Published : 18 Sep 2025 06:56 AM
Last Updated : 18 Sep 2025 06:56 AM

நேபாள கலவரத்தின்போது மக்களை காப்பாற்றிய செந்தில் தொண்டமானுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பாராட்டு

சென்னை: நே​பாள கலவரத்​தில் சிக்​கிய மக்​களை காப்​பாற்​றிய இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வர் செந்​தில் தொண்​ட​மானுக்கு அரசி​யல் கட்சி தலை​வர்​கள் பாராட்டு தெரி​வித்​துள்​ளனர். நேபாள தலைநகர் காத்​மாண்​டு​வில் சமீபத்​தில் இளைஞர்​கள் நடத்​திய போராட்​டம் கலவர​மாக மாறியது. பல்​வேறு கட்​டிடங்​கள் தீவைத்து கொளுத்​தப்​பட்​டன.

காத்​மாண்​டு​வில் உள்ள தி ஹயாத் நட்​சத்​திர விடு​திக்​கும் போராட்​டக்​காரர்​கள் தீவைத்​து, அங்​குள்ள பொருட்​களை சூறை​யாடினர். இதற்​கிடையே, நேபாளத்​தில் நடை​பெறும் தொழிற்​சங்க மாநாட்​டில் பங்​கேற்​ப​தற்​காக இலங்கை தொழிலா​ளர் காங்​கிரஸ் தலை​வரும், கிழக்கு மாகாண முன்​னாள் ஆளுநரு​மான செந்​தில் தொண்​ட​மான் அங்கு தங்​கி​யிருந்த நிலை​யில், விடு​தி​யில் சிக்​கித் தவித்த 5 இந்​தி​யர்​களை காப்​பாற்​றி​யுள்​ளார்.

இதுதொடர்​பான செய்​தி​கள், வீடியோக்​கள் வலை​தளங்​களில் பரவிவரும் நிலை​யில், அவருக்கு பல்​வேறு அரசி​யல் தலை​வர்​களும் வாழ்த்து தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக பாஜக தலை​வர் நயி​னார் நாகேந்​திரன்: காத்​மாண்டு தி ஹயாத் நட்​சத்​திர விடு​தி​யில் தங்​கி​யிருந்த மக்​களை, ஆபத்​பாந்​தவ​னாக இருந்து காப்​பாற்றி உள்​ளார் செந்​தில் தொண்​ட​மான். கண்​ணில் பட்​ட​வர்​களை எல்​லாம் காப்​பாற்றி கரைசேர்த்த பிறகும்​கூட, இன்​னும் யாரேனும் இருக்கிறார்களா என, உயிரை பணயம் வைத்து அவர் தேடிச் செல்​லும் காட்​சி, உணர்ச்​சிவசப் பட வைக்​கிறது.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை: உயிருக்கு அச்​சுறுத்​தலான சூழ்​நிலை​யில், தன்​னலம் பாராது பலரது உயிரை காப்​பாற்​றிய செந்​தில் தொண்​ட​மானின் வீரம், தன்​னலமற்ற மனிதநே​யம் பாராட்​டத்​தக்​கது. அர்ப்​பணிப்பு உணர்​வோடு செயல்​படும் உங்​கள் பணி​கள் தொடர வாழ்த்​துகிறேன்.

முன்​னாள் முதல்​வர் ஓ.பன்​னீர்​செல்​வம்: செந்​தில் தொண்​ட​மான் தனது உயிரை துச்​சமென மதித்​து, பல சுற்​றுலா பயணி​களை காப்​பாற்​றி​யுள்​ளார் என்ற மனிதநேய செய்​தியை அறிந்து மகிழ்ச்​சி​யுற்​றேன். பொது வாழ்​வில் ஈடு​பட்​டிருப்​போர் எப்​படி செயல்பட வேண்​டும் என்​ப​தற்கு எடுத்​துக்​காட்​டாக அவரது பணி அமைந்​துள்​ளது.

பாமக தலை​வர் அன்​புமணி: விடு​தி​யில் சிக்கி தவிப்​பவர்​களை காப்​பாற்​று​வது மிக​வும் ஆபத்​தானது என தெரிந்​தும், தமது உயிரை பற்றி கவலைப்​ப​டா​மல் இந்​தி​யர்​களை காப்​பாற்றி வெளிக்​கொண்டு வந்த செந்​தில் தொண்​ட​மானின் துணிச்​சலும், ஆபத்​தில் உதவும் குண​மும் போற்​றத்​தக்​கவை.

அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடிவி தினகரன்: நேபாளத்​தில் நிகழ்ந்த வன்​முறை வெறி​யாட்​டத்​தால் ராணுவ கட்​டுப்​பாட்​டை​யும் இழந்த நிலை​யில், அங்கு இருப்​பவரும் நம்​மில் ஒரு​வரே என்ற எண்​ணத்​தில் பொதுநலத்​துடன் செயல்​பட்ட செந்​தில் தொண்​ட​ மானுக்கு நன்​றி, பா​ராட்​டு​கள்​. இவ்​வாறு ​ தெரிவித்​துள்​ளனர்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x