Published : 03 Oct 2025 09:37 AM
Last Updated : 03 Oct 2025 09:37 AM

விஜய் உட்பட அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்: கரூர் சம்பவத்தில் சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை

சென்னை: கரூர் துயரச் சம்​பவத்​தில் தவெக தலை​வர் விஜய் உள்​ளிட்ட அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்த வேண்​டும் என்று கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக நீதி​யரசர் கே.சந்​துரு, ஓய்​வு​பெற்ற ஐஏஎஸ் அதி​காரி எம்​.ஜி.தேவச​காயம், ‘இந்​து’ என்​.​ராம் உள்​ளிட்ட சமூக செயற்​பாட்​டாளர்​கள், எழுத்​தாளர்​கள், கவிஞர்​கள், ஊடக​விய​லா​ளர்​கள் 270-க்​கும் மேற்​பட்​டோர் கூட்​டாக வெளி​யிட்ட அறிக்​கை​:

விஜய் அரசி​யல் கட்சி தொடங்​கிய​திலோ தனது கட்​சி​யினரை அவர் சந்​திப்​ப​திலோ எவருக்​கும் மாறு​பட்ட கருத்து இல்​லை. ஆனால் அவர் தனது கட்​சி​யினரை​யும் ரசிகர்​களையும் சந்​திக்​கத் தெரிவுசெய்​துள்ள முறை,இந்த நாட்​டின் அரசி​யல் முதிர்ச்​சிக்​கும் பொதுவாழ்க்​கைக்​கும் தனிமனித கண்​ணி​யத்​துக்​கும் உகந்​ததல்ல.

விக்​கிர​வாண்​டி,மதுரை, திருச்​சி, அரியலூர், நாகை ஆகிய இடங்​களில் விஜய்​யின் கூட்​டங்​கள் இந்​தப் பேரழி​வுக்கான முன்னோட்டம் போலவே நடந்​திருக்​கின்​றன. பொதுச் சொத்​துகளை சேதப்​படுத்​தி​யது, மின் கம்​பங்​கள், மரங்​கள், அரு​கமைக் கட்டிடங்​கள் ஆகிய​வற்​றில் ஏறி சேதப்​படுத்​தி​யது என அவரது கட்​சி​யினர் பொறுப்​புணர்​வின்​றி​யும் கட்​டுப்​பாடற்​றும் சுயஒழுங்கின்​றி​யும் நடந்​து​கொண்​டனர்.

விஜய், அறி​வித்​திருந்த நேர அளவுக்​குள் கரூருக்கு வராமல், தன்​னைக் காண திரண்​டிருந்​தவர்​களை 7 மணி நேரத்​துக்​கும் மேலாககாக்க வைத்​ததும், அங்கு குடிநீர், உணவு, கழி​வறை உள்​ளிட்ட அடிப்​படைத் தேவை​கள் போது​மான​தாக இல்​லா​திருந்ததும், உயி​ரிழப்​புக்​குக் காரணம் என்​பதை காணொளிச் சான்​றுகள் காட்​டு​கின்​றன.

ஆனால் இந்த உயி​ரிழப்​பு​களுக்​குப் பின்னே ‘திட்​ட​மிட்ட சதி’ இருப்​ப​தாக​வும் விஜய் மீது எந்​தத் தவறுமில்லை எனவும் உண்​மைக்கு மாறான ஒரு கட்​டுக்​கதையை விஜய்​யின் ஆதர​வாளர்​கள் சிலர் பரப்​பத் தொடங்​கி​யுள்​ளனர். கடந்த 30-ம் தேதி விஜய் வெளி​யிட்ட காணொளி​யில், தன்னால்​தான் இந்த உயி​ரிழப்​பு​கள் நிகழ்ந்தன என்​பது பற்​றிய குற்​றவுணர்ச்​சியோ வருத்​தமோ தார்​மீகப் பொறுப்​பேற்போ இல்​லாமல், அரசின் மீது பழி சுமத்​தி​விட்டு தப்​பித்​துவிடும் உள்​நோக்​கமே தெரி​கிறது.

எவ்​வளவு கொடிய தீங்​கை​யும் இழைத்​து​விட்டுவதந்​தி​களை​யும் கட்​டுக்​கதைகளை​யும் களமிறக்கி தப்​பித்​து​விட முடி​யும் என்​கிற விஜய்​யின் கெடுநோக்​கம் தடுக்​கப்பட வேண்​டும்.

வருங்​காலத்​தில் இது​போன்ற அவலங்​கள் உரு​வா​காமல் கூட்​டத்தை கட்டுப்​படுத்​தும் வழி​வகைகள் கண்​டறியப்பட வேண்​டும். சட்​டத்​தின் ஆட்​சியை உறுதி செய்ய, கரூர் உயி​ரிழப்​பு​களுக்கு காரண​மான விஜய் உள்​ளிட்ட அனை​வரை​யும் சட்​டத்​தின் முன் நிறுத்த தமிழ்​நாடு அரசு தயங்​கக் கூடாதென வலி​யுறுத்​துகிறோம்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x