Published : 06 Oct 2025 05:55 AM
Last Updated : 06 Oct 2025 05:55 AM

விருதுநகர் | வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

விருதுநகர்: ​விருதுநகர்​ அரு​கே​யுள்​ள கோவில்​வீ​ரார்​பட்​டியைச்​ சேர்ந்​தவர்​ அய்​ய​னார்​. தொழிலா​ளி. இவரது மனை​வி தேவி​கா. இவர்​களது மகன்​ அரவிந்த்​ (7), அப்​பகு​தி​யில்​ உள்​ள பள்​ளி​யில்​ முதலாம்​ வகுப்​புப்​ படித்​து வந்​தார்​.

இந்​நிலை​யில், நேற்று முன்​தினம் மாலை அய்​ய​னார், தேவி​கா, அரவிந்த் மற்​றும் தேவி​கா​வின் அண்​ணன் மகன் ஆனந்​தகு​மார் ஆகியோர் பைக்​கில் மலைப்​பட்டி பெரு​மாள் கோயிலுக்​குச் சென்​றனர். பின்​னர், அங்​கிருந்து மீண்​டும் வீட்​டுக்கு பைக்​கில் புறப்​பட்​டனர். அய்​ய​னார் பைக்கை ஓட்​டி​னார்.

கோவில்​வீ​ரார்​பட்டி அரு​கே​யுள்ள காட்​டாற்று ஓடை தரைப் பாலத்​தில் அதிக அளவில் வெள்​ளம் சென்​றது. அதைப் பொருட்​படுத்​தாமல் அய்​ய​னார் பைக்​கில் கடக்க முயன்​றார். அப்​போது, 4 பேரும் வெள்​ளத்​தில் அடித்​துச் செல்​லப்​பட்​டனர். இதில் அய்​ய​னார், தேவி​கா, ஆனந்த்​கு​மார் ஆகியோர் நீரிலிருந்து தப்பி வந்​தனர். ஆனால், சிறு​வன் அரவிந்த் நீரில் அடித்​துச் செல்​லப்​பட்​டார். பின்னர், சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, சிறு​வன் ஏற்​கெனவே இறந்​து​ விட்​ட​தாக மருத்துவர்கள் தெரி​வித்​தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x