Published : 18 Sep 2025 06:43 AM
Last Updated : 18 Sep 2025 06:43 AM

புழல் சிறை பண்ணையில் 4 நாட்களில் 2 ஆயிரம் கோழிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

சென்னை: புழல் சிறை வளாகத்​தில் உள்ள கோழிப் பண்​ணை​யில், கடந்த 4 நாட்​களில் சுமார் 2 ஆயிரம் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளன. அவை​கள் பறவை காய்ச்​சல் தொற்​றால் உயி​ரிழந்​த​தா? என மருத்​துவ ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

தமிழக சிறை​களில் உள்ள கைதி​களுக்கு வாரத்​துக்கு இரு​முறை கோழி இறைச்சி உணவாக வழங்​கப்​படு​கிறது. இதற்கு தேவையான கோழிக் கறியை சிறை கைதி​களே உற்​பத்தி செய்து கொள்​வதற்​காக, தமிழகத்​தில் உள்ள சிறை​களில் தமிழ்​நாடு சிறைத்​துறை சார்​பில், கைதி​களால் கோழிப்​பண்ணை அமைக்​கப்​பட்டு பராமரிக்​கப்​படு​கிறது.

இந்த கோழிகள் சிறை கைதி​களுக்கு போக, எஞ்​சி​யவை பொது மக்​களுக்​கும் விற்​பனை​யும் செய்​யப்​படு​கிறது. அந்த வகை​யில், புழல் மத்​திய சிறை​யில் கோழிப்​பண்ணை உள்​ளது.

உடற் கூராய்வுக்கு அனுப்பிவைப்பு: இந்த பண்​ணை​யில் கடந்த 4 நாட்​களில் 2 ஆயிரம் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளன. பறவை காய்ச்​சல் காரண​மாக கோழிகளின் இறப்பு ஏற்​பட்​ட​தாக​வும், இந்த காய்ச்​சல் சிறை கைதி​களுக்கு பரவ வாய்ப்பு உள்​ள​தாக​வும் அச்​சம் எழுந்​தது.

இந்த விவ​காரம் குறித்​து, தற்​போது உயர்​மட்ட விசா​ரணை நடை​பெற்று வரு​கிறது. இதுகுறித்​து, சிறைத் துறை அதி​காரி​கள் கூறுகை​யில், ‘புழல் சிறை வளாகத்​தில் உள்ள பண்​ணை​களில் கோழிகள் மர்​ம​மான முறை​யில் இறந்​துள்​ளது. அவற்றை கைப்​பற்றி உடற் கூராய்​வுக்​கு, தமிழ்​நாடு காவல்​நடை மருத்​துவ அறி​வியல் பல்​கலைக்​கழகத்​துக்கு அனுப்பி வைத்​துள்​ளோம்.

ஆய்​வின் முடி​வில் கோழிகள் இறப்​புக்​கான காரணம் தெரிய​வரும். மேலும், கைதி​களுக்கு எந்த தொற்​றும் ஏற்​பட்டு விடக்​கூ​டாது என்​ப​தற்​காக அவர்​களும் கண்​காணிப்​பில் வைக்​கப்​பட்​டுள்​ளனர். இவை தவிர, பல்​வேறு முன்​னெச்​சரிக்கை நடவடிக்​கைகளும் எடுக்​கப்​பட்​டுள்​ளது’ என்​றனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x