Published : 20 Sep 2025 05:13 AM
Last Updated : 20 Sep 2025 05:13 AM

அக்.1 முதல் நயினார் நாகேந்திரன் யாத்திரை: பாஜக மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம் தலைமையில் குழு

சென்னை: ​பாஜக மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரன் அக்​டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழு​வதும் யாத்​திரை மேற்​கொள்கிறார். இதற்​கான ஏற்​பாடு​களைத் திட்​ட​மிட மாநில பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் தலை​மை​யில் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

சட்​டப்​பேரவை தேர்​தலை எதிர்​கொள்ள அனைத்து கட்​சிகளும் தீவிர​மாக களப்​பணி​யாற்றி வரு​கின்​றன. குறிப்​பாக, அதி​முக, பாமக, தேமு​திக, நாதக, தவெக ஆகிய கட்சி தலை​வர்​கள் தமிழகம் முழு​வதும் சுற்​றுப்​பயணம் மேற்​கொண்டு மக்​கள் சந்​திப்பை நடத்தி வரு​கின்​றனர். இந்​நிலை​யில், பாஜக​வும் யாத்​திரை நடத்த திட்​ட​மிட்​டுள்​ளது.

கடந்த சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது, அப்​போதையை மாநில தலை​வர் எல்​.​முரு​கன், வேல் யாத்​திரை நடத்​தி​னார். இந்த யாத்​திரை மூலம் தமிழகத்​தில் 4 எம்​எல்​ஏ-க்​களை பாஜக பெற்​றதாக கூறப்பட்டது. தொடர்ந்​து, நாடாளு​மன்​றத் தேர்​தலில், அப்​போதைய மாநிலத் தலை​வ​ராக இருந்த அண்​ணா​மலை, ‘என் மண் என் மக்​கள்’ யாத்​திரை மூலம் மக்​கள் சந்​திப்பை நடத்​தி​னார்.

நாடாளு​மன்​றத் தேர்​தலில் பாஜக எந்த தொகு​தி​யிலும் வெற்றி பெற​வில்லை என்​றாலும், அண்​ணா​மலை​யின் யாத்​திரை தமிழகத்​தில் பாஜக​வின் வாக்கு சதவீதத்தை உயர்த்த வழி​வகுத்​ததாக கூறப்பட்டது.

இந்​நிலை​யில், வரும் சட்​டப்​பேர​வைத் தேர்​தலை​யொட்​டி, பாஜக மாநிலத் தலை​வர் நயி​னார் நாகேந்​திரன், தமிழகம் முழு​வதும் அக்​.1-ம் தேதி முதல் யாத்​திரை செல்ல இருப்​ப​தாக அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. கட்​சியை பலப்​படுத்​துதல் மற்​றும் சட்​டப்​பேரவை தேர்​தலில் அதிக இடங்​களைக் கைப்​பற்​றும் நோக்​கில் இந்த யாத்​திரை திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. யாத்​திரை ஏற்​பாடு​களைக் கவனிக்க மாநில பொதுச் செய​லா​ளர் கருப்பு முரு​கானந்​தம் தலை​மை​யில் மாநிலக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்த குழு​வில், மாநில துணைத் தலை​வர் வெங்​கடேசன், மாநில செய​லா​ளர்​கள் மீனாட்சி நித்​யசுந்​தர், கூட்​டுறவு பிரிவு மாநிலத் தலை​வர் மகா சுசீந்​திரன், மத்​திய அரசு நலத்​திட்ட பிரிவு முன்​னாள் மாநிலத் தலை​வர் லோக​நாதன், மாவட்​டத் தலை​வர்​கள் தர்​ம​ராஜ், சத்​தி​யமூர்த்​தி, இளங்​கோ, முன்​னாள் மாவட்​டத் தலை​வர் ராஜேந்​திரன் உள்​ளிட்​டோர் இடம்​பெற்​றுள்​ளனர். இந்த யாத்​திரையை, நெல்​லை​யில் தனது சொந்த தொகு​தி​யில் இருந்தே நயி​னார் நாகேந்​திரன்​ தொடங்​கு​வார்​ என பாஜகவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x