Published : 04 Oct 2025 05:31 AM
Last Updated : 04 Oct 2025 05:31 AM

வேலைவாய்ப்பு பயிற்சித் துறை நடத்திய தனியார் முகாம்கள் மூலம் 2.70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை: கடந்த 4 ஆண்​டு​களில் வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை சார்​பில் நடத்​தப்​பட்ட தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் மூலம் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேர் வேலை​வாய்ப்பு பெற்​றுள்​ளனர். மாநில வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யின் கீழ் இயங்கி வரும் மாவட்ட வேலை​வாய்ப்பு மற்​றும் தொழில்​நெறி வழி​காட்​டும் மையங்​கள், தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து வேலை​வாய்ப்பு முகாம்​களை நடத்தி வரு​கின்​றன.

அந்த வகை​யில், ஒவ்​வொரு மாவட்​டத்​தி​லும் ஒவ்​வொரு மாத​மும் 2-வது அல்​லது 3-வது வெள்​ளிக்​கிழமை​யும், ஒவ்​வோர் ஆண்​டும் பெரிய அளவி​லான 2 மெகா வேலை​வாய்ப்பு முகாம்​களும் நடத்​தப்​படு​கின்​றன. இந்த முகாம்​களில் தனி​யார் நிறு​வனங்​கள் பங்​கேற்​று, தங்​களுக்கு தேவை​யான பணி​யாளர்​களை தேர்​வுசெய்து கொள்​கின்​றன.

8, 10-ம் வகுப்​பு, பிளஸ் 2 படித்​தவர்​கள், ஐடிஐ, டிப்​ள​மா, பொறி​யியல் பட்​டம், கலை அறி​வில் பட்​ட​தா​ரி​கள் என அனைத்து கல்​வித் தகு​தியை உடைய​வர்​களும் இந்த முகாமில் நேரடி​யாக கலந்​து​கொண்டு வேலை​வாய்ப்பு பெறலாம். பதிவுக் கட்​ட​ணம் ஏதும் செலுத்த தேவை​யில்​லை.

தேர்வு மற்​றும் நேர்​காணல் நடத்​தப்​பட்டு தகு​தி​யான நபர்​களுக்கு உடனடி​யாக பணிநியமன ஆணை வழங்​கப்​படு​வது குறிப்​பிடத்​தக்​கது. வேலை​வாய்ப்பு அலு​வல​கங்​களில் பதிவுசெய்​துள்ள பதிவு​தா​ரர்​கள் மட்​டுமின்றி பதிவு செய்​யாதவர்​களும் முகாமில் பங்​கேற்​கலாம். முகாம்​கள் மூலம் வேலை​வாய்ப்பு பெறும் பதிவு​தா​ரர்​களின் பதி​வும் ரத்​துசெய்​யப்​ப​டாது.

வேலை​வாய்ப்பு அலு​வலங்​கள் வாயி​லாக அரசுத் துறை​களில் வேலை​வாய்ப்பு பெறும் முறை நிறுத்​தப்​பட்​டுள்ள நிலை​யில், வேலை​வாய்ப்பு பயிற்​சித் துறை​யால் நடத்​தப்​படும் தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் பதிவு​தா​ரர்​களுக்கு வரப்​பிர​சாத​மாக இருந்து வரு​கிறது.

இது தொடர்​பாக வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை உயர் அதி​காரி​கள் கூறிய​தாவது: தனி​யார் வேலை​வாய்ப்பு முகாம்​கள் தொடர்​பாக மாவட்ட நிர்​வாகம் மூலம் முன்​கூட்​டியே அறி​விப்பு செய்​யப்​படு​கிறது. முகாமில் பங்​கேற்க முன்​ப​திவு செய்ய வேண்​டிய அவசி​யமில்​லை. தேவை​யான ஆவணங்​களு​டன் நேரடி​யாக முகாம் நடை​பெறும் இடத்​துக்கு சென்​று​விடலாம். வங்​கி, நிதி, காப்​பீடு, மருத்​து​வம், தொழில்​நுட்​பம், தூய்மை பராமரிப்பு என பலதரப்​பட்ட நிறு​வனங்​கள் கலந்​து​கொண்டு தேவை​யான பணி​யாளர்​களை தேர்​வுசெய்​கின்​றன.

முகாமிலேயே பணிநியமன ஆணை​யும் வழங்​கப்​பட்டு விடு​வ​தால், உடனடி​யாக பணி​யில் சேர்ந்​து​விடலாம். கடந்த 4 ஆண்​டு​களில் மட்​டும் 2 லட்​சத்து 70 ஆயிரம் பேருக்கு தனி​யார் நிறு​வனங்​களில் வேலை கிடைத்​திருக்​கிறது. ரூ.12 ஆயிரம், ரூ.15 ஆயிரம், ரூ.25 ஆயிரம் என பலதரப்​பட்ட ஊதி​யங்​களில் பணி​யில் சேர்ந்​துள்​ளனர். இவ்​வாறு அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

பிரத்​யேக இணை​யதளம்: தனி​யார்​துறை வேலை​வாய்ப்​பு​கள் தொடர்​பான தகவல்​களை வேலை​தேடு​வோருக்கு தெரிவிக்​கும் வகை​யில் வேலை​வாய்ப்பு மற்​றும் பயிற்​சித் துறை​யால் www.tnprivatejobs.tn.gov.in என்ற பிரத்​யேக இணை​யதளம் இயக்​கப்​பட்டு வரு​கிறது.

இந்த இணை​யதளத்​தில், எந்​தெந்த நிறு​வனங்​களில் என்​னென்ன வேலைகள் காலி​யாக உள்​ளன? எந்​தெந்த மாவட்​டங்​களில் எந்​தெந்த தேதி​யில் வேலை​வாய்ப்பு முகாம்​கள் நடத்​தப்​படு​கின்றன என்ற விவரங்​களை எல்​லாம் அதில் விரி​வாக அறிந்​துகொள்ளளாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x