Published : 03 Oct 2025 05:56 AM
Last Updated : 03 Oct 2025 05:56 AM

ஓய்வூதியக்குழு அறிக்கைக்கு கண்டனம்: தலைமைச் செயலக பணியாளர்கள் அக்.6-ல் கருப்பு பேட்ஜ் அணிந்து பணி

சென்னை: தமிழக அரசின் ஓய்​வூ​தி​யக்​குழு இடைக்​கால அறிக்கை அளித்​ததற்கு கண்​டனம் தெரிவிக்​கும் வகை​யில் தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் வரும் 6-ம் தேதி கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள் என்று அறிவிக்​கப்​பட்​டு உள்​ளது.

இதுதொடர்​பாக தலை​மைச் செயலக சங்க தலை​வர் கு.வெங்​கடேசன், செய​லா​ளர் சு.ஹரிசங்​கர் ஆகியோர் நேற்று வெளி​யிட்ட அறிக்கை: சட்​டப்​பேர​வை​யில் விதி எண் 110-ன்​கீழ் முதல்​வர் ஸ்டா​லின் வெளி​யிட்ட அறி​விப்​புக்கு மாறாக, அரசின் ஓய்​வூ​தி​யக் குழு தனது அறிக்​கையை செப்​டம்​பர் 30-ம் தேதிக்​குள் வழங்​காமல், அதே தேதி​யில் இடைக்​கால அறிக்​கையை அளித்​துள்​ளது.

இது சட்​டப்​பேரவை அறி​விப்பை மீறும் செயல். கால நீட்​டிப்பு குறித்து அரசிடம் நேரடி​யாக கோராமல், மறை​முக​மாக கேட்​டிருப்​பது வன்​மை​யாக கண்​டிக்​கத்​தக்​கது. இதை அரசு ஊழியர்​கள், ஆசிரியர்​கள் ஒரு​போதும் ஏற்​க​மாட்​டார்​கள்.

இடைக்​கால அறிக்கை அளித்​ததன் மூலம் ஓய்​வூ​தி​யக்​குழு தனது நம்​பகத்​தன்​மையை இழந்​து​விட்​டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்​கும் வகை​யில், தலை​மைச் செயலக பணி​யாளர்​கள் அக்​.6-ம் தேதி திங்​கள்​கிழமை கருப்பு பேட்ஜ் அணிந்து பணி​யாற்​று​வார்​கள். முதல்​வர் இந்த விஷ​யத்​தின் தீவிரத்தை மனதில் கொண்​டு, உடனடி​யாக தலை​யிட்​டு, திமுக​வின் தேர்​தல் வாக்​குறு​தி​யான பழைய ஓய்​வூ​திய திட்​டத்தை நடை​முறைப்​படுத்​து​வது தொடர்​பான அறி​விப்பை வெளி​யிட வேண்​டும். இவ்​வாறு அவர்​கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x