Published : 19 Sep 2025 10:36 AM
Last Updated : 19 Sep 2025 10:36 AM

சொன்னதை கேட்கலையே அண்ணன்... வேட்பாளரை மாற்றாததால் திமுகவில் இணைந்த நாதக தம்பிகள்

தேர்தல் ஆணையம் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்குவதற்கு முன்னதாகவே வேட்பாளர்களை அறிவித்து பிராச்சாரத்தை தூள் கிளப்புவது நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தனித்துவமான ஸ்டைல். அந்த வகையில், ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) தொகுதியின் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளராக கல்யாணசுந்தரத்தை அண்மையில் அறிவித்தார் சீமான். இதை ஏற்காமல் இருபதுக்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் சீமானுக்கு குட்பை சொல்லிவிட்டு திமுக-வில் ஐக்கியமாகி இருக்கிறார்கள்.

​நாதக சார்​பில், கள் இறக்க அனு​மதி கோரி தூத்​துக்​குடி மாவட்​டத்​தில் கடந்த ஜூன் மாதம் போராட்​டம் நடத்​திய சீமான், பனை மரத்​தில் ஏறி கள் இறக்​கி​னார். இதற்கு கண்​டனம் தெரி​வித்த புதிய தமி​ழ​கம் கட்சி தலை​வர் டாக்​டர் கிருஷ்ண​சாமி, “சீ​மான் மீது வழக்​குப் பதிவு செய்து நடவடிக்கை எடுப்​பதுடன் நாதக-வை தடை செய்ய வேண்​டும்” என குரல் கொடுத்​தார்.

இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் தேனி​யில் தேவேந்​திரகுல வேளாளர் சமூகத்​தின் பட்​டியல் வெளி​யேற்ற கோரிக்​கையை வலி​யுறுத்தி பொதுக்​கூட்​டம் போட்​டார் சீமான். இந்​தக் கூட்​டத்​தில் டாக்​டர் கிருஷ்ண​சாமியை​யும், அவரது குடும்​பத்​தினரை​யும் ஒரு​மை​யில் கடுமை​யாக விமர்​சித்​தார் நாதக நிர்​வாகி​யான கல்​யாணசுந்​தரம். அதை ரசித்த சீமான், அந்த மேடை​யிலேயே அவரை ஸ்ரீவில்லிபுத்​தூர் தொகு​திக்​கான வேட்​பாள​ராக அறிவித்தார்.

இந்த நிலை​யில், கல்​யாணசுந்​தரத்தை மாற்ற வேண்​டும் என ஸ்ரீவில்​லிபுத்​தூர் நாதக நிர்​வாகி​கள் தலை​மைக்கு கோரிக்கை விடுத்​தனர். அவர்​களை அழைத்​துப் பேசிய சீமான், “கல்​யாணசுந்​தரம் தான் வேட்​பாளர். நான் சொல்​வதை கேட்​டால் கேளுங்​கள்​... இல்​லா​விட்​டால் வெளி​யேறுங்​கள்” எனச் சொன்​ன​தாகத் தெரி​கிறது.

இதையடுத்​து, நாதக தகவல் தொழில்​நுட்ப பாசறை​யின் மாநில இணைச் செய​லா​ளர் சுபாஷ், அமைச்​சர் கே.கே.எஸ்​.எஸ்​.ஆரை சந்​தித்து தன்னை திமுக-​வில் இணைத்​துக் கொண்​டார். இவரைத் தொடர்ந்து நாதக வழக்​கறிஞர் பாசறை​யின் மாநில இணைச் செய​லா​ளர் பிர​பாகர மூர்த்​தி, குரு​திக்​கொடை பாசறை செய​லா​ளர் ராம​ராஜ் உட்பட இரு​பதுக்​கும் மேற்​பட்ட நிர்​வாகி​களும் அண்​ணாச்​சியை சந்​தித்து திமுக-​வில் ஐக்​கிய​மாகினர்.

திமுக-​வில் இணைந்த இவர்​கள் அனை​வ​ரும் விருதுநகர் மாவட்​டத்​தில் ஊசலாட்​டத்​தில் உள்ள நாதக நிர்​வாகி​களை அண்​ணாச்​சி​யிடம் அழைத்​துச் செல்​லும் முயற்​சி​யில் தற்​போது மும்​முர​மாக ஈடு​பட்டு வரு​கி​றார்​கள்.

இதுகுறித்து நம்​மிடம் பேசிய பிர​பாகர மூர்த்​தி, “2016-ல் ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் நாதக சார்​பில் இதே கல்​யாணசுந்​தரம் போட்​டி​யிட்​டு, 3,833 வாக்​கு​கள் பெற்​றார். தேர்​தலில் தோற்ற பிறகு நாதக-வை விட்டு வில​கி, ‘தமி​ழர் விடு​தலை மீட்​புக் களம்’ என்ற அமைப்பை தொடங்​கிய​வர், பட்டியலினத்​தில் உள்ள பிற சமூகங்​களுக்கு எதி​ராக​வும், பிற்​படுத்​தப்​பட்ட சமூகங்​களுக்கு எதி​ராக​வும் தொடர்ந்து அவதூறு கருத்​துகளை பரப்பி வந்தார்.

இதே நபர் தான் 2019 மக்​கள​வைத் தேர்​தலில் விருதுநகரில் நாதக வேட்​பாள​ராகப் போட்​டி​யிட்ட சீமானின் உறவினரை எதிர்த்து போட்​டி​யிட்​ட​வர். 2021 தேர்​தலில் அதி​முக-வுக்கு ஆதர​வாக பரமக்​குடி​யிலும், 2024 மக்​கள​வைத் தேர்​தலில் தென்​காசி​யில் ஜான் பாண்​டிய​னுக்கு ஆதர​வாக​வும் வேலை செய்​தார். இப்​படிப்​பட்ட நபரை மீண்​டும் வேட்​பாள​ராக அறி​வித்​தால் மக்​கள் மத்​தி​யில் எதிர்ப்பு உரு​வாகும். எங்​களால் அரசி​யல் செய்ய இயலாது என தலை​மை​யிடம் தெரி​வித்​தோம். தலைமை அதைக் கேட்​காத​தால் நாங்​கள் வெளி​யேறி​விட்​டோம்” என்​றார்.

இது தொடர்​பாக கல்​யாணசுந்​தரத்​திட​மும் பேசினோம். “அண்​ணன் சீமான் உத்​தர​வுப்​படி ஸ்ரீவில்​லிபுத்​தூர் வேட்​பாள​ராக தேர்​தல் பணியை தொடங்கி உள்​ளேன். எனக்கு எதிர்ப்பு தெரி​வித்து இரண்டு நிர்​வாகி​கள் தங்​களது ஆதர​வாளர்​களு​டன் கட்​சி​யில் இருந்து விலகி உள்​ளனர்.

ஸ்ரீவில்​லிபுத்​தூர் தொகு​தி​யில் 2021 தேர்​தலில் நாதக பெற்ற 25 ஆயிரம் வாக்​கு​கள் கொள்​கைக்கு கிடைத்த வாக்​கு​களே அன்​றி, தனி நபர்​களுக்கு கிடைத்​தது அல்ல. அதேசம​யம், நாதக-வை விட்டு வில​கிய நபர்​கள் நாதக கொள்​கைக்கு நேர் எதி​ரான திமுக-​வில் இணைந்​திருப்​பது ஆதாயத்திற்காக மட்​டுமே” என்​றார் அவர்.

தேர்​தல் நெருங்​கு​வதற்​குள், கட்​சிகளுக்​குள்​ளேயே நடக்​கும் கலகக் குரல்​களை சமாளிப்​பதே கட்​சித் தலை​வர்​களுக்கு பெரும்​பா​டாகி விடும் போலிருக்​கிறது!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x