Last Updated : 05 Oct, 2025 12:42 PM

 

Published : 05 Oct 2025 12:42 PM
Last Updated : 05 Oct 2025 12:42 PM

எ.வ.வேலு விசுவாசிக்கு செக் வைத்த செந்தில் பாலாஜி!

தொண்டர்களை தேர்தல் களத்துக்கு தயார்படுத்தும் அதேசமயத்தில், புகார்களில் சிக்கும் கட்சிப் நிர்வாகிகளை தேர்தல் சமயம் என்றுகூட பாராமல் களையெடுத்தும் வருகிறது திமுக தலைமை. அந்த விதத்தில் தான் கோவை மாநகர் மாவட்டச் செயலாளர் நா.கார்த்திக் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார்.

​கார்த்​திக் நீக்​கப்​பட்​டதன் பின்​னணி குறித்து நம்​மிடம் பேசிய கோவை மாநகர் மாவட்ட திமுக நிர்​வாகி​கள், “கோவை மாவட்​டம் அதி​முக கோட்டை என்ற இமேஜை உடைக்​கவே செந்​தில் ​பாலாஜியை கோவைக்கு அனுப்பி வைத்​தது தலை​மை. அப்​படி கோவைக்கு வந்த அவர், மைக்ரோ லெவலில் கட்​சி​யினரின் நடவடிக்​கை​களை கண்​காணித்து களை​யெடுப்பு நடவடிக்​கை​களை துரிதப்​படுத்தி வரு​கி​றார். அவர் கோவைக்கு பொறுப்​பேற்ற பிறகு நடந்த தேர்​தல்​களில் திமுக வெற்​றி​முகமே கண்​டிருப்​ப​தால் அவர் சொல்​வதை தலை​மை​யும் தட்​டா​மல் ஏற்​றுக் கொள்​கிறது.

செந்​தில்​ பாலாஜிக்​கும் கார்த்​திக்​கிற்​கும் தொடக்​கம் முதலே ஒத்​துப் போக​வில்​லை. அதனால் எப்​படி​யும் தனது தலைக்கு கத்தி வரும் என்​பதை உணர்ந்தே இருந்த கார்த்​திக், செந்​தில்​ பாலாஜி​யின் விசு​வாசிகளுக்கு முக்​கிய பொறுப்​பு​கள் வாய்க்​காமல் பார்த்​துக் கொண்​டார். இதனிடையே, கார்த்திக் தனது மனை​வியை கோவை மேய​ராக கொண்​டுவர தீவிர முயற்சி எடுத்​தார். ஆனால், செந்​தில் ​பாலாஜி அதை தந்​திர​மாகத் தடுத்​து​விட்​டார். அடுத்​த​தாக எம்பி தேர்​தலில் போட்​டி​யிட​வும் கார்த்​திக் ரெடி​யா​னார். செந்​தில்​ பாலாஜி அதை​யும் தடுத்து தனது விசு​வாசி​யான கணபதி ராஜ்கு​மாரை எம்​பி-​யாக்​கி​னார். அதேசம​யம் தனக்கு சீட் கிடைக்​காத ஆதங்​கத்​தில் இருந்​த​தால் கார்த்​திக்​கின் சொந்த பூத்​திலேயே அண்​ணா​மலை கூடு​தல் வாக்​கு​களைப் பெற்​றதும் நடந்​தது.

செந்​தில்​பாலாஜி சிபாரிசில் எம்பி ஆனவர் என்​ப​தால் கணபதி ராஜ்கு​மாருட​னும் கார்த்​திக்​கின் ஆதர​வாளர்​கள் ஒட்​டா​மல் நின்​றார்​கள். போஸ்​டர்​கள், விளம்​பரங்​களில் எம்​பி-​யின் படத்​தைப் போட​வி​டா​மல் கட்​சி​யினர் தடுக்​கப்​பட்​டார்​கள். செந்​தில்​பாலாஜி சிறைசென்​றதும், அவர் இனி கோவை பக்​கம் வரவே​மாட்​டார் என முடிவே செய்​து​விட்ட கார்த்​திக்​கின் ஆதர​வாளர்​கள், அப்​படியே பிடி​மானத்தை அமைச்​சர் எ.வ.வேலு பக்​கம் மாற்​றிக் கொண்​டார்​கள். ஆனால், அவர்​களின் கணிப்பு தவறாகி பாலாஜி மீண்​டும் கோவைக்கு திரும்​பி​னார்.

இதனிடையே, பணம் வாங்​கிக் கொண்டு கட்​சிப் பொறுப்​பு​களை வழங்​கு​வ​தாக புகார்​கள் பறந்​த​தால் கோவை மாநகர் மாவட்ட திமுக-​வில் சிலருக்கு பரிந்​துரைக்​கப்​பட்ட பதவி​களுக்கு தலைமை ஒப்​புதல் அளிக்​க​வில்​லை. கோவை திமுக என்​றால் அதில் தான் மட்​டுமே பிர​தானம் என காட்​டிக்​கொண்ட கார்த்​திக், கட்சி நலனை​விட தன்னை வளப்​படுத்​திக் கொள்​வ​திலேயே குறி​யாய் இருந்​தார். இதனிடையே, அதி​முக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி​யுடன் மறை​முக டீலில் இருப்​ப​தாக​வும் கோவை திமுக-​வினர் சிலர் மீது தலை​மைக்கு புகார்​கள் பறந்​தன. போதாதுக்​கு, திமுக-​வின் பவர் சென்​டர்​கள் குறித்து விமர்​சனம் செய்து கார்த்​திக் பேசி​ய​தாக ஆடியோ ஒன்​றும் வெளி​யாகி அவருக்கு நெருக்​கடியை அதி​கரித்​தது.

கார்த்​திக் தனது மாம​னார் வீட்​டில் கார் நிறுத்​து​வதற்கு இடைஞ்​சலாக இருக்​கும் என்​ப​தால் விளை​யாட்டு மைதானத்​துக்கு சுவர் எழுப்ப விடா​மல் தடுப்​ப​தாக சிங்​காநல்​லூர் அதி​முக எம்​எல்​ஏ-​வான ஜெய​ராம் புகார் தெரி​வித்​ததும் பிரளய​மானது. கார்த்​திக்​கிற்கு இக்​கட்​டான சூழ்​நிலை​கள் ஏற்​பட்ட போதெல்​லாம் அமைச்​சர் எ.வ. வேலு கரம்​கொடுத்து காப்​பாற்றி இருக்​கி​றார். ஆனால், இம்​முறை அவராலும் காப்​பாற்ற முடி​யாமல் கைமீறிப் போய்​விட்​டது. கார்த்​திக்கை கட்​டம் கட்​டிய செந்​தில்​பாலாஜி, அவரது இடத்​தில் தனது விசு​வாசி​யும் கார்த்​திக்​கின் நாயுடு சமூகத்​தைச் சேர்ந்​தவ​ரு​மான துரை.செந்​தமிழ்ச்​செல்​வனை உட்​கார​வைத்​து​விட்​டார்” என்​ற​னர்.

கார்த்​திக்​கின் ஆதர​வாளர்​களோ, “எங்கு சென்​றாலும் அங்​குள்ள கட்சி நிர்​வாகி​களை மாற்​றி​விட்டு அந்த இடத்​தில் தனது விசு​வாசிகளை அமர்த்​து​வது தான் செந்​தில்​பாலாஜி ஸ்டைல். ஐந்​தாக இருந்த கோவை மாவட்ட திமுக 3 மாவட்​ட​மாக சுருக்​கப்​பட்ட போதே மற்ற இரண்டு மாவட்​டங்​களுக்கு தனது விசு​வாசிகளை செய​லா​ள​ராக கொண்டு வந்த பாலாஜி, அப்​போதே கார்த்​திக்​கை​யும் மாற்ற நினைத்​தார். ஆனால், முடிய​வில்​லை. அதனால் சந்​தர்ப்​பத்​துக்கு காத்​திருந்து இப்​போது மாற்​றி​விட்​டார். என்​ன​தான் சொன்​னாலும் கடந்த அதி​முக ஆட்​சி​யில் கோவை மாவட்​டத்​திலேயே ஒரே ஒரு திமுக எம்​எல்​ஏ-​வாக இருந்து பொறுப்​பான எதிர்க்​கட்​சி​யாக செயல்​பட்​ட​வர் கார்த்​திக் என்​ப​தை​யும் நினைத்​துப் பார்க்க வேண்​டும்” என்​கி​றார்​கள்.

இதுகுறித்து கார்த்​திக்​கிடம் பேசினோம். “தி​முக எதிர்க்​கட்​சி​யாக இருந்த போது கட்​சிக்​காக போராடியதற்​காக சுமார் 40 வழக்​கு​கள் என் மீது உள்​ளன. அதி​முக-வை​யும், எஸ்​.பி.வேலுமணி​யை​யும் எதிர்த்து தீவிர அரசி​யல் செய்து வந்​தேன். தலைமை அறி​வித்த அனைத்​துப் போராட்​டங்​களை​யும் நடத்தி இருக்​கிறேன். எனவே, எனது மாற்​றம் என்​பது வழக்​க​மான ஒன்று தான். இதற்கு வேறெந்த பின்​னணி​யும் இல்​லை. இருந்​தும், காழ்​புணர்ச்​சி​யின் காரண​மாக எனது அரசி​யல் எதிரி​கள் எனக்கு எதி​ரான அவதூறு குற்​றச்​சாட்டு களை பரப்பி வரு​கின்​ற​னர். மாநில தீர்​மானக் குழு செய​லா​ளர் என்ற உயர்​வான பதவியை எனக்​குத் தந்​து​விட்​டுத்​தான் மாவட்​டச் செய​லா​ளர் பதவியி​லிருந்து என்னை விடு​வித்​திருக்​கிறது தலைமை என்​ப​தை​யும் தெரி​வித்​துக் கொள்​கிறேன்” என்​றார் அவர்.

அமைச்​சர் எ.வ.வேலு​வின் விசு​வாசி​யாக காட்​டிக்​கொண்ட கார்த்​திக் மாற்​றப்​பட்ட விவ​கார​மானது செந்​தில்​பாலாஜிக்கு வேறு வித​மாக சிக்​கலை உண்​டாக்​கி​னாலும் ஆச்​சரியமில்லை என்​றும் கிசுகிசுக்​கிறார்​கள் கோவை திமுக வட்​டாரத்​தில்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x