Published : 30 Sep 2025 05:53 AM
Last Updated : 30 Sep 2025 05:53 AM

கரூர் உயிரிழப்புகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்: அதிமுக, பாஜக, பாமக வலியுறுத்தல்

சென்னை: தவெக பரப்​புரை​யில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு தமிழக அரசு ஆணை​யிட வேண்​டும் என அதி​முக, பாஜக, பாமக கட்​சிகள் வலி​யுறுத்​தி​யுள்​ளன.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடந்த உயி​ரிழப்பு சம்​பவத்​துக்கு மக்​களின் உணர்​வாக மக்​களின் சந்தேகங்களை பதிவு செய்​திருந்​தேன். அதற்கு உரிய பதில் அளிக்க திராணி இல்​லாமல், சமூக வலை​தளங்​களில் அவதூறு பரவுவ​தாக கூறி​யிருக்​கும் முதல்​வரின் போட்​டோஷூட் வீடியோவே, தமிழகத்​துக்கு வாய்த்​திருக்​கும் முதல்​வர் எப்​படிப்​பட்​ட​வர் என்​ப​தற்கு சாட்​சி.

காவல்​துறை பிரச்​சா​ரம் செய்ய ஒதுக்​கிய இடத்​தில் குளறு​படிகள், திமுக​வின் வழக்​க​மான ஆம்​புலன்ஸ் அரசி​யல், தடியடி நடந்த காட்​சிகள் இவை எல்​லாம் வதந்​தி​யா? கள்​ளக்​குறிச்​சி​யில் ஏற்​பட்ட கள்​ளச்​சா​ராய மரணங்​களுக்கு கனக்​காத இதயம், கலங்​காத கண்​கள், இப்​போது மட்​டும் கலங்​கு​கிற​தா, இதில் இன்​னும் கொடுமை​யாக முதல்​வர் அமைத்த ஒருநபர் விசா​ரணை ஆணை​யம் விசா​ரிக்​கும் காட்​சிகள் ஊடகங்​களில் தொடர்ந்து வந்து கொண்​டிருக்​கின்​றன.

அதைப் பார்க்​கும் மக்​களுக்​கே, இது ஒருதலைபட்​ச​மான அரசின் தவறுகளை மூடி மறைக்​கும் கண்​துடைப்பு ஆணை​யம் என்​ப​தைக் காட்​டு​கிறது. எனவே கரூர் துயரத்​துக்​கான உரிய நீதி கிடைக்க சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும்.

பாமக தலை​வர் அன்​புமணி: கரூர் உயி​ரிழப்பு விவ​காரத்​தில், காவல்​துறை​யின் செயல்​பாடு​கள் சந்​தேகத்தை எழுப்​பு​கின்​றன. காவல்​துறை​யினர் நினைத்​திருந்​தால் விஜய் பரப்​புரைக்கு கூடு​தல் பரப்​பளவுள்ள இடத்தை ஒதுக்​கி​யிருக்​கலாம். கூடு​தலாக வருபவர்​களை நகரத்​துக்​குள் நுழைய விடா​மல் தடுத்​திருக்​கலாம். ஆனால், இதை​ செய்​யாதது தான் விபத்​துக்கு வழி வகுத்​த​தாக தெரி​கிறது.

ஆனால், விசா​ரணை தொடங்​கும் முன்பே செய்​தி​யாளர்​களை சந்​தித்த தமிழக காவல்​துறை தங்​கள் மீது எந்​தத் தவறும் இல்​லை. அனைத்​துத் தவறுகளும் கூட்​டத்தை ஏற்​பாடு செய்​தவர்​கள் மீது தான் என்று குற்​றம்​சாட்​டி​யிருக்​கிறது. பின் எப்​படி விசா​ரணையை நியாய​மாக நடத்த முடி​யும், இதனால் மரணங்​களின் பின்​னணி​யில் உள்ள மர்​மங்​கள் மூடி மறைக்​கப்​படும். எனவே, சிபிஐ விசா​ரணைக்கு அரசு ஆணை​யிட வேண்​டும்.

தமிழக பாஜக செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத்: உயிரிழப்பு சம்​பவத்​தில் கண்​துடைப்​புக்​காக திமுக அரசு நியமித்​துள்ள முன்​னாள் உயர் நீதி​மன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலை​மையி​லான குறுகிய கால விசா​ரணை அறிக்​கை​யால் எந்​த​வித பயனும் ஏற்​ப​டாது. எனவே தமிழக அரசு காலம் தாழ்த்​தாமல் உடனடி​யாக சிபிஐ விசா​ரணையை அறிவிக்க வேண்​டும்.

குறிப்​பாக இறந்​தவர்​களின் உடலை பிரேத பரிசோதனை செய்​வ​தில் முழு கவனம் செலுத்தி வெளிப்​படைத் தன்​மை​யுடன் தமிழக அரசு செயல்பட வேண்​டும். இதே​போல் பெருந்​தலை​வர் மக்​கள் கட்சி தலை​வர் என்​.ஆர்​.தன​பாலன் உள்​ளிட்​டோரும் கரூரில் நடந்த உயி​ரிழப்​பு​கள்​ குறித்​து சிபிஐ வி​சா​ரணைக்​கு வலி​யுறு​த்​தியுள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x