Published : 01 Oct 2025 06:19 AM
Last Updated : 01 Oct 2025 06:19 AM

ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமீன் கோரி மனு: உயர் நீதிமன்றத்தில் அக்.3-ல் விசாரணை

புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார்.

மதுரை: கரூரில் செப்.27-ம் தேதி தவெக நடத்​திய தேர்​தல் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். இது தொடர்​பாக தவெக பொதுச் செய​லா​ளர் ஆனந்த், இணை பொதுச் செய​லா​ளர் நிர்​மல்​கு​மார் உள்​ளிட்​டோர் மீது கரூர் போலீ​ஸார் ஜாமீனில் வெளிவர முடி​யாத பிரிவு​களில் வழக்​குப்பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் கரூர் மேற்கு மாவட்​டச் செய​லா​ளர் மதி​யழகன், கரூர் நகரப் பொறுப்பாளர் பவுன்​ராஜ் ஆகியோர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர். இந்​நிலை​யில், ஆனந்த், நிர்​மல்​கு​மார் ஆகியோர் உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் நேற்று தனித்​தனி​யாக முன்​ஜாமீன் கோரி மனு தாக்​கல் செய்​தனர்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: தவெக பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் நடந்த சம்​பவம் முற்​றி​லும் எதிர்​பா​ராதது. துர​திருஷ்ட​வச​மானது. அனு​மதி கோரும் கடிதத்​தில் குறிப்​பிட்ட எண்​ணிக்​கை​யை​ விட அதி​கள​வில் கூட்டம் கூடியது. பெண்​கள், குழந்​தைகள் பொதுக் கூட்​டத்​துக்கு வரவேண்​டாம் என தவெக தலை​வர் வலி​யுறுத்​தி​யுள்​ளார். இருப்​பினும், போலீ​ஸார் உரிய வழி​ முறை​களை வகுக்​கத் தவறி​விட்​டனர்.

கட்​டுக்கடங்காத கூட்​டம் கூடியது மற்​றும் பாது​காப்​புக்குப் போது​மான எண்​ணிக்​கை​யில் போலீ​ஸாரை நிறுத்​தாதது ஆகியவை கரூர் துயரச் சம்​பவத்​துக்​குக் காரண​மாக அமைந்​துள்​ளது. கரூரில் கூட்​டம் நடத்த செப். 25-ம் தேதி வரை எங்​களுக்கு போலீ​ஸார் எந்த எச்​சரிக்கை அறி​விப்​பும் தரவில்​லை.

கூட்​டம் அதி​க​மானதும் சில சமூக விரோ​தி​கள் கூட்​டத்​துக்​குள் நுழைந்து விஜய் மீது காலணியை வீசினர். மாற்று வழி இருந்​தும், பதிவு எண் இல்​லாத ஆம்​புலன்ஸ் வாக​னத்​தைக் கூட்​டம் நடை​பெற்ற இடத்​தில் போலீ​ஸார் அனு​ம​தித்​தனர். குண்​டர்​கள் திட்​ட​மிட்டு முன்​கூட்​டியே கூட்​டத்​துக்​குள் நுழைந்து தொண்​டர்​களை​யும், பொது​மக்​களை​யும் ஆயுதங்களால் தாக்​கினர். போலீ​ஸாரும் தடியடி நடத்​தினர். மின்​சா​ர​மும் துண்​டிக்​கப்​பட்​டது. இதனால் துயரச் சம்பவம் நடந்​துள்​ளது.

இந்த வழக்​கில் எங்​களை அரசி​யல் காரணங்​களுக்​காக சேர்த்​துள்​ளனர். எனவே, முன்​ஜாமீன் வழங்க வேண்​டும். இவ்​வாறு மனுக்களில் கூறப்​பட்​டிருந்​தது. இந்த மனுக்​கள் அக். 3-ம் தேதி நடை​பெறும் தசரா விடு​முறைக்​கால நீதி​மன்​றத்​தில் விசாரணைக்கு வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x