Last Updated : 24 Sep, 2025 10:25 AM

1  

Published : 24 Sep 2025 10:25 AM
Last Updated : 24 Sep 2025 10:25 AM

‘வந்தவங்க வாழ்றாங்க... இருக்கிறவங்க வாடுறோம்ங்க..!’ - அமைச்சர் முன்னிலையில் திமுக நிர்வாகி புலம்பல்

“செந்தில்பாலாஜி கோடு போடச் சொன்னால் ரோடே போடுவார்” என்று கரூர் திமுக முப்பெரும் விழாவில் திமுக தலைவர் ஸ்டாலின் வாயாரப் புகழ்ந்திருக்கும் நிலையில், “மாற்றுக் கட்சிகளில் இருந்து வருபவர்கள் தங்களைத்தான் வளப்படுத்திக் கொள்கிறார்கள். கட்சி நிகழ்ச்சி என்றால் எங்களைத்தான் பிழிந்து எடுக்கிறார்கள்” என்று திமுக ஒன்றியச் செயலாளர் ஒருவர் சத்தமாகவே புலம்பித் தள்ளி இருக்கிறார்.

​விருத்தாசலம் தொகுதி தேமு​திக முன்​னாள் எம்​எல்​ஏ-​வான பி.​வி.பி.​முத்​துக்​கு​மார் 2017-ல் திமுக-​வில் இணைந்​தார். உடனடி​யாகவே அவருக்கு கடலூர் மேற்கு மாவட்ட துணைச் செய​லா​ளர் பதவி வழங்​கப்​பட்​டது. திமுக ஆட்​சிக்கு வந்​ததும் அமைச்​சர் அன்​பில் மகேஸின் கல்​லூரி தோழர் என்ற வகை​யில் மாநில பெற்​றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலை​வர் பதவி​யும் முத்​துக்​கு​மாருக்கு சாத்​தி​ய​மானது. இப்​போது இவர், அமைச்​சர் பெயரைச் சொல்லி தனக்​கான அனைத்​தை​யும் எளி​தில் சாதித்து வரு​கி​றார்.

இதே​போல், 2016-ல் விருத்​தாசலத்​தில் அதி​முக சார்​பில் போட்​டி​யிட்டு எம்​எல்ஏ ஆன வி.டி.கலைச்​செல்​வன், 2021-ல் மீண்​டும் அங்கே சீட் கிடைக்​காத​தால் 2023-ல் திமுக-​வில் கலந்​தார். அவர் தான் இப்​போது மாநில திமுக இலக்​கிய அணி துணைச் செய​லா​ளர். திமுக-​வில் இணைந்த கையோடு அமைச்​சர் சி.வெ.கணேசனை கெட்​டி​யாகப் பிடித்​துக் கொண்டு முன்​னேறிய கலைச்​செல்​வன், இப்​போது அமைச்​சர் நேரு​வுக்​கும் அவரது மகனுக்​கும் மிக நெருக்​க​மான​வ​ராக இருக்​கி​றார். இம்​முறை அவர் விருத்​தாசலம் சீட்டை வாங்​கி​னாலும் ஆச்​சரியமில்லை என்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், நெய்​வேலி​யில் கடலூர் மேற்கு மாவட்ட திமுக செயற்​குழுக் கூட்​டம் அண்​மை​யில் மாவட்​டச் செய​லா​ள​ரும், அமைச்​சரு​மான சி.வெ.கணேசன் தலை​மை​யில் நடை​பெற்​றது. இதில் தான், நல்​லூர் ஒன்​றிய திமுக செய​லா​ளர் பாவாடை கோவிந்​த​சாமி தனது ஆதங்​கத்​தைக் கொட்​டித் தீர்த்​தார்.

“நாங்​கள் காலங்​கால​மாக கட்​சிப் பணி​யில் தீவிர​மாக செயல்​பட்டு வரு​கி​றோம். மாற்​றுக் கட்​சிகளில் இருந்து வருபவர்​கள் எவ்​வித கட்​சிப் பணி​யும் பார்ப்​ப​தில்​லை. அமைச்​சர்​கள் நிகழ்ச்​சி, கட்​சித் தலை​வர் நிகழ்ச்​சிக்கு மட்​டும் வந்து தலை​யைக் காட்​டி​விட்​டுச் சென்று விடு​கின்​ற​னர். ஆனால், எங்​களை​விட அவர்​களுக்​குத்​தான் அதிக முக்​கி​யத்​து​வம் கொடுத்து மேடை​யில் அமர​வைத்து அழகு பார்க்​கிறீர்​கள்.

அது​மட்​டு​மா... கட்​சி​யிலும் முக்​கியப் பதவி, நல்ல வரு​மானம் ஈட்​டும் வகையி​லான அரசு சார்பு பதவி​களை வழங்கி வளர்க்​கிறீர்​கள். ஊரார் பிள்​ளையை ஊட்டி வளர்த்​தால் தன் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழி கேட்​ப​தற்கு வேண்​டு​மா​னால் காது குளிரும். நடை​முறை​யில் கட்​சிக்​காரனை விரக்​தி​யின் விளிம்​புக்​குத் தான் தள்​ளும் என்​பதை உணருங்​கள்” என பாவாடை கோவிந்​த​சாமி கொட்​டித் தீர்த்​ததை ஆமோ​திப்​பது போல் அரங்​கம் அதிர்ந்தது.

பாவாடை கோவிந்தசாமி

இதுகுறித்து நம்​மிடம் பேசிய பாவாடை கோவிந்​த​சாமி, “ஆளும் கட்​சி​யாக இருக்​கும் போது தான் ஏதோ நான்கு ஆப்​ளி​கேஷன்​களை முடித்​துக் கொடுத்து ஏதாவது பார்க்​க​முடி​யும். அரசு அலு​வலர்​களின் பணி​யிட மாற்​றம், நியமனம் போன்​றவை எல்​லாம் இப்​போது கவுன்​சலிங், தேர்வு என ஆகி​விட்​ட​தால் அதிலெல்​லாம் கட்​சிக்​காரனுக்கு இப்​போது எந்த வரு​மான​மும் இல்​லாமல் போய்​விட்​டது.

அப்​படி இருக்​கை​யில், எங்​களைப் போன்​றவர்​களை மாவட்​டச் செய​லா​ளர்​களும் மந்​திரி​களாக இருப்​பவர்​களும் தான் கவனிக்க வேண்​டும். ஆனால் அவர்​களோ, புதி​தாக கட்​சிக்கு வந்​தவர்​களைத்​தான் முன்​னிலைப்​படுத்​துகி​றார்​கள். அதேசம​யம், அவர்​களிடம் கட்​சிப் பணி​கள் குறித்து எது​வும் கேட்​பது கிடை​யாது. அதை மட்​டும் எங்​களிடம் தான் கேட்​கி​றார்​கள்.

மொத்​தத்​தில், இப்​போது எந்த ஒன்​றியச் செய​லா​ள​ரும் திருப்​தி​யாய் இல்​லை. அப்​படி இருக்​கை​யில் அவர்​களை கசக்​கிப் பிழிந்து வேலை வாங்​கும் மாவட்​டச் செய​லா​ளர்​கள், அதற்​கான செல​வு​களுக்​காக கிள்​ளிக்​கூட கொடுப்​ப​தில்​லை. அனைத்​தை​யும் அவர்​களே வாங்​கிக் கொண்​டால் நாங்​கள் எப்​படி கட்​சிப் பணி செய்​வது? இந்த ஆதங்​கத்​தைத்​தான் செயற்குழுக் கூட்​டத்​தில் பேசினேன்” என்​றார்.

இதுகுறித்து விருத்​தாசலம் தெற்கு ஒன்​றிய திமுக செய​லா​ள​ரான வேல்​முரு​கன் நம்​மிடம் பேசுகை​யில், “பா​வாடை கோவிந்​த​சாமி கோபப்​படு​வ​தில் தவறில்​லை. 2016-ல் வி.டி.கலைச்​செல்​வனிடம் தோல்​வியடைந்த விரக்​தி​யில் அவர் அப்​படிப் பேசுகி​றார். அதற்​காக மாற்​றுக் கட்​சி​யில் இருந்து நம் கட்​சிக்கு வந்​தவர்​களை புறந்​தள்​ளவா முடி​யம்? நல்​லதோ கெட்​டதோ அனுசரித்​துத்​தான் செல்​ல​வேண்​டும். அனை​வரை​யும் அரவணைத்​துச் செல்​ல​வேண்​டும் என்று முதல்​வரே கூறும்​போது நாமும் போகவேண்​டியது தான்” என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x