Published : 18 Sep 2025 06:30 AM
Last Updated : 18 Sep 2025 06:30 AM

வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தியாகிகள் தினம்: தொண்டர்கள் புடைசூழ ராமதாஸ், அன்புமணி தனித்தனியே அஞ்சலி

விழுப்புரத்தை அடுத்த கோலியனூரில் உள்ள தியாகிகள் நினைவு தூணில் அஞ்சலி செலுத்திய பாமக நிறுவனர் ராமதாஸ். (அடுத்த படம்) அஞ்சலி செலுத்திய பாமக தலைவர் அன்புமணி.படங்கள்: | இரா.தினேஷ்குமார் |

விழுப்புரம்: வன்​னியர்​களுக்கு இடஒதுக்​கீடு வழங்​கக் கோரி நடந்த போராட்​டத்​தின்​போது நடத்​தப்​பட்ட துப்​பாக்​கிச் சூட்​டில் உயிரிழந்த 21 தியாகி​களுக்கு ஆண்டுதோறும் செப். 17-ம் தேதி வன்​னியர் சங்​கம் மற்​றும் பாமக சார்​பில் அஞ்​சலி செலுத்​தப்​பட்டு வருகிறது. தற்​போது ராம​தாஸ்​-அன்​புமணி இடையே விரிசல் ஏற்​பட்​டுள்​ள நிலையில் இரு​வரும் தங்​கள் பலத்தை நிரூபிக்க பல்​வேறு முயற்​சிகளில் ஈடு​பட்​டுள்​ளனர்.

பெரி​யார் பிறந்த நாளை​யொட்டி தைலாபுரத்​தில் உள்ள பெரி​யார் சிலைக்கு நேற்று மாலை அணி​வித்த பாமக நிறு​வனர் ராம​தாஸ், பின்​னர் இடஒதுக்​கீட்​டு போராட்​டத்​தில் உயி​ரிழந்த 21 தியாகி​களின் படங்​களுக்கு மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார். தொடர்ந்​து, பல ஆண்​டு​களுக்கு பிறகு, சித்​தணி முதல் கொள்​ளு​காரன்​குட்டை வரை​யுள்ள தியாகி​களின் நினைவு தூண்​களுக்கு சென்று மலர்வளையம் வைத்து அஞ்​சலி செலுத்தி​னார்.

அப்​போது தியாகி​களின் குடும்​பங்​களுக்கு நிவாரண உதவி வழங்​கி​னார். அவருடன், அவரது மகள் காந்தி உள்​ளிட்​டோர் சென்​றனர். இதே​போல, திண்​டிவனத்​தில் தனி​யார் மண்​டபத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில் பங்​கேற்ற அன்​புமணி, 21 தியாகி​களின் படங்​களுக்கு மலர்​தூவி அஞ்​சலி செலுத்​தி​னார். மேலும், சித்​தணி முதல் கொள்​ளுக்​காரன்​குட்டை வரை​யுள்ள தியாகி​களின் நினை​வுத் தூண்​களுக்கு சென்​று, மலர் வளை​யம் வைத்து அஞ்​சலி செலுத்​தி, அவர்​களது குடும்​பங்​களுக்கு நிவா ரண உதவி​களை வழங்​கி​னார்.

ராம​தாஸ், அன்​புமணி ஆகியோர் பரபஸ்பர பலத்தை நிரூபிக்​கும் வகை​யில் தனித்தனியாக 100 கார்​களிலும் நூற்​றுக்​கணக்​கான இருசக்கர வாக​னங்​களிலும் தொண்டர்கள் சென்​றனர். இதனால் விக்​கிர​வாண்​டி-பண்​ருட்டி தேசிய நெடுஞ்​சாலை மற்றும் விழுப்​புரம் நான்​கு​முனை சந்​திப்பு முதல் கோலியனூர் வரை​ போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​டது. புறவழிச்​சாலை வழி​யாக கனரக வாக​னங்​கள் திருப்​பி​விடப்​பட்​டன. சுமார் 3 மணி நேரம் போக்​கு​வரத்து நிறுத்​தப்​பட்​ட​தால் பொது​மக்​கள், வெளியூர் செல்லும் பயணிகள் அவதிப்பட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x