Published : 29 Sep 2025 01:03 AM
Last Updated : 29 Sep 2025 01:03 AM

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிக்க மீண்டும் கரூர் செல்ல விஜய் திட்டம்

சென்னை: கரூர் பிரச்​சார கூட்​டத்​தின்​போது கூட்ட நெரிசலில் சிக்கி உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினருக்கு தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்​தவர்​களுக்கு தலா ரூ.2 லட்​ச​மும் நிவாரணம் வழங்​கப்​படு​வ​தாக தவெக தலை​வர் விஜய் அறி​வித்​துள்​ளார்.

கரூர் வேலு​சாமிபுரத்​தில் கூட்ட நெரிசல் ஏற்​பட்​ட நிலை​யில், நேற்று முன்தினம் இரவே திருச்சி வந்த விஜய், தனி விமானம் மூலம் உடனடி​யாக சென்னை திரும்​பி​னார். பிரச்​சார கூட்​டத்​தில் திடீரென நெரிசல் ஏற்​பட்​டதற்​கான காரணம், பாதிக்​கப்​பட்​ட​வர்​களின் குடும்​பங்​களுக்கு செய்ய வேண்​டிய உதவி​கள், அவர்​களது குடும்​பத்​தினரை சந்​தித்து ஆறு​தல் கூறு​வது ஆகியவை தொடர்​பாக கட்சி நிர்​வாகி​களு​டன் விஜய் ஆலோ​சனை நடத்​தி​னார். இதையடுத்​து, உயி​ரிழந்​தவர்​களின் குடும்​பத்​தினரை நேரில் சந்​தித்து ஆறு​தல்கூறு​வதற்​காக விஜய் மீண்​டும் கரூர் செல்ல அனு​மதி கேட்​டு, கட்​சித் தரப்​பில் காவல் துறை​யில் மனு கொடுக்​கப்பட உள்​ள​தாக​வும்கூறப்​படு​கிறது.

இதற்​கிடையே, விஜய் வெளி​யிட்டஅறிக்​கை: இதயம் நொறுங்​கிப் போய் இருக்​கிறேன். தாங்க முடி​யாத, வார்த்​தைகளால் சொல்ல முடி​யாத வேதனை​யிலும், துயரத்​தி​லும் உழன்று கொண்​டிருக்​கிறேன். நம் உறவு​களை இழந்து தவிக்​கும் பெருந்​துயர்​மிகு மனநிலை​யில், என் மனம் படு​கிற வேதனையை எப்​படி சொல்​வதென்றே தெரிய​வில்​லை.

கண்​களும், மனசும் கலங்​கித் தவிக்​கிறேன். நான் சந்​தித்த உங்​கள் எல்​லோருடைய முகங்​களும் என் மனதில் வந்து போகின்​றன. என் சொந்​தங்​களே, நம் உயிரனைய உறவு​களை இழந்து தவிக்​கும் உங்​களுக்​கு, சொல்​லொணா வேதனை​யுடன் ஆழ்ந்த இரங்​கலை தெரி​வித்​துக்​கொள்​ளும் அதே வேளை​யில், இந்த பெரும் சோகத்தை உங்​கள் மனதுக்கு நெருக்​க​மாக நின்று பகிர்ந்​து​கொள்​கிறேன்.

நமக்கு ஈடு​செய்​யவே இயலாத இழப்​பு​தான். யார் ஆறு​தல் சொன்​னாலும் நம் உறவு​களின் இழப்பை தாங்​கவே இயலாது. இருந்​தும், உங்​கள் குடும்​பத்​தில் ஒரு​வ​னாக, உறவை இழந்து தவிக்​கும் நம் சொந்​தங்​களின் குடும்​பம் ஒவ்​வொன்​றுக்​கும் தலா ரூ.20 லட்​ச​மும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரு​வோருக்கு தலா ரூ.2 லட்​ச​மும் அளிக்க எண்​ணுகிறேன். இழப்​புக்கு முன்​னால் இது ஒரு பெரும் தொகையன்​று​தான். ஆனாலும், இந்த நேரத்​தில், எனது உறவு​களான உங்​களு​டன் மனம்பற்றி நிற்க வேண்​டியது உங்​கள் குடும்​பத்தை சேர்ந்​தவ​னாக என் கடமை. அதே​போல, காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் அனைத்து உறவு​களும் மிக விரை​வில் குணமடைந்து வீடு திரும்ப இறைவனை பிரார்த்​திக்​கிறேன். சிகிச்​சை​யில் இருக்​கும் நம் உறவு​கள் அனை​வருக்​கும் அனைத்து உதவி​களை​யும் தவெக உறு​தி​யாக செய்​யும். இறைவன் அருளால், அனைத்​தில் இருந்​தும் நாம் மீண்டு வர முயற்​சிப்​போம்​. இவ்​வாறு விஜய்​ தெரி​வித்​துள்​ளார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x