Published : 18 Sep 2025 07:32 AM
Last Updated : 18 Sep 2025 07:32 AM

கோயிலில் அனுமதி மறுப்பு விவகாரம்: கரூர் மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மீது நடவடிக்கை

மதுரை: கோயி​லுக்​குள் பட்​டியலின மக்​களுக்கு அனு​மதி மறுக்​கப்​பட்ட விவ​காரத்​தில், சரி​யாக நடவடிக்கை எடுக்​காத கரூர் மாவட்ட ஆட்​சி​யர், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் மீது நடவடிக்கை எடுக்​கு​மாறு அரசுக்கு, உயர் நீதி​மன்றம் பரிந்​துரை செய்துள்​ளது.

கரூர் மாவட்டம் சின்​ன​தா​ராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் வழிபாடு நடத்த போலீஸ் பாதுகாப்பு கோரி வன்​னியகுல சத்​திரியர் நல அறக்​கட்​டளை தலை​வர் முரு​கன், உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனு தாக்​கல் செய்​தார். அதேபோல, அக்​கோயி​லில் பட்டியலின மக்​களைஅனு​ம​திக்​கக் கோரி​யும், கோயிலை மூடு​வது தொடர்​பான கோட்​டாட்​சி​யரின் உத்​தரவை ரத்து செய்ய வலி​யுறுத்​தி​யும் மாரி​முத்து என்​பவர் மனு தாக்​கல் செய்​தார்.

இந்த மனுக்​களை விசா​ரித்து நீதிபதி பி.பு​கழேந்தி பிறப்​பித்த உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: சின்ன தாராபுரம் மாரி​யம்​மன் கோயி​லில் பட்​டியல் சாதி​யினர் விலக்கி வைக்​கப்பட்​டுள்ள காட்சியை காண நேர்ந்​தது. மாவட்ட ஆட்​சி​யர் மற்​றும் காவல் கண்​காணிப்​பாளர் எதற்​காக இருக்​கிறார்​கள் என்ற கேள்வி எழுகிறது. ஆட்​சி​யர், காவல் கண்​காணிப்​பாளர் பதவி​ அலங்​காரப் பதவி​ அல்ல, அரசி​யலமைப்பு பதவி.​

அரசி​யலமைப்புவழங்​கி​யுள்ள அதி​காரம், சலுகைகளை அனுபவிக்​கும் ஆட்​சி​யரும், காவல் கண்​காணிப்​பாள​ரும், அடிப்​படை உரிமை​களை நிறை வேற்ற மறுக்​கின்​றனர். மாவட்ட ஆட்​சியர் உடனடி​யாகஇரு சமூகங்​களுக்​கிடையே அமை​திக்கூட்​டம் நடத்​தி, அறநிலை​யத் துறை அதி​காரிகளின் துணை​யுடன்அனைத்து சாதி​யினரும் பங்​கேற்​கும் கூட்டு வழி​பாடுநடத்த ஏற்​பாடு செய்​திருக்க வேண்​டும். அதை செய்​யாமல் 7 ஆண்​டு​களாக சட்​டம், ஒழுங்கு பிரச்​சினை ஏற்​படும் என்று கூறி கோயிலை பூட்டி வைத்​திருப்​பது சரியல்ல.

கோயில்​கள் அனைத்து பக்​தர்​களுக்​கும் திறந்​திருப்​பதை உறுதி செய்​யும் கடமை காவல் கண்காணிப்​பாள​ருக்கு உண்​டு. பட்​டியலின மக்​கள் கோயிலில் வழிபடு​வதை தடுப்​பவர்​கள் மீது வன்​கொடுமை தடுப்பு சட்​டத்​தின் கீழ் நடவடிக்கை எடுத்​திருக்க வேண்​டும். சட்​டம் ஒழுங்கை பாது​காத்​திருக்க வேண்​டும். இவற்றை செய்​வதற்கு பதிலாக கோயிலை மூடி​யுள்​ளனர்.

ஆட்​சி​யரும், காவல் கண்​காணிப்​பாளரும் சட்​டப்​படி செயல்​பட்​டிருந்​தால் 2018 முதல் கோயில் மூடப்​பட்​டிருக்​காது. பக்​தர்​களும் உரிமைக்​காக நீதி​மன்​றத்தை நாடி​யிருக்க மாட்​டார்​கள். இரு​வரும் அரசி​யலமைப்பு கடமையி​லிருந்து வில​கிச் சென்​றுள்​ளனர். இந்த நடத்​தையின் மூலம் இரு​வரும் கடமையை செய்ய தகுதி​யற்​றவர்​கள் என்று ஒப்​புக்​கொண்​டுள்​ளனர்.

இரு​வரின் செயல்​பாடு​கள் கண்​டிக்​கத்​தக்​கது. அரசு இரு​வரை​யும் இடமாறு​தல் செய்​வது உள்​ளிட்ட நடவடிக்கை எடுக்​கும் என்று நீதி​மன்​றம் எதிர்​பார்க்​கிறது. அப் போது​தான் சாதி​யின் பெய​ரால் கோயிலுக்​குள் நுழைவதை தடுக்க துணிபவர்​களுக்கு பயத்தை ஏற்​படுத்​தும். இவ்​வாறு நீதிபதி உத்​தரவில் கூறியுள்​ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x