Published : 20 Sep 2025 06:12 AM
Last Updated : 20 Sep 2025 06:12 AM

நாகை, திருவாரூரில் தவெக தலைவர் விஜய் இன்று பிரச்சாரம்: வாகனத்தை யாரும் பின்தொடரக் கூடாது என கட்சி வேண்டுகோள்

நாகப்​பட்​டினம் / திரு​வாரூர்: நாகை, திரு​வாரூரில் விஜய் இன்று சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். அப்​போது, விஜய் பிரச்​சார வாக​னத்தை யாரும் பின்​தொடர வேண்​டாம் என்று தவெக வேண்​டு​கோள் விடுத்​துள்​ளது. சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்டி கடந்த 13-ம் தேதி திருச்​சி​யில் தனது சுற்​றுப்​பயணத்தை விஜய் தொடங்​கி​னார். தொடர்ந்​து, அரியலூரில் பிரச்​சா​ரம் செய்த விஜய், நள்​ளிரவு நேர​மான​தால், பெரம்​பலூர் சுற்​றுப்​பயணத்தை ரத்து செய்​தார்.

ஒரே நாளில் 3 மாவட்​டங்​களுக்கு சுற்​றுப்​பயணம் மேற்​கொள்ள முடி​யாத​தால், விஜய் சுற்​றுப்​பயணத் திட்​டம் மாற்​றி அமைக்கப்​பட்​டது. அதன்​படி, ஒரு நாளில் 2 மாவட்​டங்​களில் மட்​டும் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​ளத் திட்​ட​மிட்​டுள்​ளார்.

இந்​நிலை​யில், இன்று (செப்​.20 திரு​வாரூர், நாகை​யில் விஜய் சுற்​றுப்​பயணம் மேற்​கொள்​கிறார். நாகை புத்​தூர் அண்ணா சிலை சந்​திப்​பில் காலை 11 மணிக்​கும், திரு​வாரூர் நகராட்சி அலு​வல​கம் அருகே தெற்கு வீதி​யில் பிற்பகல் 3 மணிக்​கும் பொது​மக்​கள் மத்​தி​யில் விஜய் உரை​யாற்ற உள்​ளார்.

அனுமதி அளிப்பதில் தாமதம்: இதனிடையே, விஜய் சுற்​றுப்​பயண நிகழ்ச்​சிக்கு போலீ​ஸார் பல்​வேறு நிபந்​தனை​கள் விதிப்​ப​தாக​வும், அனு​மதி அளிக்க தாம​திப்​ப​தாக​வும், உயர் நீதி​மன்​றத்​தில் தவெக சார்​பில் மனு தாக்​கல் செய்​யப்​பட்​டிருந்​தது. மனுவை விசா​ரித்த நீதிப​தி​கள், கர்ப்​பிணி​கள், மாற்​றுத் திற​னாளி​கள், குழந்​தைகள் கூட்​டத்​துக்கு வர வேண்​டாம் என எல்​லோருக்​கும் முன்​மா​திரி​யாக விஜய் தெரிவிக்​கலாமே என்​றும், நிகழ்ச்​சிக்கு வரும் தொண்​டர்​களை ஏற்​பாடு செய்​பவர்​கள்​தான் கட்​டுப்​படுத்த வேண்​டும் என்​றும், பொது சொத்து​களுக்கு சேதம் விளை​விப்​பவர்​களிடம் இருந்து உரிய இழப்​பீட்டு தொகையை வசூலிக்க வேண்​டும் என்​றும் அறி​வுறுத்​தினர்.

இதையடுத்​து, விஜய் சுற்​றுப்​பயணம் தொடர்​பாக கட்​சித் தலைமை வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், ‘விஜய் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சிக்கு வரும்​போதும், நிகழ்ச்​சியை முடித்​து​விட்டு செல்​லும்​போதும், அவரது வாக​னத்தை யாரும் வாக​னங்​களில் பின் தொடர வேண்​டாம். பொதுமக்​கள் சந்​திப்பு நடை​பெறும் இடத்​தின் அரு​கில் அரசு, தனி​யார் கட்​டிடங்​கள், சுவர்​கள், மரங்​கள், மின் விளக்கு கம்​பங்​கள், வாக​னங்​கள், கொடி கம்​பங்​கள், சிலைகள் இருந்​தால் அதன் அரு​கில் செல்​வதையோ, ஏறு​வதையோ தவிர்க்க வேண்டும்.

கர்ப்​பிணி​கள், கைக்​குழந்​தை​யுடன் இருக்​கும் பெண்​கள், முதி​யோர்​கள், பள்ளி சிறு​வர்​கள், மாற்​றுத்​திற​னாளி​கள் நிகழ்ச்​சி​யில் கலந்​து​கொள்​வதை தவிர்க்க வேண்​டும். பட்​டாசு வெடிப்​பதை தவிர்க்க வேண்​டும். காவல் துறை வி​தி​களுக்​கு உட்​பட்​டு நடந்​து​கொள்​ள வேண்​டும்​’ என தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x