Published : 05 Oct 2025 10:59 AM
Last Updated : 05 Oct 2025 10:59 AM

கூட்ட நெரிசல் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம்: முதல்வர் ஸ்டாலின் உறுதி

சென்னை: தமிழகம் மட்​டுமின்றி இந்​தி​யாவே பின்​பற்​றும் வகை​யில், கூட்ட நெரிசல் விபத்​துகளைத் தவிர்க்க, அனை​வரிட​மும் கலந்​தாலோ​சித்து 'நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வடிவ​மைப்​போம் என முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் தெரி​வித்​துள்​ளார்.

கரூரில் தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற நிகழ்​வில் நடை​பெற்ற சம்​பவம் தொடர்​பான வழக்​கில், உயர் நீதி​மன்​றம் பல்​வேறு கருத்​துக்​களை தெரி​வித்​துள்​ளது. இதுகுறித்து முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்​டுள்ள சமூக வலை​தளப்​ப​தி​வில் கூறி​யிருப்​ப​தாவது:

கரூர் துயரம் குறித்து உயர் நீதி​மன்​றம் கூறி​யுள்ள கருத்​துகள், வழி​காட்​டு​தல்​கள் அனைத்​தை​யும் தமிழக அரசு மிகத் தீவிர​மாக கவனத்​தில் கொண்டு செய​லாற்றி வரு​கிறது. கரூரில் நடந்த துயரத்​தால் நாம் அனை​வருமே நெஞ்​சம் கலங்​கிப் போயிருக்​கிறோம். தம் அன்​புக்​குரியோரை இழந்து தவிக்​கும் ஒவ்​வொரு குடும்​பத்​தின் கண்​ணீரை​யும் கண்டு தவிக்​கிறேன்.

உயர் நீதி​மன்ற உத்​தர​வின்​பேரில் அமைக்​கப்​பட்​டுள்ள சிறப்​புப் புல​னாய்​வுக் குழு தனது விசா​ரணை​யைத் தொடங்​கும். இதன்​மூலம், முழு உண்​மை​யை​யும் வெளிக்​கொண்டு வரு​வோம் என்று மாநிலத்​தின் முதல்​வ​ராக மக்​களுக்கு நான் உறு​தி​யளிக்​கிறேன். அனைத்து மட்​டங்​களி​லும் பொறுப்பு உறுதி செய்​யப்​படும்.

பலவற்​றி​லும் இந்​தி​யா​வுக்கே முன்​னோடி​யான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்​துகளைத் தவிர்ப்​ப​தி​லும் நாட்​டுக்கு வழி​காட்​டும். மாநிலம் முழு​வதும் துறை​சார் வல்​லுநர்​கள், அரசி​யல் கட்​சி​யினர், செயற்​பாட்​டாளர்​கள், பொது​மக்​கள் என அனை​வரோடும் கலந்​தாலோ​சித்து ஒரு முழு​மை​யான 'நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை வடிவ​மைப்​போம். தமிழகத்​துக்கு மட்​டுமல்ல, ஒட்​டுமொத்த இந்​தி​யா​வும் பின்​பற்​றத்​தக்க மாடலாக இது அமை​யும். துடைக்க முடி​யாத இந்​தத் துயரச் சம்​பவத்​தின் பின்​னணி​யில் அரசி​யல் நோக்​கோடு ஒரு​வரை ஒரு​வர் குற்​றம் சாட்​டா​மல் ஒரு நீண்​ட​காலத் தீர்வை நோக்​கிப் பயணிப்​போம்.

இந்​தக் கூட்டு முயற்​சி​யில் அனை​வரது யோசனை​கள், ஆலோ​சனை​களை​யும் வரவேற்​கிறேன். ஒவ்​வொரு உயிரும் விலைம​திப்​பில்​லாதது. நம் மக்​களின் இன்​னு​யிரைக் காக்​க​வும், இனி இப்​படி ஒரு பெருந்​துயரம் தமிழகத்​தில் மட்​டுமல்ல, இந்​தி​யா​வில் எங்​குமே நிகழாமல் தடுக்​க​வும் ஒன்றிணைவோம். இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x