Published : 01 Oct 2025 12:27 AM
Last Updated : 01 Oct 2025 12:27 AM

அதிக ஆம்புலன்ஸ்கள் வந்தது எப்படி? - தமிழக அரசு உயரதிகாரிகள் அமுதா, செந்தில்குமார் வீடியோவுடன் விளக்கம் 

சென்னை: கரூரில் 41 பேர் உயி​ரிழந்த விவ​காரத்​தில், தவெக பிரச்​சா​ரத்​தின்​போது அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்ஸ்​கள் வந்​தது எப்​படி என்​பது தொடர்​பாக தமிழக அரசின் ஊடகச் செயலர் பி.அ​மு​தா, சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் வீடியோ ஆதா​ரங்​களு​டன் விளக்​கம் அளித்​தனர்.

கரூரில் கடந்த 27-ம் தேதி தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரக் கூட்​டத்​தின்​போது நெரிசலில் சிக்கி 41 பேர் உயி​ரிழந்​தனர். 100-க்​கும் மேற்​பட்​டோர் காயமடைந்​தனர். இது தொடர்​பாக விஜய் சில கருத்​து களை வீடியோ​வில் தெரி​வித்​திருந்​தார்.

இந்​நிலை​யில், தமிழக அரசின் ஊடகச் செயலரும், வரு​வாய்த் துறைச் செயலரு​மான பி.அ​மு​தா, சட்​டம்​-ஒழுங்கு கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம், சுகா​தா​ரத் துறைச் செயலர் பி.செந்​தில்​கு​மார் ஆகியோர் நேற்று தலை​மைச்செயல​கத்​தில் செய்​தி​யாளர்​களுக்​குப் பேட்​டியளித்​தனர். அப்​போது, விஜய் பிரச்​சா​ரம் தொடர்​பான வீடியோ காட்​சிகளை காண்​பித்​து, கூட்ட நெரிசல் நிகழ்​வு​களை விவரித்​தனர்.

அப்​போது அமுதா கூறிய​தாவது: கரூர் சம்​பவம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் தவறான கருத்​துகள் பகிரப்​படு​கின்​றன. அன்று பிற்​பகல் 3 மணி வரை 10,000 பேர்​தான் இருந்​தனர். ஆனால், விஜய் வந்த பிறகு கூட்​டம் படிப்​படி​யாக அதி​கரித்து கூடு​தலாக 25 ஆயிரம் பேர் கூடி​யிருப்​பார்​கள் என்று கருதுகிறோம். அவரது வாக​னத்​தின் பின்​னால் ஏராள​மானோர் வாக​னங்​களில் வந்​துள்​ளனர். அன்று காலை முதலே காத்​திருந்​தவர்​களுக்கு தண்​ணீர்​கூட கிடைக்​க​வில்​லை. நீண்ட நேரம் காத்​திருந்​த​தால் நிறைய பேருக்கு தண்​ணீர் சத்து குறைவு ஏற்​பட்டு சிரமப்​பட்​டுள்​ளனர். நெரிசல் சம்​பவத்​துக்​குப் பிறகு இரவு 7.40 மணி முதல் 9.45 மணி வரை, நெரிசலில் சிக்​கிய​வர்​கள் ஆம்​புலன்​ஸ்​களில் மருத்​து​வ​மனைக்கு கொண்டு செல்​லப்​பட்​டனர்.

பிரச்​சா​ரத்​தின்​போது மின்​சா​ரம் தடை செய்​யப்​பட்​ட​தாக தகவல் பரப்​பப்​படு​கிறது. ஆனால், பிரச்​சா​ரத்​தின்​போது தடை​யில்லா மின்​சா​ரம் விநி​யோகிக்​கப்​பட்​ட​தாக மின்​சார வாரிய தலை​மைப் பொறி​யாளர் விளக்​கம் அளித்​திருக்​கிறார். மின் விளக்​கு​களும் அணைக்​கப்​பட​வில்​லை. கூட்ட நெரிசல் அதி​கரித்​து,அரு​கே​யிருந்த ஜெனரேட்​டர் அறைக்​குள் கூட்​டம் முண்​டியடித்து உள்ளே நுழைய முயன்​ற​போது ஜெனரேட்​டர் நிறுத்​தப்​பட்​டது. அதனால்​தான் போகஸ் லைட் எரிய​வில்​லை.

கரூர் சம்​பவத்​தைப் பொருத்​தவரை அரசு சார்​பில் உடனுக்​குடன் நடவடிக்​கைகள் எடுக்​கப்​பட்​டுள்​ளன. நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மை​யில் விசா​ரணை ஆணை​யம் அமைக்​கப்​பட்​டு, விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. அதே​போல, சீனியர் எஸ்​.பி. தலை​மை​யில் போலீஸ் விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இவ்​வாறு அவர் கூறி​னார். கூடு​தல் டிஜிபி டேவிட்​சன் தேவாசீர்​வாதம் கூறும்​போது, "கரூர் கூட்​டத்​துக்கு 10 ஆயிரம் பேர் வரு​வார்​கள் என்று கூறி அனு​மதி கேட்​கப்​பட்​டது. பொது​வாக 50 பேருக்கு ஒரு காவலர் பணி​யில் அமர்த்​தப்​படு​வது வழக்​கம். எனினும், விஜய் கலந்​து​கொண்ட முந்​தைய கூட்​டங்​களில் கூடிய கூட்​டத்​தின் அடிப்​படை​யில் 20 பேருக்கு ஒரு காவலர் என்ற அடிப்​படை​யில் நியமித்​தோம்.

கூட்​டத்​தினர் மீது போலீஸ் தடியடி நடத்​தி​ய​தாக கூறுகிறார்​கள். விஜய் கார் பின்​னால் வந்த கூட்​டம், அவரது கார் நின்​றவுடன் முன்​பக்​கம் முண்​டியடித்து வர முயற்​சித்​த​தால், கூட்​டத்தை விலக்​கவே போலீ​ஸார் முயற்​சித்​தனர். கூட்​டம் அதி​கரித்​த​தால் கூடு​தல் போலீ​ஸார் வரவழைக்​கப்​பட்​டனர்" என்​றார்.

சுகா​தா​ரத் துறை செயலர் செந்​தில்​கு​மார் கூறிய​தாவது: திடீரென அதிக எண்​ணிக்​கையி​லான ஆம்​புலன்​ஸ்​கள் எப்​படி அங்கு வந்தன என்ற சந்​தேகம் எழுப்​பப்​பட்டு வரு​கிறது. நெரிசல் சம்​பவம் ஏற்​பட்டு 108 ஆம்​புலன்ஸ் கட்​டுப்​பாட்டு அறைக்கு இரவு 7.14 மணிக்கு அழைப்பு வந்​தது. உடனடி​யாக 7.20 மணிக்கு சம்பவ இடத்​துக்கு ஓர் ஆம்​புலன்ஸ் அனுப்​பப்​பட்​டது. பின்​னர், இரவு 7.15 மணிக்கு அடுத்த அழைப்பு வரவே 7.23 மணிக்கு அடுத்த ஆம்​புலன்ஸ் சென்​றது. தொடர்ந்து அடுத்​தடுத்து அழைப்​பு​கள் வந்​த​தால், உடனடி​யாக அரு​கில் உள்ள மாவட்​டங்​களில் இருந்து ஆம்​புலன்​ஸ்​கள் வரவழைக்​கப்​பட்​டன. தவெக கட்சி சார்​பில் 7, அரசின் 108 ஆம்​புலன்​ஸ்​கள் 6, மற்ற மாவட்​டங்​களில் இருந்து 33 ஆம்​புலன்​ஸ்​கள் அங்கு சென்​றன.

எதற்​காக அவசர​மாக பிரேதப் பரிசோதனை செய்​யப்​பட்​டது என்று கேட்​கிறார்​கள். பொது​வாக, அதிக எண்​ணிக்​கையி​லான உயி​ரிழப்​பு​கள் நிகழும்​போது பிரேதப் பரிசோதனை செய்ய கால​தாமத​மாகும். இது பாதிக்​கப்​பட்ட குடும்​பத்​தினருக்கு வேதனையை அதி​கரிக்​கும் என்​பதால், நல்​லெண்​ணத்​தில் அடிப்​படை​யில் பிரேதப் பரிசோதனை விரை​வாக செய்து முடிக்​கப்​பட்​டது. இவ்​வாறு அவர் கூறி​னார். பேட்​டி​யின்​போது, உள்​துறைச்​ செயலர்​ தீரஜ்கு​மார்​, டிஜிபி (பொறுப்பு) வெங்​கட்​ராமன்​ உடனிருந்​தனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x