Published : 23 Sep 2025 05:35 AM
Last Updated : 23 Sep 2025 05:35 AM

கண் தொடர்பான நோய்களை உடனே கண்டறிய சிறப்பு பயிற்சி வழங்க வேண்டும்: அஸ்​வின் அகர்​வால் வலியுறுத்தல்

டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் முதன்மை மருத்​துவ அதி​காரி மருத்​து​வர் அஸ்​வின் அகர்​வால்

சென்னை: ​நாட்​டில் அதி​கரித்து வரும் கண் தொடர்​பான நோய்​களை உடனே கண்​டறிய சிறப்​புப் பயிற்சி வழங்க வேண்​டும் என்று டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் முதன்மை மருத்​துவ அதி​காரி மருத்​து​வர் அஸ்​வின் அகர்​வால் தெரிவித்தார். டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை சார்​பில் 18-வது கல்​ப​விருக் ஷா தேசிய கண் மருத்​துவ கருத்​தரங்​கம் சென்​னை​யில் நடந்​தது.

ஆயிரம் விளக்கு எம்எல்ஏ எழிலன் நாக​நாதன் கருத்​தரங்​கைத் தொடங்கி வைத்​தார். இந்​தியா முழு​வதும் இருந்து 300-க்​கும் அதி​க​மான இளம் கண் மருத்​து​வர்​கள் கருத்​தரங்​கில் பங்​கேற்​றனர். 2 நாட்​கள் நடை​பெற்ற கருத்​தரங்​கம் முதுகலை மருத்​து​வப் படிப்பு மாணவர்​களுக்​கான குறுகிய கால தீவிர கல்​வித் திட்​ட​மாக இருந்​தது. கண் அழுத்த நோய், கரு​விழி, நரம்​பியல் சார்ந்த கண் மருத்​து​வம் உள்​ளிட்ட தலைப்​பு​களில் 30-க்​கும் மேற்​பட்ட முன்​னணி கண் மருத்​துவ நிபுணர்​கள் உரை​யாற்​றினர்.

முன்​ன​தாக, டாக்​டர் அகர்​வால்ஸ் கண் மருத்​து​வ​மனை​கள் குழு​மத்​தின் முதன்மை மருத்​துவ அதி​காரி மருத்​து​வர் அஸ்​வின் அகர்​வால் கூறுகை​யில், “கண் தொடர்​பான நோய்​களை நுட்​ப​மான சிகிச்சை மூலம் உடனடி​யாக கண்​டறிய சிறப்​புப் பயிற்சி வழங்க வேண்​டும். அகர்வால்ஸ் மருத்​து​வ​மனை​யில் கடந்​தாண்டு மட்​டும் 1,200 விழி வெண்​படல மாற்று அறுவை சிகிச்​சைகள் செய்​யப்​பட்​டுள்​ளன.

இந்​தி​யா​விலேயே அதி​கள​வில் விழி வெண்​படல மாற்று அறுவை சிகிச்​சைகள் செய்​வ​தில் அகர்​வால்ஸ் மருத்​து​வ​மனை ஒன்​றாகும். கண் பார்​வைப் பிரச்​சினை உள்​ளவர்​களில் 5 முதல் 10 சதவீத பேருக்​கு, விழி வெண்​படல அறுவை சிகிச்​சைக்​குப்​ பதிலாக ‘பின்​ஹோல்​ பியூபிலோ பிளாஸ்​டி’ அறுவை சிகிச்​சை செய்​யப்​படு​கிறது” என்​றார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x