Last Updated : 18 Sep, 2025 09:38 AM

 

Published : 18 Sep 2025 09:38 AM
Last Updated : 18 Sep 2025 09:38 AM

சேலத்திற்கு பல திட்டங்களை தந்திருக்கும் தமிழக அரசு! - உதயநிதியை உச்சிகுளிர வைத்த பாமக எம்எல்ஏக்கள்

அப்பாவும் பிள்ளையும் ஆளுக்கொரு பக்கமாக ரெண்டுபட்டு நிற்கும் பாமக-வில் அன்புமணி கோஷ்டி ஆளும் கட்சியை அநியாயத்துக்கு போட்டுத் தாக்கி வருகிறது. இதனால், இயல்பாகவே அய்யா கோஷ்டி ஆளும்கட்சியை அனுசரித்து நிற்கிறது. இந்த நிலையில், சேலத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட அரசு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இரண்டு கோஷ்டிகளையும் சேர்ந்த பாமக எம்எல்ஏ-க்கள் திமுக ஆட்சிக்கு திடீர் புகழாரம் சூட்டி திகைக்க வைத்தார்கள்.

சேலம் மேற்கு தொகுதி பாமக எம்​எல்​ஏ-​வான அருள் மருத்​து​வர் ராம​தாஸ் அணி​யில் இருக்​கி​றார். இவர் தான் பாமக உட்​கட்சி விவ​காரம் தொடர்​பாக அன்​புமணிக்கு எதி​ரான கருத்​துகளை பதிவு செய்து வரு​கி​றார். அதேசம​யம் மேட்​டூர் தொகுதி பாமக எம்​எல்​ஏ-​வான சதாசிவம், அன்​புமணி விசு​வாசி​யாக தன்னை அடை​யாளம் காட்​டிக் கொண்டு நிற்​கி​றார்.

கட்சி ரெண்​டு​படு​வதற்கு முன்​ன​தாக சேலம் மாவட்​டத்​தில் நடை​பெறும் அரசு விழாக்​களில் அருளும் சாதாசிவ​மும் ஒன்​றாகவே வந்து கலந்​து​கொள்​வார்​கள். ஆனால், பாமக ரெண்​டு​பட்டு பலகீனப்​பட்​டுப் போன பிறகு இரு​வ​ரும் சம்​பிர​தா​யத்​துக்​காகக் கூட சந்​தித்​துக் கொள்ள தயங்​கு​கி​றார்​கள். அரசு விழாக்​களில் கலந்து கொண்​டாலும் ஆளுக்​கொரு திசை​யில் வந்து உட்​கார்ந்து இருந்​து​விட்​டுப் போவதை வாடிக்​கை​யாக வைத்​திருக்​கி​றார்​கள்.

இந்த நிலை​யில், மகளிர் சுய உதவிக்​குழு உறுப்​பினர்​களுக்கு ரூ.3,500 கோடி வங்​கிக் கடன் இணைப்​பு​கள் வழங்​கும் நிகழ்ச்​சிக்​காக 16-ம் தேதி சேலம் வந்​திருந்​தார் துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின். இந்த நிகழ்ச்​சிக்​கான மேடை​யிலும் அருளும் சதாசிவ​மும் வழக்​கம் போல ஆளுக்​கொரு பக்​கத்​தில் தான் உட்​கார்ந்​திருந்​தனர். ஆனால், இரு​வ​ரும் திசைக்​கொரு​வ​ராய் இருந்​தா​லும் திமுக அரசை ஒரு​மித்த குரலில் பாராட்​டிப் பேசி உதயநி​தி​யையே உச்​சிகுளிர வைத்​து​விட்​டார்​கள்.

இந்த நிகழ்ச்​சி​யில் பேசிய பாமக எம்​எல்​ஏ-க்​கள் இரு​வ​ரு​மே, சேலம் மாவட்​டத்​துக்கு தமிழக அரசு பல திட்​டங்​களை செய்து கொடுத்​திருப்​ப​தாக பாராட்​டியதுடன், தங்​களது தொகு​தி​யில் மேலும் தேவை​கள் இருப்​ப​தால் அதற்​கான திட்​டங்​களை​யும் செயல்​படுத்த வேண்​டும் என்று பேசினர். அதி​லும் அன்​புமணி கோஷ்டி எம்​எல்​ஏ-​வான சதாசிவம் பேசுகை​யில், “மாற்​றுக் கட்​சி​யினர் என்​றும் பாரா​மல் எங்​களை துணை முதல்​வர் விழாவுக்கு அழைத்​திருப்​பது சிறப்​பானது” என்று குளிர​வைத்​தார்.

இதை மேற்​கோள்​காட்டி பேசிய உதயநி​தி, “இந்த விழா​வில் கலந்து கொண்​டிருக்​கும் இரண்டு எம்​எல்​ஏ-க்​களுமே நமது இயக்​கத்​தைச் சேர்ந்​தவர்​களும் கிடை​யாது; நமது கூட்​ட​ணி​யைச் சேர்ந்​தவர்​களும் கிடை​யாது” என்று சொல்​லிக் கொண்​டிருக்​கும் போதே குறுக்​கிட்ட அருள், “இப்ப கூட்​ட​ணி​யில் இல்​லை” என்று எடுத்​துக் கொடுத்து சிரித்​தார். அதை அர்த்​த​மாய் சிரித்​த​படி ஆமோ​தித்த உதயநி​தி, “ஆமாம்​... இப்​போது கூட்​ட​ணி​யில் இல்​லை. ஆனாலும் இரு​வ​ருமே நமது அரசை போட்டி போட்​டுக்​கொண்டு பாராட்​டி​யுள்​ளனர். அவர்​கள் இரு​வ​ரும் ஒரு​மித்து பாராட்​டி​யுள்​ளனர். இதே​போல், அவர்​கள் ஒற்​றுமை​யுடன் இருக்க வேண்​டும்” என்​றார்.

இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்​தி​யாளர்​களிடம் பேசிய அருள், “சேலம் மாநகரின் 45 சதவீதம் பகு​தி​யானது எனது சேலம் மேற்கு சட்​டமன்​றத் தொகு​திக்​குள் வரு​கிறது. தொகு​தி​யின் சில பகு​தி​களில் சாக்​கடை வசதி இல்​லை. எனவே, அதற்​கான சிறப்​புத் திட்​டத்தை நிறை​வேற்​றித் தரக்​கோரி சிறப்​புத் திட்ட அமலாக்​கத்​துறை​யின் அமைச்​ச​ரான உதயநிதி ஸ்டா​லினிடம் தான் கேட்க முடி​யும். அதற்​காகத்​தான் இந்த விழா​வில் கலந்து கொண்டு அவரிடம் எனது கோரிக்​கை​களை வைத்​துள்​ளேன்” என்​றார்.

நீங்​களும் சதாசிவ​மும் ஒற்​றுமை​யாக இருக்க வேண்​டும் உதயநிதி அட்​வைஸ் செய்​தா​ரே... என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, “எங்​களிடம் போட்டி இல்​லை... பொறாமை இல்​லை. எங்​களை உரு​வாக்​கிய​வர் டாக்​டர் ஐயா. திமுக-வுடன் முதலில் கூட்​ட​ணி​யில் இருந்​தோம். இப்​போது இல்லை என்​ப​தைத்​தான் அப்​படிச் சொன்​னேன்” என்று கெட்​டிக்​காரத்​தன​மாக பதில் சொன்​னார் அருள்​!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x