Published : 26 Sep 2025 05:49 AM
Last Updated : 26 Sep 2025 05:49 AM

ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல்: தலைமைச் செயலாளரிடம் பாமக எம்எல்ஏ அருள் பரபரப்பு புகார் - நடந்தது என்ன?

சென்னை: ​பாமக சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து ஜி.கே.மணியை விடு​வித்​து, தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரனை ன், இருக்​கை​யும் ஒதுக்க வேண்​டும் என்று சட்​டப்​பேரவை செயலரிடம் அன்​புமணி தரப்​பினர் மனு அளித்​துள்​ளனர். பாமக நிறு​வனர் ராம​தாஸ் மற்​றும் அவரது மகனான கட்​சித் தலை​வர் அன்​புமணி இடையே அதி​காரப்​ போட்டி நிலவி வரு​கிறது. இதனால், இரு அணி​யாக செயல்​பட்டு வரு​கின்​றனர்.

இந்த நிலை​யில், அன்​புமணி ஆதரவு பாமக எம்​எல்​ஏக்​கள் சிவக்​கு​மார் (மயிலம்), சதாசிவம் (மேட்​டூர்), வெங்​கடேஸ்​வரன் (தரு​மபுரி) ஆகியோர் வழக்​கறிஞர் பாலு​வுடன் நேற்று சென்னை தலை​மைச் செயல​கம் சென்​று, சட்​டப்​பேரவை செயலர் கி.சீனி​வாசனை சந்​தித்​தனர். ராம​தாஸ் ஆதர​வாள​ரான ஜி.கே.மணியை சட்​டப்​பேரவை குழு தலை​வர் பதவி​யில் இருந்து நீக்க வேண்​டும் என மனு கொடுத்​தனர். பின்​னர், செய்​தி​யாளர்​களிடம் வழக்​கறிஞர் பாலு கூறிய​தாவது:

ஒருமனதாக தேர்வு: சட்​டப்​பேர​வைக் குழு தலை​வ​ராக செயல்​பட்டு வந்த ஜி.கே.மணியை விடு​வித்​து, தரு​மபுரி எம்​எல்ஏ வெங்​கடேஸ்​வரன் ஒரு​மன​தாக சட்​டப்​பேரவை உறுப்​பினர்​களால் தேர்வு செய்​யப்​பட்​டார். துணைத் தலை​வ​ராக மேட்​டூர் எம்​எல்ஏ சதாசிவம் தேர்​வா​னார். கொற​டா​வாக மயிலம் எம்​எல்ஏ சிவக்​கு​மார் தேர்வு செய்​யப்​பட்​டதும் உறுதி செய்​யப்​பட்​டது. எம்​எல்​ஏக்​கள் கூட்​டம் முடிந்​து, கட்​சி​யின் அரசி​யல் தலை​மைக் குழு கூட்​டத்​தில் இதற்​கான ஒப்​புதல் வழங்​கப்​பட்​டது. இதற்​கான கடிதத்தை சட்​டப்​பேரவை செயலரிடம் அளித்​துள்​ளோம்.

மேலும், கடந்த ஜூலை 3-ம் தேதி மயிலம் எம்​எல்ஏ சிவக்​கு​மாரை கொற​டா​வாக நியமிக்க கடிதம் அளித்​தோம். அதற்கு எந்த பதி​லும் தெரிவிக்​காதத​தால், அதுகுறித்​தும் கடிதம் அளித்​துள்​ளோம். பாமக​வில் இருந்து நீக்​கப்​பட்ட நிலை​யிலும், பாமக நிர்​வாகி என்றே அருள் எம்​எல்ஏ பேசி வரு​கிறார்.

இது கட்​சி​யினர் மத்​தி​யில் குழப்​பத்தை ஏற்​படுத்​து​வ​தால், அவரை எம்​எல்​ஏ​வாக மட்​டுமே பதிவு செய்ய வேண்​டும். கட்சி பிர​தி​நி​தி​யாக அழைக்க முடி​யாது என்​றும் கூறி​யுள்​ளோம். மேலும், அன்​புமணியை தலை​வ​ராக ஏற்று தேர்​தல் ஆணை​யம் அளித்த கடிதத்​தை​யும் கொடுத்​துள்​ளோம். மாம்​பழம் சின்​ன​மும் எங்​களுக்கு ஒதுக்​கப்​பட்​டுள்​ளது.

எனவே, நாங்​கள் அளித்த கடிதத்தை பேர​வைத் தலை​வர் விரை​வில் பரிசீலிப்​பார் என நம்​பு​கிறோம். அதே​போல, எங்​களது கடிதம் அடிப்​படை​யில், சட்​டப்​பேர​வை​யில் பாமக குழு தலை​வருக்​கான இருக்​கையை வெங்​கடேஸ்​வரனுக்கு அளிக்க வேண்​டும் என்​றும் தெரி​வித்​துள்​ளோம். இவ்​வாறு அவர் கூறி​னார். இதற்​கிடையே, ராம​தாஸ் ஆதரவு எம்​எல்​ஏ​வான அருள் நேற்று தலை​மைச் செயல​கம் சென்​று, தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தத்​திடம் ஒரு கடிதம் அளித்​தார்.

ராமதாஸ் உயிருக்கு அச்சுறுத்தல்: பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘தமிழகம் முழு​வதும் ராம​தாஸ் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள உள்​ளார். தைலாபுரம் தோட்​டம் புதுச்​சேரி சாலை​யில் தனி​யாக உள்​ளது. ஆனால், 6 போலீ​ஸார் மட்​டுமே பாது​காப்​புக்​காக உள்​ளனர். தற்​போது ராம​தாஸ் உயிருக்கு அச்​சுறுத்​தல் இருப்​ப​தாக கருதுகிறோம்.

தைலாபுரத்​துக்கு தின​மும் 500-க்​கும் மேற்​பட்ட பார்​வை​யாளர்​கள் வரு​வ​தால், மெட்​டல் டிடெக்​டர் கருவி வேண்​டும், கூடு​தல் பாது​காப்பு அளிக்க வேண்​டும் என்று வலி​யுறுத்​தி​யுள்​ளோம். டிஜிபி​யிட​மும்​ மனு அளிக்​க உள்​ளோம்​’’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x