Published : 03 Oct 2025 05:56 AM
Last Updated : 03 Oct 2025 05:56 AM

தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தடுத்து கல்வியை அரசியலாக்குகின்றனர்: தமிழிசை குற்றச்சாட்டு

காஞ்சிபுரம் மாவட்டம் கொளப்பாக்கத்தில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் பங்கேற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன்.

காஞ்சிபுரம்: தமிழ்​நாட்​டில் நவோதயா பள்​ளி​களை தடுத்து வைத்​துக் கொண்​டு, கல்​வியை அரசி​யல் செய்​வ​தாக தெலுங்​கான முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் குற்​றம் சாட்​டி​னார். பிரதமர் மோடி​யின் பிறந்த நாளை முன்​னிட்​டு, பாஜக சார்​பில், காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்​பாக்​கத்​தில் இருந்து கோவூர் வரை சுமார் 5 கி.மீ. தூரத்​திற்கு மினி மாரத்​தான் போட்டி நடைபெற்றது.

இதில், நூற்​றுக்​கும் மேற்​பட்ட மாணவர்​கள் பங்​கேற்​றனர். போட்​டி​யில் வெற்றி பெற்​றவர்​களுக்​கு, தெலுங்​கானா முன்​னாள் ஆளுநர் தமிழிசை சவுந்​திர​ராஜன் பரிசுகளை வழங்கி பேசி​ய​தாவது: பிரதமர் மோடி கேந்​திரிய வித்​யாலயா பள்​ளி​களை நாட்டிற்குச் சமர்ப்​பித்​துள்​ளார்.

ஆனால், தமிழகத்​தில் நவோதயா பள்​ளி​களைத் தடுத்து விட்​டனர். நீட் தேர்​வில் அதி​க​மான மதிப்​பெண்​கள் வாங்​கு​வது நவோதயா பள்​ளி​களில் பயின்ற மாணவர்​கள்​தான். அங்​கிருந்​து​தான் அதிக எண்​ணிக்​கையி​லான மாணவர்​கள் தேர்​வாகி உள்​ளனர்.

தமிழகத்​தில் ஆரம்​பத்​தில் இருந்தே கல்​வியை அரசி​ய​லாக்​கி, தனி​யார் பள்​ளி​களை ஊக்​கப்​படுத்த வேண்​டும் என்​ப​தற்​காகவே
நவோதயா போன்ற பள்​ளி​களைத் தடுத்​து​விட்​டனர். புதுச்​சேரி​யில் அனைத்து அரசுப் பள்​ளி​களை​யும் சிபிஎஸ்இ பள்​ளி​களாக மாற்​றி​யுள்​ளோம்.

தமிழகத்​தில் சமச்​சீர் கல்வி என்று கூறி​விட்​டு, ஒரு சாராருக்கு நல்ல கல்​வியை​யும், சாமானியப் பிள்​ளை​களுக்கு அதனைக் கொடுக்​காமலும் உள்​ளனர். ஆனால், கல்​வி​யில் சிறந்​தது தமிழ்​நாடு என விளம்பர நிகழ்ச்சி மட்​டுமே நடத்​துகின்​றனர். டெல்​லிக்கு யார் வேண்​டு​மா​னா லும் போகலாம். டெல்​லிக்​குச் சென்​றாலே பார​திய ஜனதா கட்​சி​யின் பின்​னணி​யில் இருக்​கிறது என்ற தோற்​றத்தை ஏற்​படுத்​தக் கூடாது.

கரூர் விவ​காரத்​தில் விஜய் கட்​சிக்கு கொடுக்​கப்​பட்ட இடம் மிகக் குறுகிய இடம் என்று அனை​வரும் கூறுகின்​றனர். ஒரு நபர் ஆணை​யம் அமைத்து விட்டு அரசு சார்​பில், அமைச்​சர் தரப்​பில் என்று ஆளாளுக்கு பேட்டி கொடுக்​கின்​றனர்.

பிறகு, அந்த விசா​ரணை ஆணை​யம் எதற்​கு? இந்த விவ​காரத்​தில் 2026-ம் ஆண்டு தேர்​தலில் செந்​தில் பாலாஜி போன்​றவர்​களின் பவர் கட் ஆகும். கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில் பாஜக விசா​ரணை நடத்த வந்​தால் திமுக கூட்​ட​ணிக் கட்​சி​யைச் சேர்ந்த பலர் பதறுகின்​றனர். உண்மை விவ​காரம் வெளியே வந்​து​விடும் என்ற அச்​சம்​தான்​ இதற்​கு காரணம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x