Published : 20 Sep 2025 06:02 AM
Last Updated : 20 Sep 2025 06:02 AM

கரூரில் பழனிசாமி பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கோரி வழக்கு: செப். 22-க்குள் எஸ்.பி. முடிவெடுக்க உத்தரவு

மதுரை: கரூர் பேருந்து நிலை​யம் அருகே அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பொதுக்​கூட்​டத்​துக்கு அனு​மதி கோரிய வழக்கில், மாவட்ட எஸ்​பி. வரும் 22-ம் தேதிக்​குள் முடி​வெடுக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

கரூர் மாவட்ட அதி​முக அவைத் தலை​வர் திருவிக, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​வில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி ‘மக்​களைக் காப்​போம், தமிழகத்தை மீட்​போம்’ என்ற பிரச்​சா​ரப் பயணத்தை 125 சட்​டப்​பேர​வைத் தொகு​தி​களில் நிறைவு செய்​துள்​ளார். அவரது 5-ம் கட்ட பிரச்​சா​ரப் பயணம் வரும் 17-ம் தேதி தொடங்கி 26-ம் தேதி வரை நடை​பெறுகிறது.

கரூர் பேருந்து நிலை​யம் அரு​கே, கரூர்- கோவை சாலை​யில் வரும் 25-ம் தேதி இரவு பழனி​சாமி பங்​கேற்​கும் பொதுக் கூட்​டத்​துக்கு ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளது. இதற்கு அனு​மதி கோரி போலீ​ஸாரிடம் மனு அளிக்​கப்​பட்​டது. போலீ​ஸார் எழுப்​பிய பல்​வேறு கேள்வி​களுக்கு முறை​யாக பதில் அளிக்​கப்​பட்​டது. பொதுக்​கூட்​டம் நடத்த தேர்வு செய்​யப்​பட்​டுள்ள இடத்தை கரூர் நகர காவல் ஆய்​வாளர் ஆய்வு செய்​தார். ஆனால், இது​வரை அனு​மதி வழங்​க​வில்​லை.

கரூர் மாவட்​டத்​தில் அதி​முக சார்​பில் பொதுக் கூட்​டங்​கள், ஆர்ப்​பாட்​டங்​கள் நடத்த அனு​மதி கோரி மனு அளிக்​கும்​போது, அந்த மனுவை போலீ​ஸார் உரிய காலத்​தில் பரிசீலிப்​ப​தில்​லை. இதனால் அனு​மதி கோரி உயர் நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடர வேண்டி உள்​ளது. அந்த வழக்கு விசா​ரணைக்கு வரும்​போது உரிய காரணம் இல்​லாமல் மனுவை நிராகரித்து உத்​தர​விடுகின்றனர்.

அதே​போல, தற்​போது பொதுக்​கூட்​டத்​துக்கு அனு​மதி கோரி அளித்​துள்ள மனுவை​யும் நிராகரிக்க வாய்ப்​புள்​ளது. எனவே, கரூர்- கோவை சாலை​யில் அஜந்தா திரையரங்கு அருகே செப்​.25-ம் தேதி அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பங்​கேற்​கும் பொதுக் கூட்​டத்​துக்கு அனு​மதி வழங்க உத்​தர​விட வேண்​டும். இவ்​வாறு மனு​வில் கூறி​யிருந்​தார்.

பல கட்சிகளுக்கு அனுமதி... இந்த மனு நீதிபதி சுந்​தர் மோகன் முன்​னிலை​யில் விசா​ரணைக்கு வந்​தது. அரசு குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆர்​.எம்​.அன்​புநிதி வாதிடும்​போது, “மாவட்ட ஆட்​சி​யரின் உத்​தர​வின் பேரில், மனு​தா​ரர் கோரும் இடத்​தில் பொதுக்​கூட்​டம் நடத்த அனு​மதி வழங்க இயலாது.

இதனால் மாற்று இடத்​தைப் பரிந்​துரைக்​கு​மாறு மனு​தா​ரருக்கு ஏற்​கெனவே தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது” என்​றார். மனு​தா​ரர் தரப்​பில், “பொதுக்​கூட்​டம் நடத்த அனு​மதி கோரும் இடத்​தில் 2022 முதல் பல அரசி​யல் கட்​சிகள் பொதுக்​கூட்​டம் நடத்​தி​யுள்​ளன” எனத் தெரிவிக்​கப்​பட்​டது.

இதையடுத்து நீதிப​தி, “மனு​தா​ரர் தரப்​பில் பொதுக்​கூட்​டதுக்கு அனு​மதி கோரும் இடத்​தில், ஏற்​கெனவே பல்​வேறு கட்​சிகளுக்கு பொதுக் கூட்​டம் நடத்த அனு​மதி வழங்​கியது தொடர்​பான ஆவணங்​களு​டன், கரூர் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் மனு அளிக்க வேண்​டும். அந்த மனு அடிப்​படை​யில் வரும் 22-ம் தேதி மாலைக்​குள் காவல் கண்​காணிப்​பாளர் உரிய முடி​வெடுக்க வேண்​டும். மனு முடிக்​கப்​படு​கிறது" என உத்​தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x