Published : 29 Sep 2025 06:05 AM
Last Updated : 29 Sep 2025 06:05 AM

கரூரில் நடந்திருப்பது வரலாறு காணாத கொடுந்துயரம்: தலைவர்கள், திரையுலகினர் இரங்கல்

சென்னை: கரூரில் நடந்​திருப்​பது வரலாறு காணாத கொடுந்​துயரம் என்​றும், பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் குறித்து முழு​மை​யான விசா​ரணை நடத்​தப்பட வேண்​டும் எனவும் அச்​சம்​பவத்​துக்கு இரங்​கல் தெரி​வித்த பல்​வேறு அரசி​யல் கட்சித் தலை​வர்​கள் வலி​யுறுத்​தி​யுள்​ளனர்.

துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின்: கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழப்​பு​கள் ஏற்​பட்​டுள்ள செய்​தி​கள் மிகுந்த வேதனை அளிக்​கின்​றன. உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தா​ருக்கு என் ஆழ்ந்த இரங்​கல்​கள்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி: கரூரில் நடை​பெற்ற தவெக கட்​சி​யின் பிரச்​சா​ரக் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் தரு​கிறது.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: விஜய் பரப்​புரை கூட்​டத்​தில் நெரிசலால் அப்​பாவி மக்​கள் 40 பேர் உயி​ரிழந்த நிகழ்​வுக்கு இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​கிறேன். இதற்கு யார் காரணம் என்​பதை கண்​டறிந்து நடவடிக்கை எடுக்​கவேண்​டும்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: கரூரில் நடந்த அரசி​யல் கூட்​டத்​தில் 30-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்​சி​யளிக்​கிறது.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: பிரச்​சா​ரக் கூட்​டத்​துக்கு வரு​வதை குழந்​தைகள், முதி​யோர் தவிர்க்க வேண்​டுமென விஜய் வேண்​டு​கோள் விடுத்த நிலை​யிலும், இது​போன்ற சம்​பவம் நடந்​திருப்​பது வருத்​தமளிக்​கிறது.

பாமக நிறு​வனர் ராம​தாஸ்: கரூரில் நடந்த கூட்​டநெரிசலில் சிக்கி குழந்​தைகள், பெண்​கள் உட்பட 40-க்​கும் மேற்​பட்​டோர் உயி​ரிழந்த சம்​பவம் அதிர்ச்​சி​யை​யும், வேதனையை​யும் அளிக்​கிறது.

மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ: காவல்​துறை வகுத்த விதி​முறை​கள் பின்​பற்​றப்​ப​டாத​தால் தமிழகத்​தில் வரலாறு காணாத கொடுந்​துயரம் கரூரில் நடந்​திருக்​கிறது.

திக தலை​வர் கி.வீரமணி: கரூர் மாநகரமே சோக இருளில் மூழ்​கிக் கிடக்​கிறது. ஓர் அரசி​யல் கூட்​டத்​தில் இப்​படியொரு கொடூரம் இது​வரை எங்​கும் நடந்​தி​ராத, கேள்​விப்​ப​டாத அவல​மாகும்.

விசிக தலைவர் திரு​மாவளவன்: விஜய் பரப்​புரை பயணத்​தில் நடந்த கொடுந்​துயரம் நெஞ்சை பதற வைக்​கிறது.

தேமு​திக பொதுச்​செய​லா​ளர் பிரேமல​தா: தவெக பரப்​புரை​யில் இந்த அளவுக்கு மக்​கள் உயிர் பலி​யாகி இருப்​பது மிகப்​பெரிய துயர​மான சம்​பவ​மாகும்.

இந்​திய கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் மு.வீர​பாண்​டியன்: கரூரில் விஜய் பரப்​புரைக்கு காவல் ​துறை வழங்​கிய இடம் பொருத்​த​மான​தா, கூட்​டம் எந்த அளவுக்கு திரளும் என மதிப்​பிடப்​பட்​டதா என்​பவை பற்றி முழு விசா​ரணை நடத்த வேண்​டும்.

மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் பெ.சண்​முகம்: இந்​தி​யா​வில் இது​வரை அரசி​யல் பிரச்​சார நிகழ்​வின்​போது ஏற்​பட்ட நெரிசலில் இந்த அளவு பெரும் எண்​ணிக்​கை​யில் உயி​ரிழப்பு நிகழ்ந்​த​தில்​லை. அதிர்ச்சி அளிக்​கிறது.

தமாகா தலை​வர் ஜி.கே.​வாசன்: விஜய் பரப்​புரை​யில் அளவுக்கு அதி​க​மான கூட்​டத்தை அனு​ம​தித்​தது ஏன், என்ன கோட்​பாடு​கள் பின்​பற்றன என்​பது குறித்து உயர்​மட்ட நீதி விசா​ரணை தேவை.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: தவெக கூட்​டத்​தில் சிக்கி 30-க்​கும் அதி​க​மானோர் உயி​ரிழந்த செய்தி அதிர்ச்சியும், வேதனை​யும் தரு​கிறது.

இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் கட்​சி​யின் தேசிய தலை​வர் கே.எம்​.​காதர் மொகிதீன்: விஜய் பரப்​புரை கூட்​டத்​தில் ஏற்​பட்ட உயி​ரிழப்​பு​கள் பெரியள​வில் உலுக்கி துயரத்​தில் ஆழ்த்தி இருக்​கிறது.

தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன்: விஜய் பிரச்​சா​ரத்​துக்கு தாமத​மாக வந்​ததே மக்​கள் அதி​க​மாக கூடியதற்கு காரணம்.

ஐஜேகே தலை​வர் ரவிபச்​ச​முத்​து: பரப்​புரைக் கூட்​டத்​தில் சிக்கி இத்​தனை உயிர்​கள் இழந்​திருப்​பது எவ்​வகை​யிலும் நியாயப்​படுத்த முடி​யாதது.

முன்​னாள் எம்​.பி. சரத்​கு​மார்: தான் செல்​லும் இடங்​களில் அதி​க​மான கூட்​டம் சேரு​வதை விஜய் பெரு​மை​யாக எண்​ணிக் கொண்​டதே இந்த பெரும் உயிர்​சேதத்​துக்கு முக்​கிய காரணம்.

இதே​போல் பாமக தலை​வர் அன்​புமணி, தமிழக பாஜக முன்​னாள் தலை​வர்​கள் தமிழிசை, அண்​ணா​மலை, செய்தி தொடர்​பாளர் ஏ.என்​.எஸ்​.பிர​சாத், நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான், நடிகர் ரஜினி, முன்​னாள் எம்​.பி. சு.​திரு​நாவுக்​கரசர், கொங்​கு​நாடு மக்​கள் தேசிய கட்சி பொதுச்​செய​லா​ளர் ஈ.ஆர்​.ஈஸ்​வரன், காம​ராஜர் மக்​கள் கட்சி பொதுச்​செய​லா​ளர் பா.குமரய்யா உள்​ளிட்​டோரும் இரங்​கல் தெரி​வித்​துள்​ளனர்.

நிகழ்ச்​சிகள் தள்ளிவைப்பு: இதற்​கிடையே கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களுக்கு அஞ்​சலி செலுத்​தும் வித​மாக அரசி​யல் கட்​சி​யினர் தங்​களது கட்​சி​யின் நிகழ்ச்​சிகளை தள்ளி வைத்​துள்​ளனர். அதன்​படி திமுக சார்​பில் நேற்று (செப்​.28) நடத்​தப்​பட​விருந்த அனைத்து நிகழ்ச்​சிகளும் ஒத்​திவைக்​கப்​பட்​டன.

அதே​போல் தரு​மபுரி​யில் நேற்று நடை​பெறவேண்​டிய அதிமுக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி​யின் பிரச்​சா​ரம் தள்ளிவைக்​கப்​பட்​டது. தமிழகத்​தில் அடுத்த 2 நாட்​களுக்கு பாஜக சார்​பில் திட்​ட​மிடப்​பட்ட அனைத்து நிகழ்ச்​சிகளும் ரத்து செய்​யப்​பட்​டுள்​ளன. அடுத்த 3 நாட்​களுக்கு துக்​கம் கடைபிடிப்​ப​தோடு, நடக்கவிருந்​த அனைத்​து நிகழ்ச்​சிகளும்​ ரத்​துசெய்​வ​தாக காங்​கிரஸ்​ அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x