Published : 29 Sep 2025 10:50 AM
Last Updated : 29 Sep 2025 10:50 AM

கரூரில் இறந்தோர் பிள்ளைகளின் கல்விச் செலவை எஸ்ஆர்எம் ஏற்கும்: பாரிவேந்தர்

சென்னை: தவெக தலை​வர் விஜய் பிரச்​சா​ரத்​தின்​போது ஏற்​பட்ட நெரிசலில் சிக்கி இறந்​தோர் குடும்​பப் பிள்​ளை​களின் கல்​விச் செலவை எஸ்​ஆர்​எம் நிகர்​நிலை பல்​கலைக்​கழகம் ஏற்​கும் என பல்​கலை. நிறுவன வேந்​தர் டி.ஆர்​.​பாரிவேந்​தர் அறி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக அவர் சமூக வலைதள பக்​கத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கரூரில் நடை​பெற்ற அரசி​யல் நிகழ்ச்​சி​யின்போது நடந்த துர​திருஷ்ட​வச​மான சம்​பவம் மிகுந்த கவலை​யளிக்​கிறது. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பங்​களுக்கு என் ஆழ்ந்த அனு​தாபங்​களைத் தெரி​வித்​துக் கொள்​கிறேன். காயமடைந்த அனை​வரும் விரை​வில் நலம்​பெற பிரார்த்​திக்​கிறேன்.

உயி​ரிழந்​தோரின் குடும்​பத்​தைச் சேர்ந்த பள்ளி மற்​றும் கல்​லூரி படிக்​கும் மாணவர்​களின் முழு கல்​விச் செல​வை​யும் எஸ்​ஆர்​எம் கல்விக் குழு​மம் ஏற்​கும். அவர்​கள் தற்​போது படிக்​கும் கல்வி நிறு​வனங்​களுக்கே அவர்​களின் கல்விக் கட்​ட​ணம் செலுத்​தப்​படும். இவ்வாறு அவர் தெரி​வித்​து உள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x