Last Updated : 28 Sep, 2025 01:33 PM

1  

Published : 28 Sep 2025 01:33 PM
Last Updated : 28 Sep 2025 01:33 PM

கரூர் செல்வாரா விஜய்? - பதில் சொல்லாமல் சென்ற தவெக நிர்வாகி நிர்மல்குமார்

சென்னை: தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் பதிலளிக்காமல் சென்றார்.

கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் பிரச்சாரம் செய்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணியிடம் தவெக தரப்பில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை வேண்டும் என்று தவெக சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

இதை வலியுறுத்தி தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார் சென்னையில் மதுரை உயர் நீதிமன்ற நீதிபதி தண்டபாணியைச் சந்தித்தார். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நிர்மல்குமார், “நீதிபதியிடம் இது குறித்து முறையீடு செய்துள்ளோம். நாளை மதியம் 2.15 மணிக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக சொல்லியுள்ளார். இந்த விவகாரம் நீதிமன்ற விசாரணையில் இருப்பதால் விரிவாக பேச வேண்டாம்” என்றார்.

மேலும், நாளை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த பின்னர் இது குறித்து எங்கள் கருத்தை தெரிவிப்போம்” என்றார். தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்வாரா என்றும், தவெக நிர்வாகிகள் யாரும் ஏன் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்கவில்லை என்றும் செய்தியாளர்கள் அவரிடம் கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் பதில் எதுவும் அளிக்காமல் சென்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x