Published : 29 Sep 2025 06:05 AM
Last Updated : 29 Sep 2025 06:05 AM

தவெக தொண்டர்களுக்கு ஆம்புலன்ஸ்களை தாக்கும் மனநிலை ஏற்பட்டதற்கு இபிஎஸ் பொறுப்பேற்க வேண்டும்: அமைச்சர்

சென்னை: தவெக கூட்​டத்​தில் வந்த ஆம்​புலன்​ஸ்​களை மறித்து தாக்​குதல் நடத்​தும் மனநிலைக்கு தொண்​டர்​களை மாற்​றியதற்கு எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பொறுப்​பேற்க வேண்​டும் என்று சுகா​தா​ரத் துறை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கரூர் சம்​பவத்​தில் தமிழகமே துயரத்​தில் இருக்க, பொறுப்​புள்ள எதிர்க்​கட்​சித் தலை​வர் பழனி​சாமி பேரிடரிலும் அரசி​யல் செய்து கொண்​டிருக்​கிறார். காவல் துறை நிபந்​தனை​கள் எதை​யும் தவெக பிரச்​சா​ரத்​தில் கடைப்​பிடிக்​க​வில்​லை. அவர்​கள் எல்லை மீறி நடக்க எதிர்க்​கட்​சித் தலை​வரின் செயல்​பாடு​களும் காரண​மாக அமைந்​து​விட்​டன.

நடுரோட்​டில் பேருந்தை நிறுத்தி கூட்​டம் நடத்​தி​விட்​டு, அவசரத்​துக்கு அவ்​வழியே ஆம்​புலன்ஸ் வந்​தால், அரசாங்​கம் இடையூறு செய்​கிறது என்று சொல்லி அங்​கிருந்த தொண்​டர்​களை மட்​டுமல்ல, ஒட்​டுமொத்​தத் தமிழகத்​துக்​கும் தவறான மனஓட்​டத்தை புகுத்​தி​ய​வர் பழனி​சாமி​தான். ஆள் இல்​லாமல் ஆம்​புலன்ஸ் வந்​தால் ஓட்​டுநரே நோயாளி​யாக அனுப்​பப்​படு​வார் என பழனி​சாமி சொன்ன பிறகு​தான், அவருடைய கூட்​டங்​களில் ஆம்​புலன்​ஸ்​கள் அடித்து நொறுக்​கப்​பட்​டு ஓட்​டுநர்​கள் தாக்​கப்​பட்​டனர்.

பழனி​சாமி போட்ட புதிய அரசி​யல் எண்​ணத்​துக்கு ஆட்​பட்​டுத்​தான், தவெக கூட்​டத்​தில் ஆம்​புலன்​ஸ்​கள் வந்​த​போது அதை அனு​ம​திக்க மறுத்​து, அக்​கட்​சி​யினர் தாக்​குதல் நடத்​தி​னார்​கள். தொண்​டர்​களை இந்த மனநிலைக்கு மாற்​றிய பழனி​சாமி​யும் தார்​மீக பொறுப்​பேற்க வேண்​டிய​வர்​தான். அனு​மதி தரா​விட்​டால் அதி​லும் அரசி​யல் செய்​வது, அனு​மதி அளித்​தால் அந்த நிபந்​தனை​களை மீறு​வது, நிபந்​தனை​களை மீறும் ரசிகர்​களை ஊக்​கு​விப்​பது என தவெக மோச​மான அரசி​யலுக்கு மாறி வரு​கிறது. அதனை அதி​முக ஆதரிக்​கிறது.

நகருக்கு வெளியே பிரச்​சா​ரத்தை வைத்து கொள்​ளுங்​கள் என்று காவல்​துறை கேட்​டுக் கொண்​டால், முடி​யாது நாங்​கள் கூட்​டத்தை காட்​டு​வதற்கு முட்டு சந்​து​தான் தேவை என்று அப்​பாவி பொது​மக்​களை அலைக்​கழிப்​பது​தான் பழனி​சாமி போன்​றவர்​களின் அரசி​ய​லாக இருக்​கிறது.

தவெக கூட்​டத்​துக்கு முழு​மை​யான பாது​காப்பு காவல்​துறை​யால் வழங்​கியதை விஜய் ஒப்​புக்​கொண்டு பேசி​யதை பழனி​சாமி பார்க்​க​வில்​லை​யா ஆளுங்​கட்​சி​யின் மீது பழி போட​வும் அரசி​யல் செய்​ய​வும் எந்த காரண​மும் இல்லை என்​றால், மக்​களு​டன் நின்று மக்​களுக்கு தேவை​யானதைச் செய்து கொடுத்து நல்ல அரசி​யலை செய்​யுங்​கள். அரசி​யல் லாபத்​துக்​காக எதிர்க்​கட்​சித் தலை​வர் வதந்​தி​யைப் பரப்​பும் நோக்​கோடு பேசுவது தமிழகம் இது​வரை கண்​டி​ராதது. இவ்​வாறு தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x