Published : 26 Sep 2025 10:03 AM
Last Updated : 26 Sep 2025 10:03 AM

யாரோ எழுதிக் கொடுத்தத பழனிசாமி படிச்சுட்டுப் போயிட்டாரு! - குத்தலாய் பேசும் குன்னூர் திமுக வைஸ் சேர்மன்

எடப்பாடி பிரச்சாரம் (இடது) குன்​னூர் நகராட்சி துணைத் தலை​வர் வாசிம் ராஜா (வலது)

அண்மையில் நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்ட எடப்பாடியார், “குன்னூர் நகராட்சியில் டெண்டர் விடும் பணிகளில் திமுக துணைத் தலைவர் ஊழல் செய்திருப்பதாகவும், சட்டவிரோத கட்டிடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும் புகார்கள் வந்திருக்கின்றன. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதிரடி கிளப்பினார்.

எடப்​பாடி​யார் பற்​ற​வைத்த இந்​தப் பட்​டாசு குன்​னூர் திமுக-​வினரை தகிக்க வைத்​திருக்​கிறது. முன்​னாள் நீல​கிரி மாவட்ட திமுக செய​லா​ளர் பா.​மு.​மு​பாரக்​கின் மகன் வாசிம் ராஜா தான் இப்​போது குன்​னூர் நகராட்சி துணைத் தலை​வ​ராக இருக்​கி​றார் என்​ப​தால் இது மாவட்ட அரசி​யலிலும் பேசுபொருளாகி இருக்​கிறது.

எடப்​பாடி​யா​ரின் புகார் குறித்து நம்​மிடம் பேசிய குன்​னூர் அதி​முக-​வினர், “குன்​னூர் சுற்​று​வட்​டாரத்​தில் சமீப கால​மாக கட்​டிடங்​களின் எண்​ணிக்கை அதி​கரித்​துக் கொண்டே வரு​கிறது. நீல​கிரி மாவட்​டத்​தில் புதி​தாக கட்​டிடங்​கள் கட்​டு​வதற்​காக மாவட்ட நிர்​வாகத்​தின் அனு​மதி வேண்டி நீண்ட நாட்​களாக பலரும் காத்​திருக்​கும் நிலை​யில், குன்​னூரில் திமுக-​வினர், விதி​களை மீறி கட்​டிடங்​களுக்கு அனு​மதி அளிக்​கின்​ற​னர். இதனால், உழவர் சந்​தை, புரூக் லேண்ட், சிம்ஸ் பார்க், ஓட்​டுப் பட்​டறை, ஸ்டேன்லி உள்​ளிட்ட இடங்​களில் விதி​களுக்​குப் புறம்​பாக சுமார் எண்​ணூற்​றுக்​கும் மேற்​பட்ட கட்​டிடங்​கள் முளைத்து வரு​கின்​றன.

மேலும், குன்​னூர் நகராட்​சி​யில் திமுக கவுன்​சிலர்​களின் வார்​டு​களுக்கு அது​வும் துணைத் தலை​வ​ருக்கு நெருக்​க​மான​வர்களின் வார்​டு​களுக்கே அதி​க​மாக நிதி ஒதுக்​கப்​படு​கிறது. இதை திமுக கவுன்​சிலர்​களே வருத்​தப்​பட்​டுச் சொல்​கி​றார்​கள். நகராட்​சி​யில் விடப்​படும் அனைத்து டெண்​டர்​களி​லும் துணை தலை​வர் தலை​யிட்டு தனக்​கானதை சாதித்​துக் கொள்​கி​றார். இதைத்​தான் எடப்​பாடி​யார் தனது பிரச்​சா​ரத்​தில் குறிப்​பிட்​டுப் பேசி​னார்” என்​ற​னர்.

திமுக கவுன்​சில​ரான ராபர்ட் நம்​மிடம், “குன்​னூர் நகராட்​சி​யில் பல இடங்​களில் சாலைப் பணி​கள் நடை​பெற்​றுள்​ளன. ஆனால், இந்​தப் பணி​கள் அனைத்​தும் தரமற்ற வகை​யில் மேற்​கொள்​ளப்​பட்​ட​தால் அண்​மை​யில் பெய்த மழை​யில் சாலை​கள் முழு​மை​யாக அடித்​துச் செல்​லப்​பட்​டு​விட்​டன. இதனால் மக்​களின் வரிப்​பணம் வீணடிக்​கப்பட்​டுள்​ளது. வளர்ச்​சிப் பணி​களை மேற்​கொள்​வ​தி​லும் பாரபட்​சம் காட்​டப்​படு​வ​தால் அரசால் ஒதுக்​கப்​படும் நிதி​யானது முறை​யாக மக்​களுக்​குச் செல்​லாமல் தடுக்​கப்​படு​கிறது” என்​றார்.

ராபர்ட்

இதற்​கெல்​லாம் குன்​னூர் நகராட்சி துணை தலை​வர் வாசிம் ராஜா​விடம் விளக்​கம் கேட்​ட​போது, “அதி​முக ஆட்​சி​யில் குன்​னூர் நகராட்​சி​யில் உருப்​படி​யாக எந்​தப் பணி​யும் நடக்​க​வில்​லை. திமுக ஆட்​சி​யில் தான் அனைத்​துப் பகு​தி​களி​லும் வளர்ச்​சிப் பணி​கள் நடக்​கின்​றன. குன்​னூரில் உள்ள 30 வார்​டு​களி​லும் வேலை​கள் நடக்​கின்​றன. உண்மை நில​வரம் இப்​படி இருக்க, யாரோ எழு​திக் கொடுத்​ததை அதில் உண்மை இருக்​கிறதா என்​றுகூட விசா​ரிக்காமல் எவ்​வித அடிப்​படை ஆதா​ர​மும் இல்​லாமல் பழனி​சாமி பாட்​டுக்கு படிச்​சுட்​டுப் போயிட்​டாரு” என்​றார்.

இதனிடையே, “குன்​னூரில் பேசுவதற்கு எத்​தனையோ சப்​ஜெக்ட் இருக்​கை​யில் மிகச் சாதாரண மனித​ரான வாசிம் ராஜாவை பற்றி பேசி அவரை ஸ்டேட் லீடர் ரேஞ்​சுக்கு பெரி​யாளாக்​கிட்​டுப் போய்ட்​டாரு இபிஎஸ்” என்று திமுக-வுக்​குள்​ளேயே சிலர் அங்​கலாய்க்​கிறார்​கள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x