Published : 29 Sep 2025 10:28 AM
Last Updated : 29 Sep 2025 10:28 AM

மீண்டும் புத்திசந்திரன்... உதகைக்கு கணக்குப் போடுவதால் உதறலில் கப்பச்சி டி.வினோத்!

புத்திசந்திரன், கப்பச்சி டி.வினோத்

நீலகிரி மாவட்ட அதிமுக செயலாளராக கப்பச்சி டி.வினோத் இருக்கிறார். ஒரு காலத்தில், முன்னாள் அமைச்சர் புத்திசந்திரனின் சிஷ்யகோடியாக இருந்தவர். அப்படிப்பட்ட தனது சிஷ்யரை குருவே வீழ்த்த வியூகம் வகுத்து வருவது தான் நீலகிரி மாவட்ட அதிமுக-வில் இப்போது ஹாட் நியூஸ்.

நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள 3 தொகு​தி​களில் 2 தொகு​தி​களை தற்​போது திமுக கூட்​டணி தான் கைக்​குள் வைத்​திருக்​கிறது. ஆனாலும் இந்த மாவட்​டத்தை இன்​ன​மும் அம்​மா​வின் கோட்டை என்று சொல்​லிக் கொண்​டிருக்​கி​றார்​கள் அதி​முக-​காரர்​கள். இந்​தச் சூழலில், இந்​தத் தேர்​தலில் நீல​கிரி மாவட்​டத்​தில் சீட் போட்டு இடம்​பிடிக்க அதி​முக தலை​கள் இப்​போதே வடம்​பிடிக்க ஆரம்​பித்துவிட்​டார்​கள். அதில் முக்​கிய​மான​வர் முன்​னாள் அமைச்​சர் புத்​திசந்​திரன்.

இவர் தான் முன்பு நீல​கிரி மாவட்​டச் செய​லா​ள​ராக இருந்​தார். 2011-ல் உதகமண்​டலம் தொகு​தி​யில் போட்​டி​யிட்டு வென்ற இவரை முதலில் சுற்​றுலாத்​துறைக்​கும் பிறகு உணவுத் துறைக்​கும் அமைச்​ச​ராக்​கி​னார் ஜெயலலி​தா. ஆனால், அதி​காரம் தூள்​பறந்​த​தாலோ என்​னவோ ஐந்தே மாதத்​தில் புத்​திசந்​திரனை அமைச்​சர​வையி​லிருந்து நீக்​கி​னார்.

நீல​கிரி மாவட்ட அதி​முக-​வில் அதி​காரப் புள்​ளி​யாக புத்​திசந்​திரன் இருந்த போது 2001-ல் அதி​முக-வுக்கு புதிய வரவாக வந்​தவர் கப்​பச்சி டி.​வினோத். அந்த வகை​யில் இவரது அரசி​யல் வழி​காட்​டியே புத்​திசந்​திரன் தான். 2008-ல் இளைஞர் மற்​றும் இளம்​பெண்​கள் பாசறை​யில் சேர்க்​கப்​பட்ட வினோத், அடுத்த ஆண்டே அந்த அமைப்​பின் நீல​கிரி மாவட்​டச் செய​லா​ள​ராக ஜெயலலி​தா​வால் அங்​கீகரிக்​கப்​பட்​டார். அதி​லிருந்தே அண்​ணனுக்கு ஏறு​முகம் தான்.

இந்த நிலை​யில் தான், புத்​திசந்​திரன் 2011-ல் அமைச்​ச​ரா​னார். ஆனால், மிக​வும் குறுகிய காலத்​திலேயே அமைச்​சர​வையி​லிருந்து நீக்​கப்​பட்ட புத்​திசந்​திரனை அப்​படியே ஓரங்​கட்​டி​னார் ஜெயலலி​தா. 2016-ல் மீண்​டும் உதகமண்​டலம் தனக்​குக் கிடைக்​கும் என நினைத்​தார் புத்​திசந்​திரன். ஆனால், அவரை தவிர்த்​து​விட்டு அவரது சிஷ்யகோடி​யான கப்​பச்சி டி.​வினோத்​துக்கு சீட் கொடுத்த ஜெயலலி​தா, புத்​திசந்​திரனிடம் இருந்த மாவட்​டச் செய​லா​ளர் பதவியை​யும் பறித்து வினோத்​திடமே கொடுத்​தார்.

அதி​காரத்​தின் உச்​சத்​தில் இருந்த புத்​திசந்​திரன், இப்​படி தொடர் சரி​வு​களை சந்​தித்த நிலை​யில், அவரது சிஷ்ய​ரான கப்​பச்சி டி.​வினோத் அசுர வளர்ச்சி கண்​டார். புத்​திசந்​திரனோ கட்சி நிகழ்ச்​சிகளுக்​குக் கூட வர மனமில்​லாமல் ஒதுங்​கியே இருந்​தார். இந்த நிலை​யில், அதி​காரம் தனது கைக்கு மாறியதும் அதி​முக-​வின் அமைப்​புச் செய​லா​ளர்​களில் ஒரு​வ​ராக புத்​திசந்​திரனை​யும் உட்​கார​வைத்​தார் இபிஎஸ்.

இதையடுத்​து, இப்​போது மாவட்​டச் செய​லா​ளர் பதவி​யும் மீண்​டும் அவரது கைக்கே வந்து சேரும் என்று சொல்ல ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள் புத்​திசந்​திரனுக்கு நெருக்​க​மான​வர்​கள். அதே​போல், இம்​முறை உதகமண்​டலம் தொகுதி எடப்​பாடி​யார் தயவில் மீண்​டும் தனக்​குக் கிடைக்​கும் என மலை​போல் நம்​பிக்​கொண்​டிருக்​கி​றார் புத்​திசந்​திரன். அதே நம்​பிக்​கை​யுடன் மீண்​டும் அதி​முக மேடைகளில் தென்பட ஆரம்​பித்​திருக்​கி​றார்.

அண்​மை​யில் உதகை​யில் நடந்த அதி​முக செயல்​வீரர்​கள் கூட்​டத்​தில் புத்​திசந்​திரனை திடீரென பார்த்​தவர்​கள் ஆச்​சரியப்பட்​டுப் போனார்​கள். இதனைத் தொடர்ந்​து, எடப்​பாடி​யா​ரின் உதகை பிரச்​சா​ரப் பயணச் செல​வு​களுக்​காக முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணிக்கு புத்​திசந்​திரன் தன்​னால் முடிந்​ததைச் செய்து கொடுத்​த​தாகச் சொல்​கி​றார்​கள். இதையெல்​லாம் கூட்​டிக் கழித்து ஒரு கணக்​குப் போடும் அதி​முக-​வினர், “அண்​ணன் மீண்​டும் உதகைக்கு அச்​சா​ரம் போடு​கி​றார்” என்று வெளிப்​படை​யாகவே பேச ஆரம்​பித்​திருக்​கி​றார்​கள்.

அவர்​கள் சொல்​வதற்​கேற்ப, எடப்​பாடி​யா​ரின் உதகை பிரச்​சா​ரப் பயணத்​தின் போது நடு​நாயக​மாக வந்து கலந்​து​கொண்ட புத்​திசந்​திரன், விவ​சா​யிகள், வியா​பாரி​கள் உடனான கலைந்​துரை​யாடல் கூட்​டத்​தில் எடப்​பாடி​யார் அமர்ந்​திருந்த மேடை​யில் கப்​பச்சி டி.​வினோத்​துக்கு அரு​கிலேயே இடம்​பிடித்து அமர்ந்​திருந்​தார். இதனால், இத்​தனை நாளும் பாரா​முக​மாக இருந்த குரு​வும் சிஷ்யரும் வேறு வழி​யில்​லாமல் முகம்​கொடுத்து பேசவேண்​டிய சூழலும் ஏற்​பட்​டது.

எடப்​பாடி​யார் தனது பிரச்​சா​ரப் பயணத்​துக்கு நடு​வே, அதி​முக கூட்​ட​ணி​யில் இம்​முறை குன்​னூர் தொகுதி பாஜக-வுக்​கும் உதகை மற்​றும் கூடலூர் தொகு​தி​கள் அதி​முக-வுக்​கும் ஒதுக்​கப்​படலாம் என சூசக​மாக சொல்​லிச் சென்​றிருக்​கி​றார். இதையடுத்து குரு​வும் சிஷ்ய​ரும் உதகைக்​காக கோதா​வில் குதிக்க ஆயத்​த​மாகி வரு​கி​றார்​கள்.

இதுகுறித்து புத்​திசந்​திரனிடம் கேட்​ட​போது, “கருத்​துக்​கூற விரும்​ப​வில்​லை” என நழு​வி​னார். கப்​பச்சி டி.​வினோத்​தோ, “2026 சட்​டப் பேரவை தேர்​தலில் நீல​கிரி மாவட்​டத்​தில் உள்ள மூன்று தொகு​தி​களி​லும் அதி​முக மற்​றும் கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை வெற்​றி​பெறச் செய்​வது எனது கடமை” என்று மட்​டும் சொன்​னார். கப்​பச்சி டி.​வினோத் வெளி​யில் இப்​படிச் சொன்​னாலும் புத்​திசந்​திரனின் திடீர் புறப்​பாடு உள்​ளுக்​குள் அவரது உறக்​கத்​தைக் கெடுத்​துக் கொண்​டிருக்​கிறது என்​கிறார்​கள் உதகை அதிமுக-​காரர்​கள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x