் கட்சி நடவடிக்கை எடுக்​கும்'' என்று தெரி​வித்​தார்.

இதற்​கிடையே, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் அரசு கேபிள் டிவி மேலாண் இயக்​குநர் வைத்​தி​நாதன், தமிழக கேபிள் டிவி ஆபரேட்​டர்​கள் பொதுநலச் சங்​கத்​தின் தலை​வர் சுப.வெள்​ளைச்​சாமி, பொதுச்​செய​லா​ளர் எஸ்​.​ரா​தாகிருஷ்ணன் உள்​ளிட்ட நிர்​வாகி​களு​டன் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.

இதன்​பின் செய்​தி​யாளர்​களிடம் சுப.வெள்​ளைச்​சாமி கூறுகை​யில், ``முதல்​வரை சந்​தித்து கோரிக்​கைகளை வலி​யுறுத்த அனு​மதி கோரி 4 மாத​மாக காத்​திருக்​கிறோம். அனு​மதி கிடைக்​காத நிலை​யில் இந்த போராட்​டத்தை முன்​னெடுத்​தோம்.

இயக்​குநருடன் நடை​பெற்ற பேச்​சு​வார்த்​தை​யில் புதி​தாக ஒளிபரப்பு உரிமம் (எல்​சிஓ) வழங்க மாட்​டோம் என்று உறு​தி​யளித்​துள்​ளார். அக்​.8-ம் தேதி முதல்​வரை சந்​திக்க ஏற்​பாடு செய்​வ​தாக மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முக​மும், நாகை மாலி எம்​எல்​ஏ​வும்​ உறு​தி அளித்​துள்​ளனர்​’’ என்​று தெரிவித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x