Published : 24 Sep 2025 12:27 PM
Last Updated : 24 Sep 2025 12:27 PM

திண்டுக்கல் சீனிவாசனுக்காக ஓரங்கட்டப்படுகிறாரா நத்தம் விசுவநாதன்..?

கட்சியை விட்டுப் போனவர்களுக்கு மீண்டும் கழகத்தில் இடமில்லை என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி ஆணித்தரமாக சொல்லி வரும் நிலையில், கட்சியின் துணைப் பொதுச்செயலாளரான நத்தம் விசுவநாதனையும் பழனிசாமி ஓரங்கட்ட நினைப்பதாக விசுவநாதனின் விசுவாச வட்டம் விசும்புகிறது.

​திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக-​வில் நத்​தம் விசுவ​நாதனும், திண்​டுக்​கல் சீனி​வாசனும் இருதுருவ அரசி​யல் நடத்​துபவர்​கள். இதைப் புரிந்​து​கொண்டு சீனி​வாசனுக்கு பொருளாளர் பதவியை​யும், விசுவ​நாதனுக்கு துணைப் பொதுச்​செய​லா​ளர் பதவியை​யும் கொடுத்து இரு​வரை​யும் சரிசம​மாக பாவித்து வந்​தார் பழனி​சாமி.

இந்த நிலை​யில், அண்​மை​யில் உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவை சந்​திக்க டெல்லி சென்ற பழனி​சாமி, எஸ்​.பி.வேலுமணி, சி.​வி.சண்​முகம், கே.பி.​முனு​சாமி, திண்​டுக்​கல் சீனி​வாசன் உள்​ளிட்ட சீனியர்​களை உடன் அழைத்​துச் சென்​றார். ஆனால், நத்​தம் விசுவ​நாதன் இந்த லிஸ்ட்​டிலிருந்து கடைசி நேரத்​தில் கழட்டி விடப்​பட்​ட​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் ஆதங்​கத்​துடன் பேசிய நத்​தம் விசுவ​நாதனின் ஆதர​வாளர்​கள், “அமித் ஷாவை சந்​திக்க யாரெல்​லாம் செல்​வது என முதலில் ரெடி​யான லிஸ்ட்​டில் சீனி​வாசன், நத்​தம் விசுவ​நாதன் இரு​வரது பெயருமே இருந்​துள்​ளது.

இதுகுறித்த தகவல் தெரிவிக்​கப் பட்​ட​தால் விசுவ​நாதனும் டெல்லி செல்​வதற்​காக லக்​கேஜ்களை எடுத்து வைத்​துக்​கொண்டு தயா​ராய் இருந்​துள்​ளார். ஆனால் கடைசி நேரத்​தில், அவரை தவிர்த்​து​விட்டு திண்​டுக்​கல் சீனி​வாசன் உள்​ளிட்​டோரை மட்​டும் அழைத்​துக்​கொண்டு டெல்​லிக்கு விமானம் ஏறி​யுள்​ளார் பழனி​சாமி. இதனால் அப்​செட்​டான விசுவ​நாதன் தனது ஆதர​வாளர்​களிடம் இதுகுறித்து வருத்​தப்​பட்டு பேசி இருக்​கி​றார்” என்​ற​னர்.

திண்​டுக்​கல் மாவட்ட அதி​முக-​வினரோ, “கடந்த சில மாதங்​களாகவே கட்​சிக்​குள் சீனி​வாசனுக்கு கொடுக்​கும் முக்​கி​யத்​தும் விசுவ​நாதனுக்கு கொடுக்​கப்​படு​வ​தில்லை என்ற குற்​றச்​சாட்டு இருக்​கிறது. இத்​தனைக்​கும் இரு​வ​ருமே மாநிலப் பொறுப்​பில் இருப்​பவர்​கள்.

இபிஎஸ் திண்​டுக்​கல் மாவட்​டத்​தில் செப்​டம்​பர் 6,7 தேதி​களில் பிரச்​சா​ரப் பயணம் மேற்​கொண்​டார். அப்​போதும் சீனி​வாசனுக்​குத்​தான் அதி​முக்​கி​யத்​து​வம் தரப்​பட்​டது. பழநி பிரச்​சா​ரத்​தில் நத்​தம் விசுவ​நாதன் பேசிக்​கொண்​டிருக்​கும் போதே அவரை சீக்​கிர​மாக முடிக்​கச் சொல்லி இபிஎஸ் சைகை காட்​டியதும் அவரது ஆதர​வாளர்​களை வருத்​தப்பட வைத்​தது.

அதேசம​யம் திண்​டுக்​கல் பிரச்​சா​ரத்​தில் திண்​டுக்​கல் சீனி​வாசனை புகழ்ந்த அளவுக்கு நத்​தம் விசுவ​நாதனை இபிஎஸ் மெச்​ச​வில்​லை. இப்​படி​யான சூழலில் தான், தன்னை விட்​டு​விட்டு சீனி​வாசனை டெல்​லிக்கு அழைத்​துச் சென்​றது விசுவ​நாதனை மேலும் மன உளைச்​சலுக்கு ஆளாக்​கி​விட்​டது. இதனால் அவர் வேறெங்​கும் செல்​லாமல் நத்​தம் அருகே வேம்​பார்​பட்​டி​யில் உள்ள தனது வீட்​டிலேயே முடங்கி இருந்​து​விட்​டார்.

இந்​தத் தகவலைக் கேள்​விப்​பட்ட இபிஎஸ், முன்​னாள் அமைச்​சர்​களான தங்​கமணி, சி.​வி.சண்​முகம் ஆகி​யோரை நேரில் அனுப்பி விசுவ​நாதனுக்கு யதார்த்​தத்தை எடுத்​துச் சொல்லி அவரை சமா​தானப்​படுத்தி இருக்​கி​றார். ஆனால், காரணம் என்​ன​வாக இருந்​தா​லும் இது​மா​திரி​யான மனக்​கசப்​பு​கள் இனி​யும் தொட​ரா​மல் பார்த்​துக் கொண்​டால் நல்​லது” என்​ற​னர். இப்​படியே ஆளாளுக்கு ஒரு ரூட்​டில் குடைச்​சல் கொடுத்​துக் கொண்​டிருந்​தால், பாவம் பழனி​சாமி​யும் தான் என்ன செய்​வார்​?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x