Published : 01 Oct 2025 06:50 AM
Last Updated : 01 Oct 2025 06:50 AM

விழுப்புரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: ​தென்​னிந்​திய பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வு​கிறது. வடக்கு அந்​த​மான் கடல் பகு​தி​களில் நேற்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நில​வியது. இதன் காரண​மாக மத்​திய வங்​கக்​கடல் பகு​தி​களில் ஒரு காற்​றழுத்த தாழ்வு பகுதி உரு​வாகக்​கூடும்.

இது மேற்கு வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, மத்​தி​யமேற்கு மற்​றும் அதையொட்​டிய வடமேற்கு வங்​கக்​கடல் பகு​தி​களில் ஓரிரு நாளில் காற்​றழுத்த தாழ்வு மண்​டல​மாக வலுப்​பெறக்​கூடும். இது மேலும், மேற்​கு-வடமேற்கு திசை​யில் நகர்ந்​து, தெற்கு ஒடிஸா- வடக்கு ஆந்​திர கடலோரப் பகு​தி​

களில் அக்​.3-ம் தேதி வாக்​கில் கரையை கடக்​கும். இதனால் தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும், புதுச்​சேரி மற்​றும் காரைக்​கால் பகு​தி​களி​லும், இன்று இடி, மின்​னலுடன் கூடிய லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். பலத்த தரைக்​காற்று மணிக்கு 30 முதல் 40 கிமீ வேகத்​தில் வீசக்​கூடும். செங்​கல்​பட்​டு, விழுப்​புரம், கள்​ளக்​குறிச்சி மற்​றும் திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களின் ஓரிரு இடங்​களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்​புள்​ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x