Published : 06 Oct 2025 06:28 AM
Last Updated : 06 Oct 2025 06:28 AM

முறைகேடு கண்டறியப்பட்டால் ஜல்ஜீவன் நிதி நிறுத்தப்படும்: தமிழக அரசுக்கு பாஜக அறிவுறுத்தல் 

சென்னை: ஜல்​ஜீவன் திட்​டத்​தில் முறை​கேடு கண்​டறியப்​பட்​டால் நிதி நிறுத்​தப்​படும் என மத்​திய அரசு அறி​வித்​துள்​ளதை தமிழக அரசு கவனத்​தில் கொள்ள வேண்​டும் என தமிழக பாஜக தெரி​வித்​துள்​ளது.

இதுதொடர்​பாக கட்​சி​யின் செய்​தித் தொடர்​பாளர் ஏ.என்​. எஸ்​.பிர​சாத் விடுத்த அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய அரசின் நல திட்​டங்​களை தமிழகத்​தில் நிறைவேற்ற நிதியை பெற்​றுக் கொண்​டு, திட்​டங்​களை முழு​மை​யாக செயல்​படுத்​தாமல் நிர்​வாக சீர்​கேடு​களுக்கு இலக்​கண​மாக திமுக அரசு விளங்​கு​கிறது. மத்​திய அரசின் ஜல்​ஜீவன் திட்​டத்​தின்​கீழ் ஏறத்​தாழ 1 கோடியே 12 லட்​சம் வீடு​களுக்கு குடிநீர் குழாய் இணைப்​பு​கள் வழங்​கப்​பட்​டுள்​ளன.

தற்​போது இந்​தத் திட்​டத்​தில், தாமதப்​படுத்தி பணி​கள் செய்​யப்​பட்​டால், ஒப்​பந்​த​தா​ரர்​களுக்கு வழங்க வேண்​டிய நிதியை நிறுத்தி வைக்​கும்​படி மத்​திய பாஜக அரசு அறி​வுறுத்​தி​யுள்​ளது. இதுகுறித்து தமிழக அரசு போதிய கவனம் செலுத்​தா​விட்​டால் ஊழல் மற்​றும் நிர்​வாக சீர்​கேடு​கள் காரண​மாக தமிழகத்​துக்கு வர வேண்​டிய நிதி நிறுத்​தப்​பட்டு தமிழக மக்​கள் பாதிப்​படை​யும் சூழ்​நிலை உரு​வாகும். எனவே, குடிநீர் குழாய் இணைப்பு அளிக்​கப்​பட்​டுள்ள வீடு​களுக்கு குடிநீர் அளிக்​கப்​படு​வதை உறுதி செய்ய வேண்​டும்.

மத்​திய அரசு யாரை​யும் கன்ட்​ரோல் செய்து வைத்​துக்​கொள்ள விரும்​புவ​தில்​லை. தமிழக முதல்​வர் மத்​திய அரசின் திட்​டங்​களை நிறைவேற்​று​வ​தில், தமிழகத்​தின் உள்​கட்​டமைப்பு வளர்ச்​சி​யில் அக்​கறை கொள்​ளாமல், தொடர்ந்து மத்​திய அரசை குறை சொல்​வதும் பிரதமர் மோடியை விமர்​சித்து அரசி​யல் செய்​வதும் தான் முதல்​வர் பணி என்ற குறிக்​கோளில் செயல்​படு​வது தமிழகத்​துக்கு பின்​னடைவை ஏற்​படுத்​தும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x