Published : 18 Sep 2025 06:15 AM
Last Updated : 18 Sep 2025 06:15 AM

ஆபத்து விளைவிக்கும் போராட்டங்கள் சட்டப்பூர்வமானது அல்ல: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து

மதுரை: ‘ஆபத்​துகளை விளைவிக்​கும் வகை​யில் நடத்​தப்​படும் போராட்​டங்​கள் சட்​டப்​பூர்​வ​மானது அல்ல’ என்று உயர் நீதி​மன்ற மதுரை அமர்வு தெரி​வித்​துள்​ளது. திருச்​சி​யைச் சேர்ந்த அய்​யா கண்​ணு, தென்​னிந்​திய நதி​கள் இணைப்பு சங்​கத்​தின் மாநிலத் தலை​வ​ராக உள்​ளார். இவர், விவ​சா​யிகள் கோரிக்கை தொடர்​பாக டெல்​லி​யில் போராட்​டம் நடத்​தச் செல்​வதை தடுக்​கக் கூடாது என போலீ​ஸாருக்கு உத்​தர​விடக் கோரி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுவை நீதிபதி பி.பு​கழேந்தி விசா​ரித்​தார். மனு​தா​ரர் தரப்​பில், “டெல்​லி​யில் போராட்​டம் நடத்த நானும், எனது சங்க உறுப்​பினர்​களும் ரயி​லில் பயணம் செய்ய முயன்​ற​போது போலீ​ஸார் எங்​களை கட்​டாயப்​படுத்தி இறக்கி விட்​டனர்” என்று தெரிவிக்​கப்​பட்​டது. அரசு தரப்​பில், “டெல்​லி​யில் மனு​தா​ரர் பல ஆண்​டு​களுக்கு முன் 100 நாட்​கள் போராட்​டம் நடத்​தி​னார்.

அப்​போது, மண்டை ஓடு​கள், எலும்​புக்​கூடு​கள், மூத்த குடிமகன்​களை வைத்து அரை நிர்​வாணப் போராட்​டம் உள்​ளிட்ட ஆபத்​தான போராட்​டங்​களை நடத்​தி​னார். போராட்​டங்​கள் நடத்​தும்​போது விதிக்​கும் நிபந்​தனை​களை மீறி செயல்​படு​கிறார். எனவே, இந்த நடவடிக்கை எடுக்க வேண்​டி​யுள்​ளது” என வாதிடப்பட்டது.

பின்​னர் நீதிப​தி, “அமை​தி​யாக போராடு​வதற்​கான உரிமை அரசி​யலமைப்​பில் அடிப்​படை உரிமை​யாக அங்​கீகரிக்​கப்​பட்​டுள்​ளது. மனு​தா​ரரின் போராட்ட முறை​கள், செல்​போன் கோபுரங்​களில் ஏறு​தல், மூத்த குடிமக்​களின் உயிருக்கு ஆபத்தை விளை​வித்​தல், பொது போராட்​டங்​களில் மண்டை ஓடு​கள் மற்​றும் கூண்​டு​களைப் பயன்​படுத்​துதல் போன்​றவை சட்​டப்​பூர்​வ​மான போராட்​டத்​துடன் பொருந்​தாது.

ஆர்ப்​பாட்​டங்​களை நடத்​து​வதற்கு முன் அனு​மதி கோர வேண்​டும். மேலும், அனு​மதி வழங்​கப்​படும்​போது காவல் துறை​யினர் விதிக்​கும் நிபந்​தனை​கள் மதிக்​கப்பட வேண்​டும். மனு​தா​ரர் உடனடி​யாக சட்​டத்​தின் உதவியை நாடி​யிருக்​கலாம்.

மனு​தா​ரர் முன் அனு​மதி பெற்று சட்​டப்​படி போராட்​டங்​களை நடத்த வேண்​டும். மனு​தா​ரர் டிக்​கெட்​டு​களை வைத்​திருக்​கும்​போது, அவர் ரயி​லில் பயணம் செய்​வதை தன்​னிச்​சை​யாக தடுக்க உரிமை​யில்​லை. அவ்​வாறு தடுத்​தால் சம்​பந்​தப்​பட்ட அதி​காரி​களுக்கு எதி​ராக மனு​தா​ரர் வழக்​குத் தொடர உரிமை உள்​ளது. மனு தள்​ளு​படி செய்​யப்​படு​கிறது” என்று உத்​தர​விட்​டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x