Published : 05 Oct 2025 10:48 AM
Last Updated : 05 Oct 2025 10:48 AM

வாழ்வாதாரத்தை உறுதி செய்ய முடியாததால் 1,968 விவசாயிகள் தற்கொலை: அன்புமணி விமர்சனம்

சென்னை: ‘​தி​முக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டு​களில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர்’ என்று பாமக தலை​வர் அன்​புமணி தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​: நாடு முழு​வதும் 2023-ம் ஆண்​டுக்​கான தற்​கொலைகள் மற்​றும் விபத்து உயி​ரிழப்​பு​கள் குறித்த புள்​ளி​விவரங்​களை தேசிய குற்ற ஆவணக் காப்​பகம் வெளி​யிட்​டுள்​ளது. இதில், தமிழகத்​தில் மொத்​தம் 19,483 பேர் தற்​கொலை செய்து கொண்​டுள்​ளனர். 22,686 பேர் தற்​கொலை செய்​து​கொண்ட மராட்​டி​யத்​துக்கு அடுத்​த​படி​யாக அதிக தற்​கொலைகள் நிகழும் மாநிலம் தமிழகம்​தான்.

விவ​சா​யிகள் வாழ வழியற்ற மாநில​மாக தமிழகம் திகழ்​வதையே இது காட்​டு​கிறது. இதற்கு முன் 2022-ம் ஆண்​டில் 738 விவ​சா​யிகளும், 2021-ம் ஆண்​டில் 599 விவ​சா​யிகளும் தற்​கொலை செய்து கொண்​டிருக்​கின்​றனர். திமுக ஆட்​சிக்கு வந்த 3 ஆண்​டுகளில் 1,968 விவ​சா​யிகள் தற்​கொலை செயது கொண்​டுள்​ளனர்.

விவ​சா​யிகளின் தற்​கொலைகளுக்கு பல காரணங்​கள் இருக்​கலாம். ஆனால், அவற்​றில் முதன்​மை​யானது விவ​சா​யிகளால் வாழ்​வா​தா​ரத்தை உறு​தி​ செய்ய முடி​யாதது​தான். அதுகுறித்த எந்​தக் கவலை​யும் இல்லாத திமுக அரசுக்கு மக்​கள் பாடம் புகட்​டு​வார்​கள். இவ்​வாறு​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x