Published : 05 Oct 2025 10:37 AM
Last Updated : 05 Oct 2025 10:37 AM

தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைக்கும் பாஜக, அதிமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

மறைமலை நகர்: ​தி​ரா​விடத்​துக்கு எதி​ராக பாஜக​வும் திரா​விடம் என்​றால் என்ன என்று தெரி​யாத பழனிச்​சாமி​யின் அதி​முக​வும், மீண்​டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைப்​ப​தாக முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

சென்​னையை அடுத்த மறைமலை நகரில் சுயமரி​யாதை இயக்க நூற்​றாண்டு நிறைவு விழா மாநாடு நேற்று நடை​பெற்​றது. திரா​விடர் கழகத் தலை​வர் கி.வீரமணி தலை​மை​யில் நடந்த இம்​மா​நாட்​டில் முதல்​வரும் திமுக தலை​வரு​மான மு.க.ஸ்​டா​லின் பேசி​யது:

பெரி​யார் பெயரில் பிர​மாண்ட நூல​கம் மற்​றும் அறி​வியல் ஆய்வு மையத்​துக்கு என்​னுடைய சம்​பளம் மற்​றும் திமுக​வின் 126 எம்​எல்​ஏக்​கள், 31 எம்.பி.க்களின் ஒரு மாதம் சம்​பள​மாக சுமார் ஒன்​றரை கோடி ரூபாய் வழங்​கப்​படும். அனைத்து சாதி​யினரும் அர்ச்​சக​ராக்​கும் திட்​டத்தை செயல்​படுத்​தி​யிருக்​கிறோம். இதில், பெண்​களை​யும் அர்ச்​சக​ராக்கி இருக்​கிறோம். காலனி என்ற சொல்லை அகற்றி இருக்​கிறோம். சாதிப் பெய​ரால் இருக்​கும் விடு​தியை சமூகநீதி விடு​தி​யாக மாற்றி இருக்​கிறோம். சாதி​யில் இறுதி எழுத்து ‘ர்' முடி​யும் வகை​யில் மாற்​றக் கோரி பிரதமருக்கு மனு அளித்​திருக்​கிறோம். வேற்​றுமையற்ற சமு​தா​யத்தை உரு​வாக்க திரா​விட மாடல் அரசு பாடு​பட்​டுக் கொண்​டிருக்​கிறது.

சுயமரி​யாதை இயக்​கத்​தின் பொன்​விழா கொண்​டாடும் நிலை​யில், இங்கு எது​வும் மாற​வில்லை என சிலர் சொல்​கிறார்​கள். அவர்​களின் கேள்வி​களில் இருப்​பது அக்​கறை அல்ல ஆணவம். ஆயிரம் ஆண்​டு​களாக உரு​வாக்​கிய கட்​டமைப்பை நூறு ஆண்​டு​களில் நாம் மாற்​று​வதற்​கான விதை மட்​டும் விதைத்​திருக்​கிறோம். இங்கு எது​வும் மாறக்​கூ​டாது என்று நினைக்​கிறவர்​கள், எல்​லாரும் சேர்ந்து சதி திட்​டம் போடு​கிறார்​கள். என்​னைப் பற்றி தொடர்ந்து அவதூறுகளை பரப்​பு​கின்​றனர். நான் எப்​பொழுதும் என் செயல்​களால் பதிலடி கொடுத்து வரு​கிறேன்.

கடைசித் தமிழர்​களின் மூச்​சிருக்​கும் வரை சுயமரி​யாதை உணர்வு இருக்​கும் வரை எப்​பேர்​பட்ட எதிரி வந்​தா​லும் தமிழர் இனத்தை அழிக்க முடி​யாது. சிலருக்கு சமூக நீதி பிடிக்​காது, இடஒதுக்​கீடு பிடிக்​காது, சமத்​து​வம் பிடிக்​காது, ஒற்​றுமை​யாக இருப்​பது பிடிக்​காது, தமிழ் பிடிக்​காது, தமிழர்​கள் பிடிக்​காது, நாம் தலைநிமிர்ந்து நடப்​பது பிடிக்​காது. சுயமரி​யாதை இயக்​கம் பெற்​றுக் தந்​தவற்றை பறிக்க ஒரு கூட்​டம் நினைக்​கிறது. அவர்​களின் சூழ்ச்​சியை தடுத்து நிறுத்​து​வது தான் திரா​விட மாடல்.

வரப்​போவது அரசி​யல் தேர்​தல் அல்ல, தமிழினம் தன்னை காத்​துக் கொள்​ளக்​கூடிய சமு​தா​யத் தேர்​தல். கொள்​கையற்ற அதி​முக​வின​ரால் பத்​தாண்டு பாழாய் போன தமிழகத்தை மீட்​டெடுத்து நான்கு ஆண்​டில் பலப்​படுத்தி இருக்​கிறோம். திரா​விடத்​துக்கு எதி​ராக பாஜக​வும் திரா​விடம் என்​றால் என்ன என்று தெரி​யாத பழனிச்​சாமி​யின் அதி​முக​வும் மீண்​டும் தமிழகத்தை கபளீகரம் செய்ய நினைக்​கின்​றன.

தமிழகத்தை நாசப்​படுத்​தும் கூட்​டத்தை வேரோடும், வேரோடும் மண்​ணோடும் வீழ்த்த வேண்​டும். அதற்கு கொள்கை தெளி​வும் போராட்​ட​மும் செயல்​திட்​ட​மும் ஒற்​றுமை உணர்​வும் வேண்​டும். தமிழ்​நாட்டை தலைகுனிய விட​மாட்​டேன் என அனை​வரும் உறுதி எடுப்​போம். வென்று காட்​டு​வோம். தமிழ்​நாடு போராடும், வெல்​லும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

விழா​வில் திமுக துணை பொதுச்​செய​லா​ளர்​கள் கனி​மொழி, ஆ.ரா​சா, விடு​தலைச் சிறுத்​தைகள் கட்சி தலை​வர் திரு​மாவளவன், இந்​திய கம்​யூனிஸ்ட் கட்​சித் மாநிலச் செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன், மனிதநேய மக்​கள் கட்​சித் தலை​வர் எம்​.எச்​.ஜ​வாஹிருல்லா ஆகியோர் வாழ்த்​துரை வழங்​கி​னார். திரா​விடர் கழக பிரச்​சார செய​லா​ளர் அருள்​மொழி, அமைச்​சர்​கள் தா.மோ.அன்​பரசன், ஏ.வ. வேலு, எம்​.பி.கள் டி.ஆர். பாலு, செல்​வம், எம்​எல்​ஏக்​கள்​ எஸ்​.ஆர்​.​ராஜா, இ.கருணாநி​தி, வரலட்​சுமி உள்​ளிட்​டோர்​ பங்​கேற்​று பேசினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x