Published : 18 Sep 2025 06:47 AM
Last Updated : 18 Sep 2025 06:47 AM

ஓபிஎஸ், டிடிவி, சசிகலாவை அதிமுகவில் மட்டுமல்ல; கூட்டணியில் கூட சேர்க்க முடியாது: அமித் ஷாவிடம் இபிஎஸ் கூறியது என்ன?

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, முத்துராமலிங்கத் தேவருக்கு பாரத ரத்னா விருது கோரி மனு அளித்தார். உடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள்.

சென்னை: தமிழக சட்​டப்​பேரவை தேர்​தலில் ஓ.பன்​னீர்​செல்​வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோரை கட்​சி​யில் மட்​டுமல்ல கூட்​ட​ணி​யில்​கூட சேர்க்க முடி​யாது என்று மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித் ஷாவிடம் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி திட்​ட​வட்​ட​மாக தெரி​வித்​த​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

அதி​முக தொடர் தோல்​வியை சந்​தித்து வரும் நிலை​யில், கட்​சியி​லிருந்து வெளி​யேற்​றப்​பட்ட சசிகலா, ஓ.பன்​னீர்​செல்​வம், டிடிவி தினகரன் ஆகியோரை மீண்​டும் கட்​சி​யில் சேர்த்​தால் மட்​டுமே 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் அதி​முக கூட்​டணி வெற்றி பெற முடி​யும் என்று கடந்த ஓராண்​டாகவே முன்​னாள் அமைச்​சர் கே.ஏ.செங்​கோட்​டையன் உள்​ளிட்ட மூத்த தலை​வர்​கள் சிலர் பழனி​சாமி​யிடம் வலி​யுறுத்தி வந்​தனர். அதை பழனி​சாமி ஏற்​க​வில்​லை. இந்நிலையில், கடந்த் ஏபரல் மாதம், அதி​முக-பாஜக கூட்​ட​ணியை பழனி​சாமி​ முன்னிலையில் அமித் ஷா அறி​வித்​தார்.

கடந்த செப்​.5-ம் தேதி அதி​முக ஒருங்​கிணைப்​புக்கு செங்​கோட்​டையன், பழனி​சாமிக்கு 10 நாட்​கள் கெடு விதித்​தார். இதற்​காக அவருடைய மற்​றும் அவரது ஆதர​வாளர்​களின் கட்​சிப்​ப​தவி​கள் பறிக்​கப்​பட்​டன. மீண்​டும் டெல்லி சென்​று, அமித் ஷாவை செங்கோட்டையன் சந்​தித்தார். இதன்​தொடர்ச்​சி​யாக நேற்று முன்​தினம் டெல்லியில் அமித்ஷாவை பழனி​சாமியும் சந்​தித்​தார்.

இந்த சந்​திப்​பில், “செங்​கோட்​டையனின் கோரிக்கை நியாய​மாக தானே இருக்​கிறது. அதை ஏற்​றுக்​கொள்​வ​தில் உங்​களுக்கு என்ன சிரமம்” என்று பழனி​சாமி​யிடம் அமித்ஷா கேட்​ட​தாக​வும் அதற்கு பதில் அளித்த பழனி​சாமி, இணைப்​புக்கு சாத்​தி​யமே இல்​லை. அதி​முக ஆட்​சியை கவிழ்க்​கும் செயலில் ஈடு​பட்ட யாருக்​கும் அதி​முக​வில் இடமில்லை என தெரி​வித்​த​தாக​ கூறப்​படு​கிறது.

“அதி​முக​வில் சேர்த்​துக் கொள்​ளா​விட்​டாலும் பரவா​யில்​லை. பாஜக​வுக்கு ஒதுக்​கும் தொகு​தி​களில், உள்​ஒதுக்​கீ​டாக ஓபிஎஸ், தினகரன், சசிகலா ஆகியோ​ருக்கு வழங்​கு​வ​தில் உங்​களுக்கு ஏதேனும் ஆட்​சேபனை உள்​ள​தா” என கேட்​டதற்​கு, “அதி​முகவை அழிக்க நினைத்​தார்​கள் என்று தமிழகம் முழு​வதும் நான் பிரச்​சா​ரம் செய்து வரும் நிலை​யில், கட்​சியி​லிருந்து நீக்​கப்​பட்​ட​வர்​களுக்கு ஆதர​வாக அந்த தொகு​தி​களில் என்​னால் எப்​படி பிரச்​சா​ரம் செய்ய முடி​யும். எங்​கள் கட்சி தொண்​டர்​கள் என்னை என்ன நினைப்​பார்​கள். அது​வும் சாத்​தி​யமில்​லை.

சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஆகியோரை அதி​முக கூட்​ட​ணி​யில் கூட சேர்க்க முடி​யாது” என்று பழனி​சாமி பதில் அளித்​த​தாக கூறப்​படு​கிறது. பின்​னர், “அப்​படி எனில், தென் மாவட்​டங்​களில் அவர்​களுக்கு உள்ள வாக்கு வங்கி நமக்கு கிடைக்​காமல் போகும். இது திமுக வெற்​றிக்கு சாதக​மாக அமைந்​து​விடுமே. திமுக ஆட்​சியை அகற்​றும் நோக்​கத்​துக்கு இந்த முடிவு இடையூறாக இருக்​கா​தா” என்று அமித் ஷா கேட்​டுள்​ளார். அதற்​கு, “அவர்​களிடம் சொல்​லிக்​கொள்​ளும்​படி​யாக வாக்கு வங்கி இல்​லை.

முத்​து​ராமலிங்க தேவருக்கு பாரத ரத்னா விருது வழங்​கி​னால், அது நமது கூட்​ட​ணிக்கு மேலும் பலத்தை அளிக்​கும்” என்று பழனி​சாமி பதில் அளித்​த​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. சந்​திப்பை முடித்​துக் கொண்டு நேற்று சென்னை விமானம் நிலை​யம் வந்த பழனி​சாமி, வெளியே வராமல் அங்​கிருந்​த​படியே விமானம் மூலம் சேலம் சென்​றார்.

இதனால் பழனி​சாமியை வரவேற்க காத்​திருந்த தொண்​டர்​களும், அமித் ஷாவுட​னான சந்​திப்பு குறித்து கேள்வி எழுப்ப காத்​திருந்த செய்​தி​யாளர்​களும் ஏமாற்​றம் அடைந்​தனர். டெல்​லியி​லிருந்து பழனி​சாமி​யுடன் வந்த தம்​பிதுரை, வி​மான நிலை​யத்​திலிருந்து வெளியே வந்​த​போது, பழனி​சாமி-அமித் ஷா சந்​திப்பு குறித்து செய்​தி​யாளர்​கள்​ எழுப்​பிய கேள்விக்​கு பதில்​ அளிக்​காமல்​ சென்​றுவிட்​டார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x