Published : 03 Oct 2025 06:14 AM
Last Updated : 03 Oct 2025 06:14 AM

கொடுங்கையூரில் பயோமைனிங் முறையில் 20 லட்சம் டன் கழிவுகள் அகற்றம்: சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநக​ராட்சி சார்​பில், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்கழிவுகள் அகற்​றப்​பட்​டுள்​ளன.

இதுதொடர்​பாக சென்னை மாநக​ராட்சி வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: திரு​வொற்​றியூர், மாதவரம், தண்​டை​யார்​பேட்​டை, அண்ணாநகர், திரு.​வி.க.நகர் உள்​ளிட்ட 8 மண்​டலங்​களில் சேகரிக்​கப்​படும் திடக்​கழி​வு​கள், கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தில் பல ஆண்டுகளாக கொட்​டப்​பட்டு வந்​தன. இதன் காரண​மாக கொடுங்​கையூர் வளாகத்​தில் குப்​பைகள் அதி​கரித்​து, சுற்​றுச்​சூழல் மாசு ஏற்​படும் நிலை உரு​வானது.

கொடுங்​கையூர் குப்பை கொட்​டும் வளாகத்​தின் பரப்​பளவு 342.91 ஏக்​கர் ஆகும். இதில் 252 ஏக்​கர் பரப்​பள​வில் திடக்​கழி​வு​கள் கொட்​டப்​பட்டு வந்​தன. இதை பயோமைனிங் முறை​யில் ரூ.641 கோடி​யில் பிரித்​தெடுத்து அகற்​றும் பணி​கள், 6 தொகுப்​பு​களாக கடந்த 2024-ம் ஆண்டு முதல் நடை​பெற்று வரு​கின்​றன.

இதில் அகழ்ந்​தெடுக்​கப்பட வேண்​டிய திடக்​கழி​வு​கள் 66.52 லட்​சம் டன் ஆகும். அதில் இது​வரை 20.16 லட்​சம் டன் திடக்​கழி​வு​கள் அகற்​றப்​பட்​டுள்​ளன. தொகுப்பு 1 மற்​றும் 2-ன் வாயி​லாக சுமார் 3 ஏக்​கர் நிலம் மீட்​டெடுக்​கப்​பட்​டுள்​ளது.

அதில் மாநக​ராட்சி சார்​பில் ரூ.57 லட்​சத்​தில் சுற்​று​வேலி அமைத்து குழாய் மூலம் நீர்ப்​பாசன வசதி​யுடன் சுமார் 1,500 பசுமை மரக்​கன்​றுகள் நட்டு பராமரிப்​ப​தற்​கான நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. மீத​முள்ள குப்​பைகளை அகற்​றும் நடவடிக்​கைகள் தொடர்ந்து தீவிர​மாக மேற்​கொள்​ளப்​பட்டு வரு​கின்​றன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x