Published : 05 Oct 2025 11:04 AM
Last Updated : 05 Oct 2025 11:04 AM

கரூர் சம்பவம் தொடர்பான விசாரணை: வழக்கறிஞர்கள் குழுவுடன் விஜய் ஆலோசனை

சென்னை: கரூர் சம்​பவம் தொடர்​பான விசா​ரணை குறித்து வழக்​கறிஞர்​கள் குழு​வுடன் தவெக தலை​வர் விஜய் ஆலோ​சனை நடத்தி வரு​கிறார்.

கரூரில் தவெக பிரச்​சா​ரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் சிபிஐ விசா​ரணை கோரிய தவெக மனு தள்​ளு​படி செய்யப்பட்டதுடன், பொதுச் செய​லா​ளர் ஆனந்த், இணைச் செய​லா​ளர் நிர்​மல் குமாரின் முன்​ஜாமீன் மனுக்​கள் தள்​ளு​படி செய்​யப்​பட்​டன.

இதற்​கிடை​யில், தவெக தேர்​தல் பிரச்​சார மேலாண்​மைப் பிரிவு பொதுச் செய​லா​ளர் ஆதவ் அர்​ஜுனா வன்​முறையைத் தூண்​டும் வகை​யில் எக்ஸ் தளத்​தில் கருத்து பதி​விட்​டது தொடர்​பாக, அவர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு நீதி​மன்​றம் தெரி​வித்​துள்​ளது.

இந்​நிலை​யில், தவெக வழக்​கறிஞர்​கள் பிரிவுடன் அடுத்​தகட்ட நடவடிக்​கைகள் குறித்து விஜய் நேற்று ஆலோ​சனை நடத்​தி​னார். அப்​போது, கரூர் சம்​பவத்​தில் சிபிஐ விசா​ரணை கோரி உச்ச நீ​தி​மன்​றத்தை நாட தவெக தரப்பு முடிவு செய்​திருப்​ப​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. இது தொடர்​பாக சட்ட வல்​லுநர்​களு​ட​னும் விஜய் தீவிர ஆலோ​சனை நடத்த இருப்​ப​தாக​வும் கூறப்​படு​கிறது.

இதற்​கிடை​யில், இந்​திய கூடைப்​பந்து கூட்​டமைப்​பின் தலை​வ​ராக செயல்​பட்டு வரும் ஆதவ் அர்​ஜு​னா, உத்​த​ராகண்ட் மாநிலத்​தில் நடை​பெறும் தேசிய சப்​-ஜுனியர் கூடைப்​பந்து போட்​டிக்​காக டேராடூன் வந்​தார். அப்​போது விமான நிலை​யத்​தில் ஆதவ் அர்​ஜு​னா​விடம் அங்​கிருந்த செய்​தி​யாளர்​கள் கரூர் விவ​காரம் குறித்து கேள்வி எழுப்​பி​னார். அதற்கு பதில் அளித்த அவர், “நாங்​கள் நீதிக்​காக போ​ராடிக் கொண்​டிருக்​கிறோம். உண்மை விரை​வில் வரும்​” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x