Published : 06 Oct 2025 06:31 AM
Last Updated : 06 Oct 2025 06:31 AM

பெரியாருக்கு துரோகம் செய்யவில்லை: ஆ.ராசாவுக்கு வீரபாண்டியன் பதில் 

சென்னை: திரா​விடர் கழகத்​தின் சுயமரி​யாதை இயக்க நூற்​றாண்டு நிறைவு விழா மாநாடு, செங்​கல்​பட்டு மாவட்​டம் மறைமலைநகரில் நேற்று முன்​தினம் நடை​பெற்​றது. இதில், திமுக துணை பொதுச்​செய​லா​ள​ரும், எம்​.பி.​யு​மான ஆ.ராசா பேசும்​போது, “பொது​வுடைமை இயக்​கத்தினர் ஒரு காலத்​தில் பெரி​யாரை எதிர்த்​தனர். ஆனால், இந்த மேடை​யில் பெரி​யார்​தான் தேவை என்று அக்​கட்​சி​யினர் சொல்​கின்​றனர்” என்று பேசி​னார்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன் பேசும்​போது, “நாங்​கள் கருத்​தால் முரண்​பட்​டது உண்​மை. ஆனால் பெரி​யாருக்கு தீங்கு செய்​ய​வில்​லை. துரோகம் செய்​ய​வில்​லை. நாங்​கள் இங்கு வந்து மேடை​யில் அமர்ந்​திருக்​கிறோம் என்​றால் பெரியார் எங்​களுக்கு தேவைப்​படு​கிறார், நிரப்​பிக் கொள்​கிறோம்.

ஆனால் பெரி​யார் வந்து சேர்ந்த இடம் கம்​யூனிஸம், சமத்​து​வம் என்​பதை ஆ.ரா​சாவுக்கு சுட்​டிக்​காட்ட விரும்​பு​கிறேன். திரா​விட இயக்​கம், கம்​யூனிஸ்ட் இயக்​கம் இரண்​டின் இலக்​கும் சமதர்​மம், சமத்​து​வம்​தான். எதிரி ஆர்​எஸ்​எஸ், பாஜக. அதிலிருந்து இடறி​விடக்​கூ​டாது என்​பது​தான் என் வேண்​டு​கோள்” என்று தெரி​வித்​தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x