Last Updated : 04 Oct, 2025 09:43 AM

 

Published : 04 Oct 2025 09:43 AM
Last Updated : 04 Oct 2025 09:43 AM

கரூர் கூட்ட நெரிசல் விசாரணை: அஸ்ரா கார்க் குழுவில் 2 பெண் எஸ்.பி.க்கள்!

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசாரிக்கும் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

அதன்படி, நாமக்கல் காவல் கண்காணிப்பாளர் விமலா மற்றுமொரு காவல் கண்காணிப்பாளர் சியாமளாதேவி ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுடன் 3 ஏடிஎஸ்பிக்கள், காவல் ஆய்வாளர்களும் விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பங்​கேற்ற பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசல் ஏற்​பட்டு 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் அதி​க​மானோர் படு​கா​யம் அடைந்​தனர். இதை தொடர்ந்​து, அரசி​யல் கட்​சிகளின் ‘ரோடு ஷோ’ நிகழ்​வு​களுக்கு தடை விதிக்க வேண்​டும் என்று கோரி சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வில்​லி​வாக்​கத்தை சேர்ந்த பி.ஹெச்​.​தினேஷ் என்​பவர் வழக்கு தொடர்ந்​திருந்​தார்.

நீதிபதி என்​.செந்​தில்​கு​மார் முன்பு இந்த வழக்கு நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்போது, கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கை விசா​ரிக்க, வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், நாமக்​கல் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அடங்​கிய சிறப்பு புல​னாய்வு குழு அமைக்​கப்​படு​கிறது. வழக்கு தொடர்​பான ஆவணங்​களை சிறப்பு புல​னாய்வு குழு வசம் கரூர் போலீ​ஸார் உடனடி​யாக ஒப்​படைக்க வேண்டும் என்று நீதிபதி செந்தில்குமார் உத்தரவிட்டார்.

இந்நிலையில் அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு புல​னாய்வு குழுவில், இரண்டு பெண் எஸ்.பி.க்கள் இடம்பெற்றுள்ளது தற்போது தெரியவந்துள்ளது.

யார் இந்த அஸ்ரா கார்க்? - அஸ்ரா கார்க் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானார். தமிழகப் பிரிவில் பணியமர்த்தப்பட்ட இவர் முதன்முதலில் ஏற்றுக் கொண்ட பொறுப்பு திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர். 2008-ல் திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. ஆனார். கந்துவட்டிக் கொடுமையால் சிக்கித் தவித்த நெல்லையில் அவரது நடவடிக்கைகள் அதிரடியாக அமைந்தது.

அதன்பின்னர் 2010-ல் அவர் மதுரை காவல் கண்காணிப்பாளராக பதவி ஏற்றார். கிரானைட் குவாரி முறைகேடு, நில அபகரிப்பு புகார் வழக்குகளை அவர் கையாண்ட விதம் அவர் மீது கவனத்தைத் திருப்பியது. 2016-ம் ஆண்டு மத்திய பணிக்குச் சென்றார். பின்னர் 2018-ம் ஆண்டு மீண்டும் பதவி உயர்வோடு தமிழகத்துக்கே வந்தார். 2022-ம் ஆண்டு ஐஜியாக நியமிக்கப்பட்டார். தற்போது வடக்கு மண்டல ஐஜியாக இருக்கிறார். நேர்மை, துணிச்சலுக்கு பெயர்பெற்ற அஸ்ரா கார்க் காவல்துறையின் பல்வேறு உயரிய விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

இந்நிலையில் தான், கரூர் கூட்ட நெரிசல் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க் தலை​மை​யில், சிறப்பு புலனாய்வு குழுவை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு அமைத்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x