Published : 04 Oct 2025 05:53 AM
Last Updated : 04 Oct 2025 05:53 AM
சென்னை: தமிழக கூட்டுறவுத் துறை வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: முதல்வரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே சென்று பொது விநியோகத் திட்ட பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
தீபாவளியை முன்னிட்டு அக்.5, 6 ஆகிய தேதிகளில் வீடு தேடி ரேஷன் பொருட்களை விநியோகம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த தகவலை அனைத்து ரேஷன் கடைகளிலும் பொதுமக்கள் அறியும் வகையில் தகவல் பலகையில் எழுதிவைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT