Last Updated : 20 Sep, 2025 09:09 AM

 

Published : 20 Sep 2025 09:09 AM
Last Updated : 20 Sep 2025 09:09 AM

மார்ட்டினின் மகனை வைத்து ரங்கசாமியை சீண்டுகிறதா பாஜக? - புது ரூட்டெடுக்கும் புதுச்சேரி அரசியல்!

படங்கள்: எம்​.​சாம்​ராஜ்

புதுச்சேரி அரசியலில் லாட்டரி அதிபர் மாட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் ஆளும் கட்சிக்கு எதிராக ஆசிட் கணைகளை வீச ஆரம்பித்திருப்பது என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணிக்குள் பகையை மூட்டிக் கொண்டிருக்கிறது.

கடந்த 2016-ல் புதுச்​சேரி மாநிலத்​தில் தேர்​தலில் போட்​டி​யி​டா​மலேயே முதல்​வ​ரா​னார் காங்​கிரஸ் கட்​சி​யைச் சேர்ந்த நாராயண​சாமி. அப்​போது அவருக்​காக தனது எம்​எல்ஏ பதவியை தியாகம் செய்​தவர் இப்​போது பாஜக-​வில் இருக்​கும் அமைச்ச ஜான்​கு​மார். ஆனால் அந்த ஆட்​சி​யின் இறு​தி​யில், மகன் ரிச்​சர்​டை​யும் சேர்த்​துக்​கொண்டு பாஜக-​வில் ஐக்​கிய​மா​னார் ஜான்​கு​மார்.

இதையடுத்​து, 2021 தேர்​தலில் காம​ராஜ்நகர் தொகு​தி​யில் ஜான்​கு​மாரும், நெல்​லித்​தோப்​பில் அவரது மகன் ரிச்​சர்​டும் பாஜக சார்​பில் போட்​டி​யிட்டு வென்​ற​னர். அப்​போதே அமைச்​சர் பதவிக்கு அடி​போட்​டார் ஜான்​கு​மார். ஆனால், பெரும் போராட்​டத்​துக்​குப் பிறகு அண்​மை​யில் தான் அவரை அமைச்​ச​ராக்​கியது பாஜக. ஆனாலும், இரண்டு மாதங்​களுக்கு மேலாகி​யும் இன்​னும் அவருக்​கான இலா​காவை ஒதுக்​காமல் வைத்​திருக்​கி​றார் ரங்​க​சாமி.

இந்த நிலை​யில், ஜான்​கு​மாருக்கு ரங்​க​சாமி இன்​னும் இலாகா ஒதுக்​காமல் இருப்​ப​தற்கு ஜான்​கு​மா​ரால் புதுச்​சேரி அரசி​யலுக்கு கட்டி இழுத்​து​வரப்​பட்ட லாட்​டரி அதிபர் மார்ட்​டினின் மகன் ஜோஸ் சார்​லஸும் ஒரு காரணம் என்ற பேச்சு என்​.ஆர்​.​காங்​கிரஸ் வட்​டாரத்​தில் வட்​டமடிக்​கிறது.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய என்​.ஆர்​.​காங்​கிரஸ் நிர்​வாகி​கள் சிலர், “ஜோஸ் சார்​லஸை புதுச்​சேரி அரசி​யலுக்கு அறி​முகப்​படுத்​தி​யதே ஜான்​கு​மாரும் அவரது குடும்​ப​மும் தான். அவரை இம்​முறை புதுச்​சேரி​யில் நிறுத்தி எம்​எல்ஏ ஆக்க வேண்​டும்​... வாய்ப்பு அமைந்​தால் ஆட்​சிக் கட்​டிலிலேயே அமர்த்​திப் பார்க்க வேண்​டும் என்ற திட்​டமெல்​லாம் ஜான்​கு​மார் தரப்​புக்கு இருக்​கிறது. அதற்​காக 15 தொகு​தி​கள் வரைக்​கும் தங்​களது ஆதர​வாளர்​களை நிறுத்​தி, லாட்​டரி ’வளத்​தால்’ ஜெயிக்​கப் பார்க்​கி​றார்​கள். இதற்​காகவே ‘ஜேசிஎம் மக்​கள் மன்​றம்’ என்ற அமைப்பை ஜோஸ் சார்​லஸ் நடத்தி வரு​கி​றார்.

ஜான்​கு​மாரின் மகன் ரீகன் தான் இதன் தலை​வர். இந்த அமைப்​பின் மூலம் மக்​களுக்கு நல உதவி​களை வழங்கி வரும் ஜோஸ் சார்​லஸ், 2026-ல் அமைச்​சர் ஜான்​கு​மாரின் காம​ராஜ்நகர் தொகு​தி​யில் போட்​டி​யிட தயா​ராகி​றார். இவரை இங்கே நிறுத்திவிட்டு முதலி​யார்​பேட்டை தொகு​திக்கு மாற முடி​வெடுத்​திருக்​கும் ஜான்​கு​மார், தனது மகனை ரிச்​சர்டை மீண்​டும் நெல்​லித்​தோப்​பிலும் இன்​னொரு மகனான ரீகனை பாகூரிலும் நிறுத்​தும் திட்​டத்​தி​லும் இருக்​கி​றார்.

இந்த நிலை​யில், ஜூலை 5-ம் தேதி ஜான்​கு​மாருக்கு பிறந்த நாள். இதை​யொட்​டி, பொதுப்​பணித்​துறைக்கு சொந்​த​மான ஜான்​கு​மாரின் எம்​எல்ஏ அலு​வலக வாசலிலேயே ஜோஸ் சார்​லஸ் படத்​துடன் கூடிய ஃபிளெக்​ஸ்​களை ஜான்​கு​மார் ஆதர​வாளர்​கள் வைத்​தார்​கள். அப்​போதே இதுகுறித்​து, அரசு வளாகத்​தில் எப்​படி இந்த ஃபிளெக்​ஸ்​களை வைக்​கலாம் என முணு​முணுப்​புக் கிளம்பி அடங்​கியது.

இதனிடையே புதுச்​சேரில் குடிநீரில் கழி​வுநீர் கலந்த விவ​காரத்தை எதிர்க்​கட்​சிகள் பூதாகர​மாக்​கின. இதில் ஜோஸ் சார்​லஸும், ரீக​னும் அரசுக்கு எதி​ரான விமர்​சனங்​களை முன்​வைத்​தனர். ஜான்​கு​மாரின் அரசி​யல் வார்ப்​பான இவர்​கள் இரு​வ​ரும் தனது அரசை தாக்​கிப் பேசி​ய​தால் முதல்​வர் ரங்​க​சாமிக்கு ஜான்​கு​மார் மீது கோபம். இதனால், அவருக்கு இலாகா ஒதுக்​கீடு செய்​யும் விவ​காரத்தை கிடப்​பில் போட்​டு​விட்​டார்” என்​ற​னர்.

ஜோஸ் சார்​லஸ் பாஜக-​வின் பி டீம் போலவே தான் இருக்​கி​றார். அதனால் தான் தங்​களின் அமைச்​ச​ரான ஜான்​கு​மார், சார்​லஸை முன்​னிலைப்​படுத்தி பிரச்​சா​ரம் செய்​வதை பாஜக தலைமை கண்​டும் காணா​மல் இருக்​கிறது. ஆக, தங்​களால் நேரடி​யாக செய்ய முடி​யாததை சார்​லஸை வைத்து மறை​முக​மாக செய்​கிறது பாஜக என்ற ஆதங்​க​மும் ரங்​க​சாமிக்கு இருப்​ப​தாகச் சொல்​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய ஜோஸ் சார்​லஸ், "குடிக்​கும் தண்​ணீரைக்​கூட அரசால் சுகா​தா​ர​மாக தரமுடிய​வில்லை என்​ப​தால் தான் விமர்​சனம் செய்​கி​றோம். மக்​களுக்​குத் தேவை​யானதை அரசு முறை​யாகச் செய்​தால் நான் ஏன் எதிர்த்​துப் பேசப்​போகிறேன்? இந்த விஷ​யத்​தில் எனக்கு ஆதர​வாக உள்ள அமைச்​சர், எம்​எல்​ஏ-க்​களை கட்​சித் தலைமை நெருக்​கி​னால் அவர்​கள் அதற்கு பதில் சொல்​லிக் கொள்​வார்​கள். இதில் நான் ஒன்​றும் சொல்​வதற்கு இல்​லை. நாங்​கள் எந்​தக் கட்​சிக்​கும் பி டீமும் இல்​லை” என்​றார்.

அமைச்​சர் ஜான்​கு​மாரிடம் கேட்​டதற்​கு, "என்​.ஆர்​.​காங்​கிரஸ் அமைச்​சர் திரு​முரு​க​னுக்​கே138 நாள் கழித்​துத்​தான் இலாகா ஒதுக்​கி​னார்​கள். எனக்கு இன்​னும் இலாகா ஒதுக்​காமல் வைத்​திருப்​பது வருத்​த​மாக இருந்​தா​லும் அதற்​காக முதல்​வர் ரங்​க​சாமியை சங்​கடப்​படுத்​து​வ​தில் எனக்கு உடன்​பாடு இல்​லை. தொழில​திபர் ஜோஸ் சார்​லஸ் எனக்கு அமைச்​சர் பதவி பெற்​றுத்​தரத்​தான் செயல்​பட்​டார். அவரது செல​வில் மக்​களுக்​கான நல உதவி​களை வழங்கி வரு​கி​றோம். ஏழைகளுக்கு அன்​ன​தானம் அளித்து வரு​கி​றோம். இதற்​கெல்​லாம் குறிப்​பாக வேறெந்​தக் காரண​மும் இல்​லை” என்​றார்.

இதனிடையே, பொதுப்​பணித்​துறை அமைச்​சர் லட்​சுமிநாராயணனுக்​கும் சபா​நாயகர் செல்​வத்​துக்​கும் முதல்​வர் ரங்​க​சாமிக்கு நெருக்​க​மான​வ​ரான வழக்​கறிஞர் ராம் முனு​சாமி அளித்​துள்ள புகார் மனு​வில், ‘வி​தி​களை மீறி எம்​எல்ஏ அலு​வல​கத்​தில் ஃபிளெக்​ஸ்​களை வைத்​ததற்​காக அமைச்​சர் ஜான்​கு​மார் மீது நடவடிக்கை எடுத்து ஃபிளெக்​ஸ்​களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்​டும்’ என தெரி​வித்​திருக்​கி​றார்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய அவர், "அன்​ன​தானம் அளிப்​பது, மக்​களுக்கு உதவி செய்​வதெல்​லாம் மகிழ்ச்சி தான். ஆனால், அரசு வழங்​கிய எம்​எல்ஏ அலு​வல​கத்​தில் யாரோ ஒரு டிரஸ்ட் நிர்​வாகியை தனது முதலாளி என்று அழைத்​து​வந்து அவரது படம் போட்ட ஃபிளெக்​ஸ்​களை அமைச்​சர் ஜான்​கு​மார் வைத்​துள்​ளார். இது தவறான செயல். தவறை உணர்ந்து அந்த ஃபிளெக்​ஸ்​களை அமைச்​சர் ஜான்​கு​மார் உடனடி​யாக அப்​புறப்​படுத்த வேண்​டும். இல்​லை​யென்​றால் சட்​டம் தன் கடமை​யைச் செய்​யும்" என்​றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x