Published : 22 Sep 2025 05:39 AM
Last Updated : 22 Sep 2025 05:39 AM

விஜய்க்கு வரும் கூட்டம் வாக்குகளாக மாறாது: கமல்ஹாசன் கருத்து

சென்னை: இது சினி​மாவுக்​கான களம் அல்ல. விஜய்க்கு வரும் கூட்​டம் எல்​லாம் வாக்குகளாக மாறாது என மநீம தலை​வர் கமல் ஹாசன் தெரி​வித்​துள்​ளார். சட்​டப்​பேரவை தேர்​தலுக்​கான பணி​கள் தொடர்​பான மண்டல அளவி​லான கலந்​தாலோ​சனை கூட்டங்​களை மக்​கள் நீதி மய்​யம் கட்சி கடந்த செப்​.18-ம் தேதி முதல் சென்னையில் நடத்தி வரு​கிறது.

அதன் தலை​வர் கமல்​ஹாசன் தலைமை வகித்து மண்டல வாரியாக நிர்​வாகி​களுக்கு ஆலோசனை​களை வழங்கி வரு​கிறார். அந்​தவகை​யில் கடந்த 18-ம் தேதி சென்​னை, காஞ்​சிபுரம் மண்டல நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனை கூட்​டம் நடத்​தப்பட்​டது.

அதைத்​தொடர்ந்து கோவை, மதுரை மண்டல நிர்வாகிகளு​ட​னான கலந்​தாலோ​சனை கூட்​டம் 19-ம் தேதி​யும், நெல்​லை, திருச்சி மண்டல நிர்​வாகி​களுடனான கூட்​டம் 20-ம் தேதி​யும் நடைபெற்​றது. இதையடுத்து சேலம் மற்​றும் புதுச்​சேரி நிர்​வாகி​களு​ட​னான ஆலோ​சனைக் கூட்​டம் ராஜா அண்​ணா​மலைபுரத்​தில் நேற்று நடை​பெற்​றது.

கூட்​டத்​தின் முடிவில் கட்​சி​யின் தலை​வர் கமல்ஹாசன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: மக்​களுக்​காக அரசி​யலுக்கு வரும் நடிகர்​களை அரசி​யல் வாதி​களாக பார்க்​காமல், அவர்களுக்கு கூடும் கூட்​டங்​களை அவரை பார்ப்​ப​தற்​காக கூடும் கூட்​ட​மாகவே பார்ப்​ப​தாக தவெக தலை​வர் விஜய்யை விமர்​சிக்கின்​றனர்.

அவருக்கு முன்பு சினி​மா​வில் இருந்து வந்த என்னை பற்றி என் கட்​சி​யினரிடம் கேட்​டால் தெரி​யும். என்னை ஏன் நாடி வந்​தார்​கள் என்​று. அரசி​யலுக்கு வருபவர்​களை மட்​டுமின்​றி, நடிக்க வருபவர்​களை​யும் கூட விமர்​சிக்​கத்​தான் செய்​வார்​கள்.

இது சினி​மாவுக்​கான களம் அல்ல. அதை புரிந்​து​கொண்டவர்​கள் இங்கு இருக்​கின்​றனர். இங்கு கூடக்​கூடிய கூட்டங்​கள் அனைத்தும் வாக்குகளாக கண்​டிப்பாக மாறாது. அது விஜய்க்​கும் பொருந்​தும்.

எனக்​கும் பொருந்தும். எல்லா தலை​வர்​களுக்​கும் பொருந்​தும். கூட்​டத்தை சேர்த்துவிட்​டால் அது வாக்குகளாக மாறாது. நல்ல பாதை​யில் செல்​லுங்​கள். தைரிய​மாக முன்​னேறுங்​கள். மக்​களுக்​காக செய்​யுங்​கள் என்​பது தான் எல்லா அரசி​யல் வாதிகளுக்கும் நான் வைக்​கும் வேண்​டு​கோள்.

அந்​தவகை​யில் எத்​தனை பேர் அரசி​யலுக்கு வந்​தா​லும் நல்​லது தான். திமுக தலை​மை​யுடன் நெருக்​க​மாக இருக்​கிறோம். இருந்தா​லும் கூட்​ட​ணிக்​கான இடங்​கள் உட்பட 75 ஆண்​டு​கால கட்​சி​யிடம் அனைத்து உரிமைகளை​யும் தட்டி கேட்டு பெற்​று​விட முடி​யாது. எங்​களது தகு​தியை நிரூபித்​து, பின் எங்​களுக்​கானதை கொடுங்​கள் என்​று கேட்​போம்​. இவ்​வாறு அவர்​ கூறி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x