Published : 22 Sep 2025 05:50 AM
Last Updated : 22 Sep 2025 05:50 AM

ஆளுநர் ரவி, அண்ணாமலை வரிசையில் விஜய்யும் அவதூறு அரசியல் செய்கிறார்: ஆளூர் ஷாநவாஸ் விமர்சனம்

சென்னை: ஆளுநர் ரவி, தமிழக பாஜக முன்னாள் தலை​வர் அண்​ணா​மலை வரிசை​யில் தவெக தலை​வர் விஜய் அவதூறு அரசியல் செய்வதாக விசிக துணை பொதுச்​செயலாளர் ஆளூர் ஷாந​வாஸ் குற்​றம் சாட்​டி​யுள்​ளார். நாகப்​பட்​டினம் மாவட்டத்துக்கு சுற்​றுப் பயணம் மேற்கொண்​டிருந்த தவெக தலை​வர் விஜய், திமுக அரசு மீனவர்​கள் நலனை பாது​காக்க நடவடிக்கை எடுக்​க​வில்லை என்பன உள்​ளிட்ட பல்​வேறு குற்​றச்​சாட்​டுக்​களை முன்​
வைத்​திருந்​தார்.

இதற்கு பதிலளித்து தொகுதி சட்​டப்பேரவை உறுப்​பினரும் விசிக துணை பொதுச்​செய​லா​ள​ரு​மான ஆளூர் ஷாந​வாஸ் சென்னையில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழக அரசி​யல் களத்தை மிக​வும் கீழிறக்​கி, அவதூறுகளாலும், பொய்களாலும், வன்​மத்​தா​லும் மாற்​றத் துடிக்​கும் சக்​தி​களாக பாஜக, சங்​பரி​வார சக்​தி​கள் விளங்​கு​கின்​றன. அவ்​வாறு ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, தமிழக பாஜக முன்​னாள் தலை​வர் அண்​ணா​மலை​யின் இட்டு கட்​டப்​பட்ட பொய்​களை விஜய் கையில் எடுத்திருக்கிறார்.

நாகப்​பட்​டினத்​துக்கு வருகை தந்த அவர், முழுக்க முழுக்க பொய் தகவல்​களை சொல்லி சென்​றிருக்​கிறார். அங்​குள்ள மக்​களின் கோரிக்​கைகள் நான்​கரை ஆண்​டு​களில் எந்​தளவு நிறைவேற்​றப்​பட்​டிருக்​கிறது என்​பது தொடர்​பாக எந்த ஆய்​வும் இன்​றி, வன்​மத்​தோடு, பொய்யை சொல்ல வேண்​டும் என சொல்​லி​யிருக்​கிறார்.

சாமந்​தான்​பேட்​டை​யில் நீண்ட கால கோரிக்​கை​யான தூண்​டில் வளைவுடன் கூடிய மீன்​பிடித் துறை​முகம் இந்த ஆட்​சி​யில்​தான் ரூ.32 கோடி​யில் அமைக்​கப்​பட்டு வரு​கிறது. நாகூர்​பட்​டினச்​சேரி, நம்​பி​யார் நகரில் கடல் அரிப்பு தடுப்​புச் சுவர் அமைக்​கப்​பட்​டிருக்​கிறது. நம்​பி​யார் நகரில் புயல் பாது​காப்பு மையம் கட்​டப்​பட்​டிருக்​கிறது. அக்​கரப்​பேட்​டை​யில் ரூ.100 கோடி மீன் இறங்​கு தளம் அமைக்​கப்​பட்​டிருக்​கிறது. வரலாற்​றில் இல்​லாத அளவில் ரூ.1,200 கோடி மதிப்​பீட்​டில் குடிநீர் திட்​டம் நடை​முறைப்​படுத்​தப்​பட்டு வரு​கிறது.

நிறைவேற்​றப்​பட்டு வரும் திட்​டங்​களை எல்​லாம் செய்​யவே இல்லை என சொல்​வதன் மூலம் அரசுக்கு அவப்​பெயர் ஏற்​படுத்த நினைக்​கிறார் விஜய். நாகூர் அரசு மருத்​து​வ​மனை ரூ.5 கோடி​யில் சீரமைப்​ப​தோடு, பணி​யாளர்​கள் பற்​றாக்​குறை இல்​லாத நிலை இருக்​கிறது. இவையெல்​லாம் தெரி​யாமல் பேசுகிறார்.

உண்​மையை சொல்லி அரசி​யல் செய்ய முடி​யாத​தால், அவதூறு அரசி​யலை கையில் எடுத்​திருக்​கிறார். அது நீடிக்​காது. மக்களால் நிராகரிக்​கப்​படும் நிலை விஜய்க்​கும் வரும். தனது ஆட்சி காலத்​தில் செயல்​படுத்​திய திட்​டத்தை திமுக அரசு செய்ததாக அதி​முக பொதுச்​செய​லா​ளர் திசை திருப்​பு​கிறார். இது அந்த மக்​களுக்​குத் தெரி​யும். எனவே, பதிலளிக்க அவசியமில்லை. ஆனால், விஜய் முற்​றி​லும் பொய் சொல்​கிறார். இதை மக்​களிடம் எடுத்​துச் சொல்​ல தேவை இருக்​கிறது. இவ்வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x