Published : 25 Sep 2025 05:15 AM
Last Updated : 25 Sep 2025 05:15 AM

பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா அக்.6-ம் தேதி சென்னை வருகை: நயினார் நாகேந்திரன் தகவல்

சென்னை: எம்​ஜிஆர் மருத்​து​வப் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்க மத்​திய சுகா​தா​ரத்​துறை அமைச்​சரும், பாஜக தேசிய தலை​வரு​மான ஜெ.பி.நட்டா அக்​.6-ம் தேதி சென்னை வரவுள்​ள​தாக அக்​கட்​சி​யின் தமிழக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் தெரி​வித்​துள்​ளார்.

நடிகை ராதி​கா​வின் தாய் கீதா ராதா மறைவையொட்​டி, போயஸ் கார்​டனில் உள்ள அவரது வீட்​டுக்கு பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் நேற்று சென்​று, ராதி​கா, சரத்​கு​மார் மற்​றும் குடும்​பத்​தினருக்கு ஆறு​தல் தெரி​வித்​தார்.

பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: அனைத்து மாநிலத்​தைச் சேர்ந்த நிதி அமைச்​சர்​களும் ஜிஎஸ்டி கவுன்​சிலில் உறுப்​பினர்​களாக இருக்​கிறார்​கள். இவர்​களின் ஒப்​புதலோடு​தான் இந்​தி​யா​வில் ஜிஎஸ்டி கொண்டு வரப்​பட்​டது. தற்​போது, 5, 12, 18, 28 சதவீதம் என 4 அடுக்​கு​களாக இருந்த ஜிஎஸ்டி வரி 5, 18 என 2 அடுக்​கு​களாக மாற்​றப்​பட்​டுள்​ளது.

வரிவி​கிதம் குறைக்​கப்​பட்​ட​தால் மக்​கள் நன்மை தான் அடைந்​திருக்​கிறார்​கள். ஜிஎஸ்​டி-​யில் 50 சதவீதம் பங்கு மாநிலங்​களுக்கு மத்​திய அரசு வழங்க வேண்​டும். அதை நான் மறுக்​க​வில்​லை. ஆனால், அந்த தொகையை தான், மாநிலங்​களின் வளர்ச்​சிக்கு மத்​திய அரசு செல​விடு​கிறது என்​பதை புரிந்து கொள்ள வேண்​டும்.

ஜிஎஸ்டி மறுசீரமைப்​பில் அனைத்​தி​லும் விலை குறைக்​கப்​பட்​டது. ஆனால், தமிழக அரசால் ஆவினில் விலையை குறைக்க முடிய​வில்​லை. மத்​திய அரசு மக்​களுக்கு விரோத​மான திட்​டங்​களை செயல்​படுத்தி வரு​வ​தாக முதல்​வர் ஸ்டா​லின் கூறு​வது தவறு. ரேஷன் கடைகளில் மத்​திய அரசு இலவச​மாக பொருட்​களை கொடுக்​கிறது.

இது மக்​கள் விரோத​மா, விவ​சா​யிகளுக்கு ஆண்​டுக்கு ரூ.6 ஆயிரம் மத்​திய அரசு வழங்​கு​கிறது. இது மக்​கள் விரோத திட்​ட​மா, மத்​திய அரசு 37 லட்​சம் விவ​சா​யிகளுக்கு இந்த தொகையை வழங்கி வந்​தது. இதனால், மத்​திய அரசுக்கு நற்​பெயர் கிடைத்​து​விடும் என்ற எண்​ணத்​தில் மாநில அரசு, பல விவ​சா​யிகளின் பெயர்​களை நீக்​கி, 19 லட்​ச​மாக குறைத்​துள்​ளது. இது​விவ​சா​யிகளுக்கு தமிழக அரசு செய்​யக்​கூடிய மிகப்​பெரிய துரோகம்.

சென்னை ராயப்​பேட்​டை​யில் அதி​முக தலைமை அலு​வல​கம் இருப்​பது கூட கனி​மொழிக்கு தெரி​யவில்லை என்பது, அவரது நிலையை நினைத்து எனக்கு பாவ​மாக இருக்​கிறது. பாஜக தேசிய தலை​வர் ஜெ.பி.நட்டா வரும் 6-ம் தேதி மதுரவாயல் எம்​ஜிஆர் பல்​கலைக்​கழகத்​தில் நடை​பெறும் பட்​டமளிப்பு விழா​வில் பங்​கேற்​கிறார்.

அதன்​பிறகு, அங்​கிருந்து புதுச்​சேரி செல்​கிறார். பின்​னர், புதுச்​சேரி​யில் இருந்து டெல்லி செல்​கிறார். இவ்​வாறு நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். முன்​ன​தாக சென்னை விமான நிலை​யத்​தில் நயி​னார் நாகேந்​திரன் செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘பாஜக​வின் தேர்​தல் பரப்​புரையை வரும் அக்​.12-ம் தேதி மதுரை​யில் தொடங்​கு​கிறோம். இந்த தேர்​தல் பரப்​புரை​யில்​ முக்​கிய பிர​முகர்​கள்​ கலந்​து கொள்​வார்​கள்​’ என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x