Last Updated : 25 Sep, 2025 10:27 AM

9  

Published : 25 Sep 2025 10:27 AM
Last Updated : 25 Sep 2025 10:27 AM

சாதாரண ஓட்டுக் கட்டிடமா... கிறிஸ்தவ சிற்றாலயமா..? - குமரியில் மீண்டும் வெடித்த சர்ச்சை!

ஆசாரிபள்ளத்தில் அமைந்துள்ள ஓட்டு கட்டிடம் | பிரின்ஸ், ஜோ அருண், நாஞ்சில் ராஜா

தேர்தலுக்குத் தேர்தல் மத அரசியலை மறைமுகமாக பிரதிபலிக்கும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓர் ஓட்டுக் கட்டிடத்தை வைத்து மத மோதலுக்கு சிலர் விதை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

திரு​வி​தாங்​கூர் மன்​னர் பாலர​விவர்மா தனது உறவினர், நண்​பர்​கள் காசநோ​யால் பாதிக்​கப்​பட்​ட​போது அவர்​களுக்கு சிகிச்சை அளிப்​ப​தற்​காக 1941-ல் குமரி மாவட்டம் ஆசா​ரிபள்​ளத்​தில் ஓட்டு கட்​டிடத்​தில் காசநோய் மருத்​து​வ​மனையை திறந்​தார். இது​தான் இப்​போது நவீனப்​படுத்​தப்​பட்டு அரசு மருத்​து​வக் கல்​லூரி​யாக செயல்​பட்டு வரு​கிறது. இருந்த போதும் பழமை மாறாத பழைய ஓட்டு கட்​டிட​மானது பிறப்பு - இறப்பு பதி​வாளர் அலு​வல​க​மாக செயல்​பட்டு வரு​கிறது.

இந்​தக் கட்​டிடத்​தின் ஒரு பகு​தி​யில் உள்ள சிறிய அறை​யானது மன்​னர் காலத்​திலேயே கிறிஸ்​தவர்​களின் ஜெப அறை​யாக இருந்​த​தாக கூறப்​படு​கிறது. இதை, ‘கிறிஸ்தவ சிற்​றால​யம்` என்​றும், இதைத் திறந்து மருத்​து​வ​மனைக்கு வரும் கிறிஸ்​தவர்​களை வழிபட அனு​ம​திக்க வேண்​டும் என்​றும் ஒரு தரப்​பினர் கடந்த 10 ஆண்​டு​களுக்​கும் மேலாக போராடி வரு​கி​றார்​கள். இந்து அமைப்​பு​கள் இதற்கு எதிர்ப்பு தெரி​விப்​ப​தால் இது தீராத பிரச்​சினை​யாக நீடித்து வரு​கிறது.

இந்த நிலை​யில், குளச்​சல் தொகுதி காங்​கிரஸ் எம்​எல்​ஏ-​வான பிரின்ஸ் இது தொடர்​பாக அண்​மை​யில் வெளி​யிட்ட வீடியோ ஒன்று பரபரப்பை பற்​ற​வைத்​துள்​ளது. பிரின்ஸ் தனது வீடியோ​வில், “ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வ​மனை​யில் ஒரு கிறிஸ்தவ சிற்​றால​யம் மூடப்​படடிருக்​கிறது. என்ன காரணம், எதற்​காக மூடப்​பட்​டிருக்​கிறது என்​பது மிகப்​பெரிய கேள்விக்​குறி​யாக உள்​ளது.

சிகிச்​சைக்கு போகிற​போது நோயை தீர்ப்​ப​தற்கு இறைவனை வேண்​டிக்​கொள்​வதற்​கான இடம் தான் இந்த சேப்​பல். ஏன் இந்த சிற்​றால​யத்​தைத் திறக்​கக்​கூ​டாது? அரசும், மாவட்ட நிர்​வாக​மும் தலை​யிட்டு இப்​பிரச்​சினைக்கு முடிவு காண​வேண்​டும். இல்​லை​யென்​றால் மக்​களை திரட்டி மிகப்​பெரிய போராட்​டம் நடத்த வேண்​டிய நிலை ஏற்​படும்” என தெரி​வித்​துள்​ளார்.

பிரின்​ஸின் இந்​தக் கருத்​துக்கு பாஜக மற்​றும் இந்து அமைப்​பு​கள் கடுமை​யாக எதிர்ப்​புத் தெரி​வித்​துள்​ளன. இதைக் கண்​டித்து மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் போராட்​டம் நடத்​து​வோம் என இந்து அமைப்​பு​கள் தெரி​வித்​துள்​ள​தால் பதற்​றமடைந்​திருக்​கும் மத்​திய - மாநில உளவு அமைப்​பு​கள் மருத்​து​வ​மனையை தீவிர கண்​காணிப்பு வளை​யத்​துக்​குள் கொண்டு வந்​துள்​ளன.

கடந்த ஆகஸ்ட்​டில் குமரி மாவட்​டத்​துக்கு வந்​திருந்த மாநில சிறு​பான்​மை​யினர் ஆணைய தலை​வர் பாதிரி​யார் ஜோ அருண், “ஆசா​ரிபள்​ளம் அரசு மருத்​து​வக் கல்​லூரி வளாகத்​தில் கட்​டப்​பட்ட ஆலயம் நீண்​ட​கால​மாக திறக்​கப்​ப​டா​மல் உள்​ளது. மருத்​து​வ​மனைக்கு வரும் பொது​மக்​கள் அந்த ஆலயத்​திற்​குச் சென்று தங்​கள் உறவினர்​கள் குணமடைய வேண்டி பிரார்த்​தனை மேற்​கொண்டு வந்​தார்​கள்.

எனவே, இந்த ஆலயத்தை திறந்து பொது​மக்​கள் வழி​பாடு செய்ய குமரி மாவட்ட ஆட்​சி​யர் நடவடிக்கை எடுக்​கவேண்​டும்” என குறிப்​பிட்​டார். அன்று மாலையே குமரி கிழக்கு மாவட்ட பாஜக தலை​வர் கோபக்​கு​மார் தலை​மை​யில் திரண்டு வந்த இந்து அமைப்​பினர், மருத்​துவக் கல்​லூரி ஓட்​டுக் கட்​டிடம் முன்பு போராட்​டத்​தில் குதித்​தனர்.

இதுகுறித்து விசுவ ஹிந்து பரிஷத் அமைப்​பின் நாகர்​கோ​வில் மாநகர தலை​வர் நாஞ்​சில் ராஜா நம்​மிடம் பேசுகை​யில், “மண்​டைக்​காடு மதக்​கல​வரத்​தைப் போன்று இந்த தேர்​தலில் உரு​வாக்கி ஆதா​யம் தேட அரசு மருத்​து​வக் கல்​லூரி கட்​டிட பிரச்​சினையை பிரின்ஸ் எம்​எல்ஏ போன்​றவர்​கள் முன்​னெடுத்து வரு​கின்​ற​னர்.

இது தொடர்​பாக முந்​தைய மாவட்ட ஆட்​சி​யர் அரவிந்த் தலை​மை​யில் நாகர்​கோ​வில் கோட்​டாட்​சி​யர் உள்​ளிட்ட அதி​காரி​கள் ஆய்வு செய்து இங்கு சிற்​றால​யம் இருந்​ததற்​கான எந்த ஆதா​ர​மும் இல்லை என்​பதை உறுதி செய்​துள்​ளனர். ஆனாலும், குமரி மாவட்ட அமை​தியை சீர்​குலைக்​கும் முயற்​சி​யில் சிலர் இறங்கி இருக்​கி​றார்​கள். இதை நாங்​கள் அனு​ம​திக்க மாட்​டோம்” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x