Published : 03 Oct 2025 06:06 AM
Last Updated : 03 Oct 2025 06:06 AM

​157-வது பிறந்த நாள் கொண்​டாட்​டம்: காந்தி சிலைக்கு ஆளுநர், முதல்​வர் மரி​யாதை

எழும்பூர், அரசு அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள காந்தி சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், மேயர் ஆர்.பிரியா, செய்தித்துறை செயலாளர் வே.ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் இரா.வைத்திநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

சென்னை: காந்தி ஜெயந்​தி​யையொட்​டி, அவரது சிலைக்கு தமிழக ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மற்​றும் அரசியல் கட்​சித் தலை​வர்​கள் மரி​யாதை செலுத்​தினர். நாடெங்​கும் நேற்று காந்தி ஜெயந்தி கொண்​டாடப்​பட்​டது. இதன் ஒரு பகு​தி​யாக சென்னை காந்தி மண்​டபத்​தில் உள்ள காந்​தி​யடிகளின் சிலைக்கு ஆளுநர் ஆர்​.என்​.ரவி மரி​யாதை செலுத்​தி​னார்.

சென்​னை, எழும்​பூர் அரசு அருங்​காட்​சியக வளாகத்​தில் அமைந்​துள்ள மகாத்மா காந்​தி​யின் சிலைக்கு கீழே வைக்​கப்​பட்​டிருந்த உரு​வப் படத்​துக்கு தமிழக அரசு சார்​பில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் மலர் ​தூவி மரி​யாதை செலுத்​தி​னார்.

உடன் அமைச்​சர்​கள் எஸ்​.ரகுப​தி, மு.பெ.​சாமி​நாதன், ஆர்​.எஸ்​.​ராஜகண்​ணப்​பன், மா.சுப்​பிரமணி​யன், பி.கே.சேகர்​பாபு, மேயர் ஆர்​.பிரி​யா, எம்​எல்​ஏ-க்​கள் இ.பரந்​தாமன், த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்கு​மார், செய்​தித்​துறைச் செயலர் வே.​ராஜா​ராமன், செய்​தித்​துறை இயக்​குநர் இரா.​வைத்​தி​நாதன் உள்​ளிட்​டோர் இருந்​தனர்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி தனது சமூக வலை​தளப் பக்​கத்​தில், “நேர்​மை, கண்​ணி​யம், அகிம்சை என்ற உயர்ந்த நெறிகளை கடைபிடித்​து, தன் வாழ்​நாள் முழு​வதை​யும் நாட்​டின் விடு​தலைக்​காக அர்ப்​பணித்​து, உலகமே வியந்த தலை​மைத் திறன் மற்​றும் தன்​னலமற்ற பண்​பின் உரு​வாக விளங்​கிய மகாத்மா காந்​தி​யின் பிறந்த நாளில், நாம் அனை​வரும் அறவழி​யில் நடக்க உறு​தி​யேற்​போம் எனக் குறிப்​பிட்​டுள்​ளார்.

காந்தியடிகளின் 157-வது பிறந்த நாளையொட்டி,
கிண்டி, காந்தி மண்டபத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு
ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

தலை​வர்​கள் மரி​யாதை: சென்​னை, காந்தி மண்​டபத்​தில் தமிழக பாஜக சார்​பில் மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், துணைத் தலை​வர் கரு.​நாக​ராஜன், மாநிலச் செய​லா​ளர் கராத்தே தியாக​ராஜன், தமிழக காங்​கிரஸ் சார்​பில் முன்​னாள் தலை​வர்​கள் கே.வீ.தங்​க​பாலு, சு.​திரு​நாவுக்​கரசர், எம்​.கிருஷ்ண​சாமி, அமமுக சார்​பில் துணை பொதுச்​செய​லா​ளர் ஜி.செந்​தமிழன், கொள்கை பரப்​புச் செய​லா​ளர் சி.ஆர்​.சரஸ்​வதி உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர்.

எழும்​பூர் அருங்​காட்​சி​யகத்​தில் உள்ள சிலைக்​குக் கீழ் வைக்​கப்​பட்​டிருந்த காந்​தி​யின் உரு​வப் படத்​துக்கு தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன் தலை​மையி​லான நிர்​வாகி​களும், கோ​யம்​பேட்​டில் உள்ள தலை​மையகத்​தில் வைக்​கப்​பட்​டிருந்த காந்​தி​யின் உரு​வப் படத்​துக்கு தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா, பொருளாளர் எல்​.கே.சுதீஷ், தலைமை நிலை​யச் செயலர் ப.பார்த்​த​சா​ரதி உள்​ளிட்​டோரும் மரி​யாதை செலுத்​தினர்.

சென்ட்​ரல் ரயில் நிலை​யத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், தெற்கு ரயில்வே கூடு​தல் பொது மேலா​ளர் பி.மகேஷ், சென்னை ரயில்வே கோட்ட மேலா​ளர் சைலேந்​திர சிங், கூடு​தல் மேலா​ளர்​கள் தேஜ் பிர​தாப் சிங், அங்​குர் சவு​கான் ஆகியோர் காந்​தி​யின்​ உரு​வப்​ படத்​துக்​கு மரி​யாதை செலுத்​தினர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x