Published : 04 Oct 2025 06:40 AM
Last Updated : 04 Oct 2025 06:40 AM

3 நாள் கழித்து வீடியோ வெளியிடுபவர் தலைவரா? - மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் கேள்வி

கரூர்: கரூர் சம்​பவத்​துக்கு பொறுப்​பேற்​காமல் 3 மணி நேரம் கழித்து ட்வீட், 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ரா என்று மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யின் தேசிய பொதுச் செய​லா​ளர் எம்​.ஏ.பேபி கேள்வி எழுப்பினார்.

கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை​யும், காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்​களை​யும் எம்.ஏ.பேபி மற்​றும் எம்​.பி.க்​கள் ராதாகிருஷ்ணன், சிவ​தாசன், சச்​சி​தானந்​தம், அரசி​யல் தலை​மைக் குழு உறுப்​பினர் உ.வாசுகி, எம்​எல்ஏ நாகை மாலி கொண்ட குழு​வினர் நேற்று சந்​தித்து ஆறு​தல் கூறினர்.

பின்​னர், எம்​.ஏ.பேபி செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: இந்த விவ​காரத்​தில் விரைந்து செயல்​பட்ட தமிழக அரசின் நடவடிக்கை பாராட்​டுக்​குரியது. தமிழக முதல்​வர் இந்த விவ​காரத்தை அரசி​யல் ரீதி​யாக அணு​காமல், இரவோடு இரவாக நேரில் வந்து உயி​ரிழந்​தவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தி, காயமடைந்​தவர்​களை சந்​தித்து ஆறு​தல் கூறி​யுள்​ளார். இங்கு நடந்த சம்​பவம்​போல இனி எங்​கும் நடை​பெறக்​கூ​டாது. 500-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​களில் ஈடு​பட்​டுள்​ளனர்.

கூட்​டத்தை ஒழுங்​குபடுத்​தவோ, கட்​டுப்​படுத்​தவோ கட்​சி​யினர் தவறி​விட்​டனர். 7 மணி நேரத்​துக்​கும் மேலாக காத்​திருந்​த​தால் முதிய​வர்​கள், குழந்​தைகள், பெண்​கள் தண்​ணீர், உணவு எது​வுமின்றி சோர்​வடைந்​துள்​ளனர். இதில் சிபிஐ விசா​ரணை தேவையில்லை. கூட்​டம் அதி​க​மா​னால் அதைக் கட்​டுப்​படுத்த வேண்​டிய கடமை, சம்​பந்​தப்​பட்ட கட்​சித் தலை​வருக்கு உண்​டு.

அவர்​தான் சூழ்​நிலையை கட்​டுக்​குள் கொண்டு வரவேண்​டும். சம்​பவம் நடந்த 3 மணி நேரம் கழித்து ட்வீட் செய்​து, 3 நாள் கழித்து வீடியோ வெளி​யிடு​பவர் தலை​வ​ராக இருக்க முடி​யாது. ஒரு துயர சம்​பவம் நடந்​திருக்​கும்​போது, அங்கு சென்று உதவி செய்​திருக்க வேண்​டும். யார் மீதும் குற்​றம் சுமத்​து​வது, தண்​டனை வழங்​கு​வது நோக்​கமல்ல. எதிர்​காலத்​தில் இது​போல நடை​பெறாமல் பார்த்துக் கொள்ள வேண்​டும். இவ்​வாறு அவர் கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x